தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், 2026 ஏப்ரல் மாதத்தில் நடக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்கு தள்ளிப்போகலாம்
மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருந்த தேர்தல் அறிவிப்பு அட்டவணை வெளியீடு, மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போகும் எனத் தகவல் இது தொடர்பாக ஆலோசனை நடத்த, “தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர் அலுவலர்கள் குழு, சென்னை வந்தது.தமிழ்நாடு பாண்டிச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளின் பதவிக்காலம், 2026 மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் மக்கள் புதிய அரசுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.ஐந்து மாநிலங்களில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் வாயிலாக, தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் உட்பட, 5 மாநிலங்களிலுள்ள 824 சட்டசபைத் தொகுதிகளுக்கும், 5 கட்டமாகத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 714 ஐ.ஏ.எஸ்., கொண்ட தேர்தல் பணி அதிகாரிகளும், பாதுகாப்புப் பணிக்கு 233 ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், 497 செலவினப் பார்வையாளர்களும், தேர்தல் ஆணையரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் , 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி
சட்டசபைத் தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதியில் நடந்தது. தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் உள்ள கோடைகாலம். மே மாதம் அக்கினி வெயில் சீசன் துவங்கும். பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெப்பம் அதிகமாகும்.கடந்த 2016 ஆம் ண்டு மே மாதம் கடுமையான வெயில் காலத்தில் சட்டசபை தேர்தல் நடந்ததால், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பார்வையாளர்கள், வாக்காளர்கள் எனப் பலரும் அவதிக்கு உள்ளாகினர். எனவே, வெயில் தீவிரம் அடைவதற்கு முன் தேர்தல் நடத்த வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்று, 2021, ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடந்தது. இம்முறை, மீண்டும் மே மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல். தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட 15 உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சென்னை வருகை தந்தனர்.
28 ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதுடன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள் தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகின்றனர் . அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்க உள்ளனர்.
தமிழ்நாடு பல சட்டசபை தேர்தல்கள், மே மாதம் தான் நடந்துள்ளன. கொரோனா காலம் என்பதால், 2021 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் அந்த ஆண்டு முன் கூட்டியே ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. எனவே, வெயிலை வைத்து தேர்தல் தேதியை முடிவு செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. சில மாநிலங்களில் 5 கட்டமாகத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே தெரியவரும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் கருத்துக்கள் அடிப் படையில், தேர்தல் தேதியை ஆணையம் முடிவு செய்யும்.இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருந்த தேர்தல் அறிவிப்பு அட்டவணை, இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போடப்படுகிறது.
இவ்வாறு ஆணையத்தில் பேசப்படுகிறது.






கருத்துகள்