தலை என ரசிகர்கள் பார்க்கும் பிரபல நடிகர் S.அஜித் குமாரின் தாயார் மோகினி (வயது 89) காலமானார் அது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் அறிக்கை
இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம். S.அனுப்குமார், S.அஜித்குமார், S.அனில்குமார்,
My deepest condolences to you and your family.She has raised great human beings! இந்த நிலையில் சென்னை வால்மீகி நகர், 4வது சீவர்டு ரோடு ,திருவான்மியூர், அஜீத்குமார் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெறும் என்ற நிலையில் அவரது வாழ்க்கைக் குறிப்பு, அஜித் குமார், ஆந்திரப்பிரதேசம் செகந்திராபாத்திலா ஒரு சிந்தி தாய்க்கும் கேரளம் பாலக்காட்டு பி. எஸ்.மணி என்ற சுப்பிரமணிக்கும் இரண்டாவது மகனாவார் இவரது தாய் தற்போது பாகிஸ்தானில் சுதந்திரத்திற்கு முன் ஒரே நடாக இருந்த நிலையில் கராச்சியில் பிறந்தவர்
இந்திய விடுதலையின் போது அவர் குடும்பம் அகதியாக கொல்கத்தா நகருக்கு வந்தவர் ஆவார், அஜீத் குமார் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டில் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 ஆம் ஆண்டில் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடையவே நடிப்பில் தடை ஏற்பட்டது. பின்னர் சரண் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் துவங்கினார். 2003 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிகத் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். 2003 ஆம் ஆண்டில் நீண்ட தாமதற்குப் பின்னர் வெளியான என்னைத் தாலாட்ட வருவாளா திரைப்படமும், காவலராக நடித்த ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வியடைந்தது. மேலும், அந்தக் கால கட்டத்தில் சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்து வந்தார், பின் விஸ்வாசம் படம் பெயர் பெற்றது,
சிந்தி சமூகத்தின் இறுதிச் சடங்குகள் ஆழ்ந்த ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை. மரணத்திற்கு முந்தைய நீராட்டுதல், தகனம் செய்தல், மற்றும் இறப்புக்குப் பிந்தைய சடங்குகள் என மூன்று நிலைகளில் நடைபெறும்,இறுதி ஊர்வலம் மற்றும் தகனம்:செய்ய உடல் தயார் செய்தல்: உடலை பாலில் நீராட்டி, ஆண்கள் மற்றும் விதவைகள் அல்லாத பெண்களுக்கு வெள்ளை துணியும், சுமங்கலிப் பெண்களுக்கு சிவப்புத் துணியும் அணிவிக்கப்படும். உடலுக்கு மஞ்சள் அல்லது சந்தன பேஸ்ட் பூசப்படும். தகனக் குளியல் மேடையில் உடல் வைக்கப்பட்டதும், ஆன்மாவை விடுவிக்கும் விதமாக சடங்கு பானை உடைக்கப்படும். குடும்பத்தின் மூத்த ஆண் அதாவது மூத்த மகன் தகன நெருப்பை மூட்டுவார். அதன் பின்னர் அஸ்தி கரைத்தல் மற்றும் 'திஜோ' (Tijho):அஸ்தி சேகரிப்பு என்பது இறந்து மூன்றாம் நாளில் அஸ்தி சேகரிக்கப்பட்டு ஆற்றில் கரைக்கப்படும்.திஜோ சடங்கு: இறந்த மூன்றாம் நாள், உறவினர்கள் கூடி நீராடி, குடும்பத்தினருக்கு புதிய ஆடைகளை வழங்கி ஆறுதல் கூறுவார்கள்.. 13-ஆம் நாள் சடங்குகளுடன் துக்கம் முடிவடையும், 13-வது நாள் துக்க காலம் முடிவடைகிறது.அன்று உறவினர்களுக்கு இனிப்பு உட்பட முழுமையான சைவ உணவு பரிமாறப்படும்.பாகடி சடங்கு: இது குடும்பப் பொறுப்புகள் அடுத்த தலைவரிடம் ஒப்படைக்கப்படுவதைக் குறிக்கும் தலைப்பாகை கட்டும் சடங்காகும். இவை அணைத்தும் அஜீத் குமார் சார்ந்த உறவினர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாகும், ஆகவே அவர்கள் வெளிநபர்களை தவிர்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவிததுள்ளனர்.









கருத்துகள்