மூன்றாவதாக விடுபட்ட 17
தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி.சந்தானகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் ஏற்கெனவே 150 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது.
கூட்டணிக் கட்சிகளுக்கு 67 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சென்னையில் உள்ள தொகுதிகள் உள்ளிட்ட 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியானது. அதிமுக 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்:
ஆயிரம் விளக்கு - முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அண்ணாநகர் - முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஆதிராஜாராம், திட்டக்குடி (தனி) - முருகுமாறன், துறைமுகம் - ராயபுரம் ஆர்.மனோ, விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி, தியாகராய நகர் - சத்தியநாராயணன், வேளச்சேரி - அசோக், சோழிங்கநல்லூர் - கே. பி. கந்தன், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஆர்.எஸ்.ராஜேஷ், வில்லிவாக்கம் - எஸ்.ஆர்.விஜயகுமார், திருச்சுழி - இராஜவர்மன், ஆலந்தூர் - சரவணன், கொளத்தூர் - சந்தான கிருஷ்ணன், திரு.வி.க நகர் (தனி) - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் (கூட்டணி) எழும்பூர் (தனி) - அபிஷேக் ரங்கசாமி, ஆலங்குடி - விமல் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இனி பாஜக பெற்ற 27 தொகுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் காங்கிரஸ் கட்சி பெற்ற 28 வேட்பாளர் பட்டியல் டெல்லி வெளியிடும்
விசிக வேட்பாளர் பட்டியல் வந்ததில் காட்டுமன்னார்கோயில் (தனி) திருமாவளவன், திண்டிவனம்(தனி)- வன்னி அரசு, செய்யூர்(தனி)- சிந்தனைச்செல்வன், பண்ருட்டி- அப்துல் ரகுமான், பெரியகுளம்(தனி)- ஆற்றலரசு (எ) சக்திவேல், கள்ளக்குறிச்சி(தனி)-கு.மாலதி, இவர் திருமாவளவன் அக்கா காலமான பானுமதியின் மகளாவார்
அரக்கோணம் (தனி)- எழில் கரோலின் முன்னாள் பாமக அமைச்சர் எழில்மலை மகளாவார் , திருப்போரூர்-பன்னீர்தாஸ். இதில் பழைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி, பாபு உள்ளிட்ட பலர் இல்லை. வன்னியரசு தாய் மண் இதழ் ஆரம்பித்த பிறகு தன் மனைவியுடன் பணியில் சேருகிறார். அதற்கு முன்பு போலீஸ் செய்தி என்ற பத்திரிகையில் இருந்தார். அதற்கு முன் கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர். அதேபோல அதிமுக கூட்டணியில் நிராகரித்த தனியாகப் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேடபாளர்கள்
மற்றும் வி. கே.சசிகலா நடராஜன் அறிவித்த அஇபுதமமுக கட்சி வேடபாளர்கள் பட்டியல்
வந்துள்ளது, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சத்திரிய சான்றோர் படை கட்சி நிறுவனர் பணமோசடிக் குற்றம் செய்து சிறையில் உள்ள நகை ஹரி நாடார் சென்னை மத்திய புழல் சிறையில் இருந்து சிறையில் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று முகவர் மூலம் ஆலங்குளம் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.





















கருத்துகள்