முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

5-OTT தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை

ஆபாசமான படக்காட்சிகளை ஒளிபரப்பியதாகத் தெரிவித்து , 5  OTT தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்தது.





உள்ளடக்க ஒழுங்குமுறை விதிகளை மீறியதாகக் கூறி MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu ஆகிய ஐந்து தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டது. குறிப்பாக, சந்தாதாரர்களைக் கவர்வதற்காக அநாகரீகமான மற்றும் வக்கிரமான பல காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.




இந்தத் தளங்கள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளையும் உடனடியாக முடக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ், ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு இத்தகைய சிறிய அளவிலான ஓடிடி தளங்களைக் கண்காணிக்கிறது.


ஏற்கனவே 'உல்லு' மற்றும் 'ஆல்ட் பாலாஜி' போன்ற 25 தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் புதிய பட்டியல் வெளியாகியது. டிஜிட்டல் ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் , மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சகம் மீண்டும் எச்சரித்தது. இந்த நடவடிக்கை டிஜிட்டல் தளங்களில் தரமான மற்றும் ஆரோக்கியமான உள்ளடக்கங்களை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்தியாவில் செயல்பட்ட OTT தளங்களான Dreams Films, Voovi, Yessma, Yessma, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharam, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix, Prime Play ஆகியவை தடை செய்யப்பட்டன.

அதோடு 19 இணையதளங்கள், 10 செயலிகள் (7 கூகுள் பிளே ஸ்டோர்ஸ் , 3 ஆப்பிள் ஆப் ஸ்டோர்) மற்றும் 57 சமூக வலைதளக் கணக்குகளும் முடக்கப்பட்டன.


இதில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட OTT தளத்தின் செயலி கூகுள் பிளேஸ்டோரில் 1 கோடி முறை  பதிவிறக்கம் செய்து பார்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 செயலிகள் 50 லட்சம் முறை பதிவிறக்கம் செய்து பார்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 ன் பிரிவு 67 மற்றும் 2008 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிரிவு 67 ஏ, அடிப்படையில் தற்போது இந்த OTT தளங்கள் மற்றும் செயலிகள் தடை செய்யப்பட்டன. இந்த சட்டப்பிரிவுகளின் படி, ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட படங்களை வெளியிடுதல், மோசமான வகையில் ஒருவரை சித்தரித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடும் எந்த ஒரு டிஜிட்டல் தளத்தையும் அரசு தடை செய்யலாம்.

மேலும், மேற்கூறப்பட்டுள்ள தளங்களில் பெண்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அவர்களை தவறாக சித்தரித்துள்ளனர். இது பெண்களின் அநாகரீகமான பிரதிநிதித்துவச் (தடை) சட்டம், 1986 - ன் பிரிவு 4-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என சைபர் குற்றம் குறித்து சட்ட வல்லுநர் கருத்து,

இந்தச் சட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட OTT தளங்கள் மற்றும் செயலிகள், சமூக வலைதளப் பக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளது, ஒரு ஆபாச ஓடிடி தளத்தை லட்சக்கணக்கான நபர்கள் பார்த்த பின் தான் அதன் மீது நடவடிக்கை எடுக்கிறோம். அதற்குப் பதிலாக OTT தளங்கள் மற்றும் செயலிகளை கட்டுப்படுத்தும் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டால் வருமுன் காக்கலாம் 

இந்தத் தணிக்கை அமைப்பு மூலம் இந்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் செயலிகள் மற்றும் OTT தளங்களுக்கு மட்டுமே கூகுள் போன்ற தளங்கள் இந்தியாவிற்குள் அனுமதி தர வேண்டும் எனும் விதியை உருவாக்கினால் மட்டுமே எதிர்காலத்தில் பிரச்னைகளைக் குறைக்க முடியும் என்பது சமூக நலன் காக்கும் மக்கள் பார்வை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...