முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் அறிவிப்பு தள்ளிப்போகும் நிலை தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், 2026  ஏப்ரல் மாதத்தில் நடக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்கு தள்ளிப்போகலாம்

மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருந்த தேர்தல் அறிவிப்பு அட்டவணை வெளியீடு, மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போகும் எனத் தகவல்  இது தொடர்பாக ஆலோசனை நடத்த, “தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர் அலுவலர்கள் குழு, சென்னை வந்தது.தமிழ்நாடு பாண்டிச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளின் பதவிக்காலம், 2026 மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் மக்கள் புதிய அரசுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஐந்து மாநிலங்களில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் வாயிலாக, தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் உட்பட, 5 மாநிலங்களிலுள்ள 824 சட்டசபைத் தொகுதிகளுக்கும், 5 கட்டமாகத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 714 ஐ.ஏ.எஸ்., கொண்ட தேர்தல் பணி அதிகாரிகளும், பாதுகாப்புப் பணிக்கு 233 ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், 497 செலவினப் பார்வையாளர்களும், தேர்தல் ஆணையரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் , 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி


சட்டசபைத் தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதியில் நடந்தது. தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் உள்ள கோடைகாலம். மே மாதம் அக்கினி வெயில் சீசன் துவங்கும். பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெப்பம் அதிகமாகும்.கடந்த 2016 ஆம் ண்டு மே மாதம் கடுமையான வெயில் காலத்தில் சட்டசபை தேர்தல் நடந்ததால், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பார்வையாளர்கள், வாக்காளர்கள் எனப் பலரும் அவதிக்கு உள்ளாகினர். எனவே, வெயில் தீவிரம் அடைவதற்கு முன் தேர்தல் நடத்த வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்று, 2021, ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடந்தது. இம்முறை, மீண்டும் மே மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல். தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட 15 உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சென்னை வருகை தந்தனர்.


 28 ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதுடன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள் தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகின்றனர் . அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்க உள்ளனர்.

தமிழ்நாடு பல சட்டசபை தேர்தல்கள், மே மாதம் தான் நடந்துள்ளன. கொரோனா காலம் என்பதால், 2021 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் அந்த ஆண்டு முன் கூட்டியே ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. எனவே, வெயிலை வைத்து தேர்தல் தேதியை முடிவு செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. சில மாநிலங்களில் 5 கட்டமாகத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே தெரியவரும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் கருத்துக்கள் அடிப் படையில், தேர்தல் தேதியை ஆணையம் முடிவு செய்யும்.இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருந்த தேர்தல் அறிவிப்பு அட்டவணை, இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போடப்படுகிறது.

இவ்வாறு ஆணையத்தில் பேசப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...