ரூபாய் 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகார் விசாரணை உயர்நீதிமன்றம் CBI க்கு மாற்றியது.
முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்திப்பு பார்த்தோம். பதட்டம் தெரிகிறது. அவர் பொய் சொல்லலாம் ..ஆனால் ஏக்கர் கணக்கில் எல்லாம் பொய் சொல்ல கூடாது. நடந்த 397 கோடி ட்ரான்ஸ்பார்மர் ஊழல் என்ன ? இந்த வீடியோவை பாருங்கள் ! அவரது பத்திரிக்கை சந்திப்பிற்கு தனியே ஒரு வீடியோ பதில் வெளியிடப்படும்! எனத் தகவல் வருகிறது.
அறப்போரின் இந்த ஊழல் புகாரை CBI விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஆணை பிறப்பித்து உள்ளதுசெந்தில் பாலாஜி ஊழல் 2021ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடையில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது நடந்த டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவேடுகளை இரண்டு வாரத்தில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். என கரார் உத்தரவு.தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கூடுதல் விலை கொடுத்து மொத்தம் 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூபாய் .397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. 2002 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டுவரை உள்ள காலத்தில் நடைபெற்ற இந்த ஊழலின் விசாரணையை மாநிலத்தில் ஆட்சி செய்த திமுக அரசும், காவல்துறையின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவும் திட்டமிட்டு அவர்களின் ஊழல் காரணமாக தடுத்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
திமுக அரசின் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பல கட்சிகளும் சமூக ஊழல் தடுப்பு நபர்களும், தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அது தொடர்பாக 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதியும், 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதியும் அறிக்கை வெளியிட்டிருந்தார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆனால், அவற்றின் மீது திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதே குற்றச்சாட்டு குறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறப்போர் இயக்கம் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி புகார் அளித்தது. ஆனால், அதன் மீதும் திமுக அரசு வழக்கு பதிவு செய்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அறப்போர் இயக்கமும், அதிமுகவும் தொடர்ந்த வழக்குகளில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஆற்று மணல் கொள்ளை ஊழல், பணி நியமன ஊழல், அதிகாரிகள் பணியிட மாற்ற ஊழல், ஒப்பந்த ஊழல் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஆணையிட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் ரூபாய் .397 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்தும் விசாரணை நடத்த நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது திமுகவின் ஊழல்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் மிக முக்கிய வெற்றியாகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் ரூபாய் .1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூபாய் .397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர் திறன் கொண்ட 800 மின்மாற்றிகள் வாங்குவதற்கு கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் 23.11.2021 ஆம் நாள் திறக்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற 26 ஒப்பந்ததாரர்களும் சொல்லி வைத்தது போன்று ஒரு மின்மாற்றிக்கு ரூபாய் .13,72,930 என்ற விலையை குறிப்பிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தி விலையைக் குறைத்து ரூபாய் .12,49,800 என்ற விலைக்கு வாங்கியதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்தது.
ஆனால், மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு சந்தைத் தளத்தில் இதன் விலை ரூபாய் .8,91,000 மட்டும் தான். தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் சங்கத்தினர் குறிப்பிடும் விலை ரூபாய் .7,89,753 தான். இவை அனைத்தையும் விட குறைவாக ஒரு மின்மாற்றி ரூபாய் .7,87,311 என்ற விலைக்கு இராஜஸ்தான் மாநில அரசு வாங்கியுள்ளது. அதாவது சந்தை விலையை விட 37 சதவீதம் கூடுதலாக விலை கொடுத்து மின்மாற்றிகள் வாங்கப்பட்டுள்ளன. அதாவது ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு சந்தை விலையை விட 50 சதவீதம் கூடுதலாக விலையை குறிப்பிட்டுள்ளனர். அதன்பின் மின்வாரியம் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறிதளவு விலையைக் குறைத்துள்ளனர். இவை அனைத்தும் திட்டமிட்டு திமுகவின் அரசு திரைக்கதை எழுதி நடத்தப்பட்ட நாடகம்.
ஒப்பந்ததாரர்கள் கட்டுபடியாகும் விலையைக் குறிப்பிடவில்லை என்றால், அந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் அரசு பேச்சு நடத்தி, அதிக விலை கொடுத்து மின்மாற்றிகளை கொள்முதல் செய்ததிலிருந்தே இதில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகிறது .மின்மாற்றி கொள்முதலில் ஏற்பட்ட இழப்புக்குக் காரணம் அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர் இராஜேஷ் லகானி மற்றும் உயர் அதிகாரிகள் தான் காரணம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட வெகுமதிகளை வழங்கி வந்தது.
மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதில் மட்டுமின்றி, ஒரு யூனிட்டுக்கு ரூபாய் .20 வரை விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்தது, வீடுகளுக்கு பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டருக்கு சந்தை விலையை விட 350 சதவீதம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய பேரம் பேசி முடித்திருப்பது என திமுக ஆட்சியில் ஊழலின் விளைநிலமாக தமிழ்நாடு மின்சார வாரியத் துறை திகழ்ந்து வருகிறது. இந்த அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்துவதுடன் திமுக ஆட்சியின் பல்வேறு கால கட்டங்களில் மின்சாரத் துறையின் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ரூபாய் .6 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஊழல் மற்றும் மக்கள்விரோத ஆட்சிக்காக சட்டமன்றத் தேர்தலில் மக்களால் தற்போது தண்டிக்கப்படவிருக்கும் திமுக, சட்டத்தின் படியும் அதன் ஊழல்களுக்காக தண்டிக்கப்படும் காலம் இந்த உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு காரணமாக வெகுதொலைவில் இல்லை.





கருத்துகள்