தமிழ்நாட்டில் இனி தேசிய ஜனநாயகக் கூடடணி ஆட்சி தான்,
அதிமுக தலைமையில் ஆடசி இல்லை,
அதிமுக கூடடணிக்கட்சி மட்டுமே இது அமித்ஷா புதுக்கோட்டை பள்ளத்திவிடுதி பொதுக்கூட்டத்தில் பகிரங்கப்படுத்தியதுடன் தமிழ்நாடு தேர்தல் களம் இனி அதிமுக தலைமையில் இல்லை என்பதை மூன்றாம் முறையாக தெளிவு படுத்தியிருக்கும் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் நலமடன் சேர்ந்தது முதல் முப்பதாண்டு காலம் பிதாமகளாக ஒரு தனிமனிதப் பிராமணப் பெண் நடிகைமை வைத்து இயக்கி ஆட்சியில் அமர்த்திய பிதாமகன் முனைவர் ம. நடராஜன் மண்ணையார் மனைவி .வி கே.சசிக்கலா நடராஜனை செயல்படவிடாமல் அவரது மரணம் வரை தடுத்த மடாதிபதி உள்ளிட்ட சிலர் வரை அதிமுகவின் அரசியல் நகர்வுகள் மாறிப்போகக் காரணம் என்பதை அரசியல் அறிந்த பலரும் அறிவர்.
ஒன்று அதை அப்புறம் வழிநடததிய தாசில்தார் வேலை செய்து பின் அதே அலுவலகத்தில் பியூனாகக் கூட வேலை செம்யத் தயரான அடிமை குனம் கொணட பெரியகுளம் தேனீர் கடை உரிமையாளராகவே கடைசிவரை இருக்கும் தகுதியே இல்லாத ஓ. பன்னீர் செல்வமும் அதை பின்னர் கைப்பற்றிய ஊழல் செய்து மாட்டிக்கொண்ட மற்றும் கொடநாட்டில் நடந்த கொலைகள் மூலம் அடிமையாகவே சிக்கினாலும் ஆட்சியும், கட்சியும் தனக்கு மட்டுமே உரிமை எனற சுயநலவாதியான சிலுவம்பாளையத்து பழனிசாமியும் தான் அதிமுகவுக்கு அடக்கம் செய்ய இறுதியில் குழி வெட்டிக் காத்திருக்க டி. டி. வி தினகரன் அணி மடடுமே இந்த கவிழந்த அதிமுக கப்பலில் அமமுக என தனிக் கடடுமரம் மூலம் தப்பியவர் இந்த நிலையில் பழனிசாமியோ மற்றும் பன்னீரோ அவர்கள் குறித்து மதிப்பிட இந்தப் பாடல் ஒன்றே போதும். என்பது நமது கருத்து "உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது,......!
நீயும் (பாஜக + அதிமுக) நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது?.........உயர்ந்த இடத்தில்(முதல்வராக) இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் (காத்திருக்கும் கொடநாடு வழக்கு) நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை (சசிகலா) சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும்( OPS +EPS ) வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்....... உனைப் போலே அளவோடு உறவாட வேண்டும்....
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?... யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..! அதில் அர்த்தம் உள்ளது." என்பதே.
எந்த நிறுவனத்திலுமே விதைத்தவர் விலகிய பின்னர் அடுத்து அதிகாரத்துக்கு வருபவர்கள், வர விரும்புவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள விதைத்தவர்களின் ( எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா) என சாதனைகளைப் பேச மாட்டார்கள். தங்களால் விளைந்தது எனத்தான் பேசுவார்கள், பழனிசாமி போல தனது விழுதுகளைப் பேச வைப்பார்கள். விதைத்தவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் அவரது விலகலுக்குப்பின் விசுவாசத்தைத் தொடர்வார்கள் என அரசியலில் உறுதியாகச் சொல்ல முடியாது. அவ்வாறு விசுவாசமாக இருப்பவர்கள் காலப் போக்கில் ஒதுக்கப்படுவர். புதிய தலைமையை வாழ்த்தி மிகைப்படுத்தி விசுவாசத்தைக் காட்டினால் மட்டுமே அவர்களது வாழ்க்கைச் சக்கரம் வளமான நிலையில் தடையின்றி உருளும் என்ற நிதர்சனத்தை உணர்ந்தவர்கள்
புதிய தலைமையிடம் அதீத திறமைகளை, விதையையேத் தாங்கிப் பிடித்ததானக் கற்பனையையும் உருவாக்கி நம்புவார்கள், நம்பும்படியாக மற்றவர்களிடம் பிரசாரம் செய்வார்கள். இதனைத் தவிர்க்க முடியாது. சாதாரண நிறுவனங்களின் தலைமை மாற்றத்திலேயே இப்படியென்றால் ஒரு அரசியல் கட்சியின் அதுவும் ஆளும் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படும் போது இன்னமும் அதி தீவிரமாகவே இருக்கக் கூடும். அதனைத் தான் தமிழகம் அதிமுக பழனிச்சமி மூலம் இப்போது கண்டு கொண்டிருக்கிறது. இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆயிரம் இருப்பினும், அசலுக்கு (எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இன்கேமரா சசிகலா நடராஜன்) மாற்றாக நகல் என்றுமே ஆக முடியாது. அசல் அசல் தான், நகல் நகல் தான்... என்னமோ போடா மாதவா பப்ளிக் ஜஸ்டிஸ் மூலம் சொல்லனும்னு தோணுச்சு.. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் "த.வெ.க கரூர் 27,செப்டம்பர்,2025- ஆம் தேதி கூட்டத்தில் 41 பேர் இறந்ததற்கு முழுக் காரணம் V.செந்தில்பாலாஜி தான்.அவரைப் பாதுகாக்கவே மு. க.ஸ்டாலின் அன்று இரவே கரூருக்கு விரைந்தார். என புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் வைத்த குற்றச்சாட்டு !
பாஜகவின் அரசியல் அடுத்த நகர்வு மற்றும் அண்ணாமலைக்கு கூட்டத்தில் கிடைத்த வரவேற்பு அவர் பாஜகவில் இருந்து தற்காலிகமாக வெளியேற வேண்டும்.. விஜய்யும் அண்ணாமலையும் தினகரனும், பிரேமலதாவம், அன்புமணியும் கூட்டணி சேர வேண்டும்.. இவர்கள் சேர்ந்தால் மாற்றம் உறுதி.. அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கு, விஜய்யின் ரசிகர் படைக் கூட்டம் திராவிட கட்சிகளின் முடிவுக்கு ஆரம்பமாகிவிடும்.. ஆனால் அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியே வருவாரா? அப்படியே வந்தாலும் விஜய் உள்ளிட்டோருடன் கூடடணி சேர்வாரா?
தமிழ்நாடு அரசியல் களத்தின் 2026 ஆம் ஆண் டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் யூகமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கணித்ததை ஐபிடிஎஸ் (IPTS) நிறுவனத்தின் தலைவர் திருநாவுக்கரசு வழங்கிய ஆய்வு முடிவுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகள் குறித்த விரிவான பப்ளிக் ஜஸ்டிஸ் கட்டுரை :
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 81,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட முதல் ஆய்வு, தற்போதைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது.
குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு ‘கிங் மேக்கராக’ உருவெடுக்கப் போவது யார் என்ற விவாதத்தில், அண்ணாமலை மற்றும் விஜய் ஆகிய இருவரின் பெயர்களும் முன்னிலையில் உள்ளன. பப்ளிக் ஜஸ்டிஸ் பார்வை மற்றும் சகோதரர் திருநாவுக்கரசு கணிப்புப்படி, அண்ணாமலை தனது பதவியில் நீடித்தாலோ அல்லது ஒரு தனித்துவமான முடிவை எடுத்தாலோ, அவரே 2026-ன் அதிகார மையத்தை தீர்மானிப்பவராக இருப்பார். அதே சமயம், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ வாக்குகளை கணிசமாகவே பிரிக்கும் ஒரு காரணியாக இருக்குமே தவிர, கூட்டணி இல்லாமல் தனித்து ஆட்சியை பிடிக்கும் இடத்திற்கு இன்னும் வரவில்லை என்பது இந்த ஆய்வின் ஒரு கசப்பான உண்மையாகப் பார்க்கப்படுகிறது.
மண்டல வாரியான முடிவுகளைப் பொறுத்தவரை, கோயம்பத்தூர் (கொங்கு)மண்டலத்தில் அதிமுகவின் கோட்டை மெல்ல சரிவதையும், அங்கு மாற்று தலைமைகளுக்கான வரவேற்பு அதிகரிப்பதையும், பாஜகவின் வளர்ச்சி யை ஆய்வுகள் காட்டுகின்றன. தெற்கு மண்டலத்தில் பலம் கொண்ட ஜாதி ரீதியான வாக்குகள் சிதறுவதும், வடக்கு மண்டலத்தில் பாமக மற்றும் விசிக-வின் வாக்கு வங்கியில் முனபு தேமுதிக போல தற்போது விஜய்யின் தவெக ஊடுருவுவதும் கள நிலவரமாகவே உள்ளது.
குறிப்பாக, நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் இளைய தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் திராவிடக் கட்சி கொள்கைகள் மீதான பிடிப்பு குறைந்து வருவதால், 2026-ஆம் ஆண்டில் ஒரு மும்முனை அல்லது நான்குமுனைப் போட்டி என்பது தவிர்க்க முடியாததாகிறது. இது திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டு காலத்து ஆதிக்கத்திற்கு ஒரு மாற்று சவாலாகவே அமையக்கூடும்.
அண்ணாமலை மற்றும் விஜய் ஆகிய இரு துருவங்களும் ஒன்றிணைந்தால் அல்லது ஒரே நேர்க்கோட்டில் பயணித்தால், அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே மாறும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அண்ணாமலைக்கு இருக்கும் ‘எதிர்க்கட்சித் தலைவர்’ பிம்பமும், விஜய்க்கு இருக்கும் ‘மக்கள் செல்வாக்கும்’ இணைந்தால், விஜய் ஆளுமை கொண்ட மக்கள் முதல்வர் அது ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடும். ஆனால், விஜய்யின் தயக்கம் மற்றும் அண்ணாமலையின் கட்சி ரீதியான கட்டுப்பாடுகள் இந்த இணைப்பை தற்போது சிக்கலாக்குகின்றன. இருப்பினும், 60 சதவீதம் மக்கள் வாரிசு அரசியலை வெறுப்பதாகக் கூறியிருப்பது, இந்த புதிய சக்திகளுக்கு ஒரு சாதகமான களத்தை உருவாக்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் துணை முதலமைச்சர் பதவி மற்றும் வாரிசு அரசியல் குறித்த மக்களின் எதிர்மறையான பார்வைகள், வரும் தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். அவர் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை அதே சமயம், எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுகவில் நிலவும் உட்கட்சி அதிருப்தி, எதிர்க்கட்சி ஓட்டுக்களை சிதறடிக்கிறது. “நாங்கள் என்ன வேடிக்கை பார்க்கும் கூட்டமா?” என்று அதிமுக கேட்டாலும், கள நிலவரம் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதே திருநாவுக்கரசு போன்ற நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அண்ணாமலை இல்லாத பாஜக என்பது தமிழகத்தில் பூஜ்யமாகிவிடும் என்ற 54 சதவீதம் உள்ள மக்களின் கருத்து, அவரது தனிப்பட்ட செல்வாக்கை உறுதிப்படுத்துகிறது.
விஜய்யின் தவெக கட்சி, திமுக கூட்டணியிலிருந்து குறிப்பாக 13 சதவீதம் வாக்குகளை தன் பக்கம் இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விசிக போன்ற தோழமை கட்சிகளுக்கும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், விஜய் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக வீதியில் இறங்கி போராடாதது ஒரு பெரிய பலவீனமாக மக்களால் பார்க்கப்படுகிறது. அரசியல் என்பது மேடை பேச்சு மட்டுமல்ல, அது ஒரு களப்பணி என்பதை விஜய் உணராதவரை, அவர் ஒரு ‘வாக்குகளை பிரிப்பவராகவே’ நீடிப்பார். இருப்பினும், 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் அண்ணாமலை மற்றும் விஜய் ஆகிய இருவரை சுற்றியே அதிகம் சுழலும் என்பதில் சந்தேகமில்லை. எடப்பாடி கே. பழனிசாமி முதல்வர் வேடபாளர் இல்லை என்பதில் பாஜகவின் உறுதி நேற்று வெளிப்படையாகவே தெரிந்தது.
முடிவாக, தமிழக அரசியல் ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. திராவிட இயக்கங்களின் வீழ்ச்சி என்பது ஒரே நாளில் நடந்து விடாது என்றாலும், 2026 ஆம் ஆண்டு அதற்கான தொடக்கமாக இருக்கும் என ஐபிடிஎஸ் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. அண்ணாமலையின் அதிரடி மற்றும் விஜய்யின் மக்கள் செல்வாக்கு ஆகிய இரண்டும் 2026-ன் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கும். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்; அந்த மாற்றத்தை துணிச்சலாக முன்னெடுக்கும் தலைவருக்கே தமிழ்நாட்டில் செங்கோல் வசப்படும். இதில் பொதுநீதி யாதெனில் :-பொதுவாழ்க்கையில் சுயநலம் மட்டுமே மிகுதியாகக் கொண்ட எவராலும் மக்களை வெல்ல முடியாது. மக்களை ஏமாற்றி பணத்தை வைத்து வென்றாலும் அதே மக்கள் மீண்டும் வீழ்த்திவிடுவார்கள்!சுயநலமற்ற மக்கள் தலைவர்கள் ஓமந்தூரார், கு காமராஜர், M.G.இராமசந்திரன், வரிசையில் இன்றுவரை யாருமில்லாததே தமிழ்நாட்டின் சாபக்கேடு!



















































கருத்துகள்