முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் மன்னிப்புக் கேட்ட NCERT. மற்றும் CBSE உறுவாக்கிய கணித வினாத்தாளும்

உச்ச நீதிமன்றத்தின்  கண்டனம் மன்னிப்புக் கேட்ட NCERT.



8ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு; அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்.

நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடப்புத்தகம் வழங்கப்படும் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து NCERT மன்னிப்புக் கேட்டு அறிக்கை. 




சமூக அறிவியல் பாடப்புத்தகம் பகுதி 2

NCERT தற்போதுள்ள நடைமுறையின்படி, 24-02-2026 அன்று 8 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகமான எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியோண்ட், தொகுதி II ஐ NCERT வெளியிட்டது. பாடப்புத்தகத்தைப் பெறும்போது, ​​"நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு" (பக்கம் 125 முதல் 142 வரை ) என்ற தலைப்பில் சில பொருத்தமற்ற உரைகள் மற்றும் தீர்ப்பின் பிழைகள் கவனக்குறைவாக அத்தியாயம் எண் 4-ல் ஊடுருவியிருப்பது (எழுதியவர் தவறு அச்சடித்தவர் தவறு இல்லாமல் எப்படி ஊடுருவும் ) கவனிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையும் (கல்வி அமைச்சகம்) இதேபோன்ற அவதானிப்பை மேற்கொண்டது மற்றும் மறு உத்தரவு வரும் வரை இந்தப் பாடப்புத்தகத்தின் விநியோகம் கடுமையாக நிறுத்தி வைக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நீதித்துறையை மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறது மற்றும் இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்துவதாகவும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் கருதுகிறது. மேற்கூறிய பிழை முற்றிலும் தற்செயலானது மற்றும் NCERT அந்த அத்தியாயத்தில் பொருத்தமற்ற விஷயங்களைச் சேர்த்ததற்கு வருந்துகிறது.


புதிய பாடப்புத்தகங்களின் நோக்கம் அரசியலமைப்பு கல்வியறிவு, நிறுவன மரியாதை மற்றும் மாணவர்களிடையே ஜனநாயக பங்கேற்பு பற்றிய தகவலறிந்த புரிதலை வலுப்படுத்துவதாகும் என்று NCERT மீண்டும் வலியுறுத்துகிறது. எந்தவொரு அரசியலமைப்பு அமைப்பின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கவோ அல்லது குறைக்கவோ நோக்கம் இல்லை. அதன் தொடர்ச்சியான மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, NCERT ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு திறந்தே உள்ளது. எனவே, அது தேவைக்கேற்ப உரிய அதிகாரியின் ஆலோசனையுடன் மீண்டும் எழுதப்பட்டு, 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி அமர்வு தொடங்கும் போது 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும்.

NCERT, இந்தத் தீர்ப்பின் பிழைக்கு மீண்டும் ஒருமுறை வருந்துகிறது மற்றும் நிறுவனப் புனிதம் மற்றும் மரியாதைக்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான எங்கள் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தும் போது மன்னிப்பு கேட்கிறது. என தெரிவித்துள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கணிதத்தில் கடினமான வினாத்தாள் தவிக்கும் மாணவர்களுக்கு கிரேஸ் மார்க் கிடைக்குமா?



சி.பி.எஸ்.இ வினாத்தாள்கள் கடினமாக இருந்ததால் மாணவர்கள் 'கிரேஸ் மார்க்' கோரி வரும் நிலையில், விதிகளின்படி சாதகமான முடிவை வாரியம் எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் எழுந்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தி வரும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இந்த ஆண்டு மாணவர்களிடையே பெரும் விவாதத்தையும் மிகந்பெரிய கவலையையும் தமிழ்நாட்டில் மட்டும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, வினாத்தாள்களின் கடினத்தன்மை குறித்து சமூக வலைதளங்களில் எழுந்துள்ள புகார்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஒருமித்த குரலாக ஒலித்து வருகிறது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சவாலாக இருந்ததால், வாரியம் 'கிரேஸ் மார்க்' (சலுகை மதிப்பெண்கள்) வழங்க வேண்டும் மற்றும் விடைத்தாள்களைத் திருத்தும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்தச் சர்ச்சையின் தொடக்கப்புள்ளியாக 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு அமைந்தது. சில வினாத்தாள்கள் எளிமையாக இருந்த அதே வேளையில், மற்ற சில செட்களில் கேட்கப்பட்ட கேள்விகள் 'JEE' போன்ற நுழைவுத்தேர்வு தரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 12-ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு மாணவர்களை மேலும் நிலைகுலையச் செய்தது. வெவ்வேறு வினாத்தாள் தொகுப்புகளுக்கு இடையே சமமான கடினத்தன்மை பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் முன்வைக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரசாந்த் கிராட் போன்ற பிரபலமான கல்வியாளர்கள் பொதுநல மனுவை நீதிமன்றம் மூலம் தாக்கல் செய்யவும் முன்வந்துள்ளனர்.

இதுவரை CBSE வாரியம் கிரேஸ் மதிப்பெண்கள் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், பொதுவாக சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மாணவர்களுக்குச் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம். ஒரு மாணவர் தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையான 33 சதவீதம் மதிப்பெண்ணைப் பெற வெறும் 1 அல்லது 2 மதிப்பெண்கள் மட்டுமே தேவைப்படும் பட்சத்தில், வாரியம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மாணவரைத் தேர்ச்சி பெற வைக்கலாம்.

மேலும், வினாத்தாளில் அச்சுப் பிழைகள் இருந்தாலோ, தவறான தகவல்கள் அல்லது தவறான விடைக் குறிப்புகள் இடம் பெற்றிருந்தாலோ, சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படுவது நடைமுறை. பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலோ அல்லது வினாத்தாள் மிகவும் நீளமாக இருந்து மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை எழுதி முடிக்க முடியாமல் போனாலோ, CBSE வாரியம் இது குறித்துப் பரிசீலிக்கும்.பல்வேறு செட்களுக்கு இடையே உள்ள கடினத்தன்மையைச் சமன் செய்ய 'மாடரேஷன்' என்ற முறையை CBSE வாரியம் கையாள வாய்ப்புள்ளது. இதன் மூலம் கடினமான வினாத்தாள் தொகுப்பை எதிர்கொண்ட மாணவர்களுக்குச் சமமான நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும். தற்போதைய நிலையில், மாணவர்களின் நலன் கருதி CBSE வாரியம் ஒரு சாதகமான முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதிக் காத்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இந்த ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (OSM) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியானதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் கவலையும் ஏற்பட்டுள்ளது.

அது என்ன இந்தப் புதிய மாற்றம்?

இதுவரை ஆசிரியர்கள் விடைத்தாள்களை கையில் வைத்து பேனா மூலம் திருத்தி வந்தனர். ஆனால், இனிமேல் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு, கணினித் திரையில் ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படும். அதே சமயம், 10-ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள்கள் இந்த ஆண்டு வழக்கமான முறையிலேயே திருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஏன் அச்சப்படுகிறார்கள்?

தேர்வு நெருங்கும் நேரத்தில் இத்தகைய அறிவிப்பு வெளியானது மாணவர்களுக்கு பெரும் மனஅழுத்தத்தைக் கொடுத்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூறுகையில், "எழுதும் முறையில் மாற்றம் இல்லை என்றாலும், கடைசி நேரத்தில் அறிவிக்கப்படும் இத்தகைய மாற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வரைபடங்களை விடைத்தாளின் இறுதியில் தான் இணைக்க வேண்டும் என்றும், விடைகளை வரிசைப்படி தான் எழுத வேண்டும் என்றும் திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது பாரபட்சமானது," என்று வருத்தம் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநில மாணவர்கள் கூறுகையில், "ஏற்கனவே பாடத்திட்டச் சுமை, மாதிரித் தேர்வுகள் என பல அழுத்தங்கள் இருக்கும்போது, முன்னதாகவே சொல்லாமல் இப்போது சொல்வது ஏன்?" எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை ஸ்கேன் செய்யும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் தங்கள் மதிப்பெண்கள் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் மாணவர்கள் மத்தியில் உள்ளது. ஆசிரியர்கள் இந்த மாற்றத்தை கலவையான உணர்வுகளுடன் பார்க்கின்றனர். சில ஆசிரியர்கள் இதனை வரவேற்கின்றனர். "கையால் திருத்தும்போது மதிப்பெண்களைக் கூட்டுவதில் (Totaling) சில நேரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. ஆனால், கணினி முறையில் ஒவ்வொரு கேள்விக்கும் மதிப்பெண் வழங்காமல் அடுத்த பக்கத்திற்குச் செல்ல முடியாது என்பதால் தவறுகள் குறைய வாய்ப்புள்ளது," என்கின்றனர்.

இருப்பினும், இணையதள வசதி மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இந்த முறை சவாலாக இருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், கணினித் திரையைப் பார்த்து நீண்ட நேரம் திருத்துவது கண்களுக்குச் சோர்வை ஏற்படுத்தும் என்றும், மதிப்பீடு செய்யும் கால அளவு ஒரு அளவுகோலாக மாற்றப்படுமோ என்றும் கவலைப்படுகின்றனர்.

இதற்கு CBSE விளக்கம் இந்த மாற்றங்கள் குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், "இது ஒரு பாதுகாப்பான பயணம் போன்றது. விடைத்தாள்கள் திருத்தப்படும் வேகத்தை அதிகரிக்கவும், பிழையில்லாத முடிவுகளை வெளியிடவும் இந்த முறை உதவும். ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார். விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்படும் என்பதால் மாணவர்கள் வரிசைப்படி விடைகளை எழுத அறிவுறுத்தப்படுகிறார்கள். வரைபடங்கள் மற்றும் கூடுதல் தாள்களை விடைத்தாளின் இறுதியில் தெளிவாக இணைக்க வேண்டும். கூடுதல் கேள்விகளுக்கு விடை அளித்தால், அதில் எதற்கு அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதுவே கணக்கில் கொள்ளப்படும்.

ஏறத்தாழ 18.5 லட்சம் மாணவர்கள் எழுதும் ஒரு கோடிக்கும் அதிகமான விடைத்தாள்களை இந்த முறையில் மதிப்பீடு செய்ய CBSE திட்டமிட்டுள்ளது. இந்த டிஜிட்டல் மாற்றம் பிழையில்லாத முடிவுகளைத் தருமா அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாணவர்களின் ஒரே வேண்டுகோள் இது தான்: "மாற்றங்களை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் தேர்வு நேரத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் இத்தகைய அதிர்ச்சிகளைக் கொடுக்காதீர்கள்!" என்பது தான் அது மேலும் இதில் பொது நீதி யாதெனில் :- மாணவர்களில் மூன்று விதம் உடனே புரிந்து கொள்ளும் எந்த வினாவுக்கும் பதில் தரும் மேடடுக்குடி கற்பூரப் புத்தி கொண்டவர்கள், மற்றும் இரண்டாவது ரகம் எதை படித்தார்களோ அதை மடடுமே நினைவில் வைத்து எழுதம் பெட்ரோமாக்ஸ் லைட் புத்தி கொண்ட மாணவர்கள், மூன்றாவது ரகம் என்ன படித்தாலும் நினைவுக்கு கொண்டு வர காலதாமதம் செயயும் டியூப்லைட் புத்தி கொண்ட மாணவர்கள் ஆகவே மொத்த மக்கள் தொகையில் 3 சதவீதம் உள்ள கற்பூரப் புத்தி கொண்ட மாணவர்களுக்காக தயாரித்த வினாத்தாள் 97 சதவீதம் உள்ள மக்களின் பிள்ளைகளை பழிவாஙகிவிடக்கூடாது என்பதே பலரது கவலை,  அரசு என்பது 100 சதவீதம் உள்ள மக்களுக்கானது என்ற நிலையை உறுவாக்க CBSE தேர்வு விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுததுறை முடிவெடுக்க வேண்டும்  என்பதே .அமைச்சர் தர்மேந்திர பிரதான். இணை அமைச்சர்களாக சஞ்சய் ஷாம்ராவ், இராஜ்குமார் ரஞ்சன் சிங், அன்னபூர்ணா தேவி யாதவ் மற்றும் சுபாசு சர்க்கார் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...