கர்நாடக மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவித்து கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று தாம் இம்முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். டெல்லியில் மீண்டும் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சித்தராமையா முன்வந்தார்.
சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக முன்வந்த தகவல் உறுதியானதும் சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த கட்டமாக, கர்நாடக மாநிலச் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்படுவார்.
அதன் பின்னர், அவர் அதிகாரபூர்வமாக முதல்வர் பொறுப்பை ஏற்பார்.
முன்னதாக, வியாழக்கிழமை (மே 28) தனது அமைச்சரவை சகாக்களுக்கு காலை விருந்து அளித்தார் முதல்வர் சித்தராமையா.
பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருந்தில் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது பதவி விலகும் முடிவை அமைச்சர்களிடம் சித்தராமையா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. புதிய முதல்வராகும் டி.கே. சிவகுமார், பதவி விலகிய சித்தராமையாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும், இருவரும் ஆரத் தழுவிக்கொண்டனர்.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் பதவியை சித்தராமையாவும் டி.கே. சிவகுமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் எனச் சமமாகப் பிரித்துக்கொள்ள ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்து இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து, டி.கே. சிவகுமாரை முதல்வராக நியமிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர்.
இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து காங்கிரஸ் தலைமை கடந்த ஆண்டே பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முதல்வர் பதவியில் இருந்து விலக சித்தராமையா அப்போது மறுத்துவிட்டார்.சித்தராமையா இந்தியத் தேசிய காங்கிரஸ் கர்நாடக மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராகப் பணியாற்றினாலும்ஃ முன் 2013 முதல் 2018 வரையிலும், பின்னர் 2023 முதல் கர்நாடகத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார்
ஆகஸ்ட் 1948-ல் கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில் சித்தராமனஹுண்டி கிராமத்தில் பிறந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டமும், சட்டப் பட்டமும் பயின்றவர். 1983- ஆம் ஆண்டில் பாரதிய லோக் தளம் கட்சி மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்னர் ஜனதா தளம், அகில இந்திய முற்போக்கு ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கர்நாடக முதலமைச்சராக முழு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த இரண்டாவது தலைவர் எனும் பெருமையைப் பெற்றார்.
சமூக நீதி, ஏழைகள் நலன் மற்றும் கன்னட மொழி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளைக் கொண்டவராவார் இவர் பதவி விலகல் கடிதம் ஆளுநரின் செயலாளர் மூலம் அளித்தார் முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமாவை கர்நாடக ஆளுநர் டி.சி.கெஹ்லோட் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் இனி சிவக்குமார் சட்டமன்ற உறுப்பினர் மத்தியில் தேர்வாகி முதல்வர் பதவி ஏற்பார்






















கருத்துகள்