நார்வே செஸ் 2026 ஜாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு @pragg_chess பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
தனது அறிவார்ந்த ஆட்டத்தினாலும், அசாத்தியமான தொடர் வெற்றிகளினாலும் உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் அவர் மாபெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா
நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நார்வே நடைபெற்ற செஸ் போட்டியில் 6 வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்றில் ஜெர்மனி நாட்டின் வின்சென்ட் கீமரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம் மொத்தம் 18 புள்ளிகளை பெற்று அவர் பட்டம் வென்றார். அமெரிக்காவின் வெஸ்லி 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். இறுதி சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா 18 புள்ளிகள், வெஸ்லி 17 புள்ளிகள், அலிரேசா ஃபிரோஸ்ஜா 15.5 புள்ளிகள், கார்ல்சன் 13 புள்ளிகள், வின்சென்ட் கீமார் 11 புள்ளிகள், மற்றொரு இந்தியர் டி.குகேஷ் 8 புள்ளிகள் பெற்ற நிலையில்
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள். என தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து, அதேபோல
மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026-ல் தங்கப் பதக்கம் வென்றதோடு, 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு முதல்வர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார், மேலும்
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல பிரதமர் மற்றும் கே.அணணாமலை உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துளளனர்.





கருத்துகள்