திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அந்த தொகுதிகள் எவை எவை என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பழனி, கந்தர்வக்கோட்டை, பத்மநாபபுரம், திருவொற்றியூர் மற்றும் கீழ்வேளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் சிபிஐஎம் மாநிலக் குழு ஈடுபட்டது.
இந்நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பழனி - என் பாண்டி, கந்தர்வக்கோட்டை - எம். சின்னதுரை, பத்மநாபபுரம் - ஆர். செல்லசுவாமி, திருவொற்றியூர் - எல். சுந்தரராஜன், கீழ்வேளூர் - டி. லதா ஆகியோரை வேட்பாளர்களாக என சிபிஎம் அறிவித்துள்ளது.
கந்தர்வகோட்டை தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ ஆக உள்ள சின்னதுரைக்கு அதே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 4 தொகுதிகளிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அஅதேபோல திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில். தளி, திருத்துறைப்பூண்டி (தனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி) என ஒதுக்கீடு
செய்யப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.வேட்பாளர்கள் விவரம்:- தளி - ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி (தனி) - மாரிமுத்து, திருப்பூர் வடக்கு - ரவி, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - மகாலிங்கம், பவானிசாகர் (தனி) - சுந்தரம், உள்ளிட்ட ஐந்து வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. மேலும் பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் அறிவிப்பு சேலம் மேற்கு இரா. அருள், கும்பகோணம் ம கா. ஸ்டாலின், விருத்தாசலம் E K சுரேஷ், வந்தவாசி முரளி சங்கர், மயிலாடுதுறை பாக்கம் சக்திவேல், என முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு வந்துள்ளது. மேலும் ஜி. கே. மணி மகன் தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கம் செய்தார் நிறுவனர்.
இந்த நிலையில் கூட்டணி வைத்த வி. கே. சசிகலா நடராஜன் தரப்பு அஇபதமமுக சார்பில் மயிலாடுதுறை வேட்பாளர் அறிவித்துள்ளார். அதேபோல போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளர் அஇபுமமுக வேட்பாளர் பழனி என். பத்மநாபன் இவர் அணைத்து நாயுடு, நாயக்கர் சமூகம் சார்ந்த வாக்குகளை மையப்படுத்தி போட்டியிடுகிறார்,













கருத்துகள்