முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி புதிய இயக்கம் அண்ணாமலையின் தனி வழி

ஒரே நாடு .ஒரே தேர்தல் நோக்கி புதிய இயக்கம்  அண்ணாமலையின்  தனி வழி.


இன்று மதியம் 12 மணிக்கு , சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். என  பாஜகவிலிருந்து முறையாக விலகிய கே.அண்ணாமலை

https://www.instagram.com/annamalai_kuppusamy

https://www.facebook.com/share/18bJfU31t4/

https://youtube.com/@annamalai.k

https://x.com/annamalai_k ஆகிய லிங்க் மூலம் சமூக வலைத்தளங்களில் பேசினார் அதில் "எனக்கு முதல் வாய்ப்பு தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து லக்னோவில் படித்ததற்கும், பின்னர் டெல்லியில் இருப்பதற்கும், ஹைதராபாத்தில் இரண்டு ஆண்டுகள் டிரெயினிங், அதன் பிறகு கர்நாடகாவில் 8 லிருந்து 9 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 10, 15 ஆண்டுகள் சுற்றினேன். அதனால் தான் நான் எப்போதும் சொல்வேன் – “நான் ஒரு பெருமை மிகுந்த இந்தியன், அதே நேரத்தில் பாரம்பரியத் தமிழன்” என்ற அடையாளத்தோடு எல்லோரிடமும் பேசுவேன்.


இன்றைய தமிழ்நாட்டு அரசியலில், ஒரு பெருமை மிகுந்த தமிழனாக இருக்க வேண்டுமென்றால் இந்தியன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சில கட்சிகள் சொல்கின்றன. ஆனால் நான் எப்போதும் சொல்வது என்னவென்றால்  நான் இந்தியன் என்கிற அடையாளத்தோடு, ஒரு பெருமை மிகுந்த தமிழனாகவே எல்லா இடங்களிலும் இருக்கிறேன். இந்த இயக்கத்திலும் அப்படித்தான் இருப்பேன். என்றார் இந்த நிலையில் பாஜகவில் இருந்து முன்னாள் மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை விலகிய பின் இன்று தொடங்கியுள்ள We The Leaders இயக்கத்தில் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்தை கடந்து தற்போது வரை ஏழு லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று சமூக வலைதளம் வாயிலாக மேலும் பேசியவர், “நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள், குறிப்பாக இந்தியாவின் பல பகுதிகளில், “அண்ணாமலை, நீங்கள் தமிழனா, இந்தியனா?” என்று கேட்பார்கள். இது எனக்கு பெரிய கான்ஃப்ளிக்ட்டை ஏற்படுத்தக்கூடிய விஷயம். “Are you a Tamilian or are you an Indian?”தமிழ்நாட்டில் என் அப்பாவோ, அம்மாவோ… என் அம்மா தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே வந்ததே இல்லை. தமிழ்நாட்டில் தான் எப்போதும் இருந்திருக்கிறார்கள். என் பாரம்பரியம் முழுவதும் விவசாயக் குடும்பம். அப்பா சின்ன வயதில் ஒரு முறை மட்டும் தமிழ்நாட்டுக்கு வெளியே சென்று வந்திருக்கிறார். மற்றபடி ஆண்டாண்டு காலமாக அங்கேயே விவசாயம் செய்து வரும் குடும்பம்.நாம் ஆரம்பிக்கும் இந்த இயக்கத்தில் உங்களுடன் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் எந்தப் பிரச்சினையையும் முன்னிறுத்தி, சமரசமின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சியை நாம் எல்லோரும் கொண்டு செல்ல வேண்டும்.




பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிறகு பல பிரச்சினைகளில் எல்லா தலைவர்களும் பெரும் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டின் அடையாளத்தோடு தனியாகப் போக வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். உள்ளாட்சித் தேர்தலில் தனியாகப் போக வேண்டும் என்பதற்காக அன்றைக்கு தேசியத் தலைவர் திரு. ஜே.பி. நட்டா அவர்கள் நிறைய பேரோடு பேசி அனுமதி அளித்தார்.அதேபோல் லோக்சபா தேர்தலிலும் தனியாகப் போக வேண்டும். தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி தமிழர் அடையாளத்தோடு களத்தில் நின்றால் தான் தமிழர் நலனை முன்னிறுத்தும் கட்சியாகவும், இந்திய அடையாளத்தோடும் இருக்க முடியும் என்பது என் உறுதியான நம்பிக்கை. கொண்டு வர வேண்டும் என்பதே என் நோக்கம். அமெரிக்கா, ஐரோப்பா செல்லும் போது Nvidia, Micron, Samsung, Intel, Google, Facebook போன்ற நிறுவனங்களில் Vice President பதவியில் இந்தியன் என்ற அடையாளத்தோடு ஒரு தமிழர்கள் இருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் திரும்பி வந்து தமிழ்நாட்டு அரசியலில் பங்களிக்க வேண்டும். தமிழக வளர்ச்சிக்கு அவர்கள் எல்லோரையும் பயன்படுத்த வேண்டும்.

வாழ்த்துக்கள் கூறும் தெ.இ.பாபி தலைவர் 

இதில் “நான் பெரியவன், நீ பெரியவன்” என்ற போட்டி இல்லாமல், ஒரு வளர்ந்த பாரதத்துக்குள் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதற்கு நமது அரசியல் மொழியை உள்ளிட்ட அனைத்தையும் மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் கட்சி தேவை தான். மாற்றுக்கருத்து இல்லை. காரணம், டூத்பேஸ்ட் வாங்கும் அளவுக்கு கூட மக்கள் தரத்தைப் பார்த்து வாங்குகிறார்கள். அரசியலிலும் அதே தரத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.நாம் கல்ட் பாலிடிக்ஸிலிருந்து வெளியே வர வேண்டும். காமன் மேன் பாலிடிக்ஸை முன்னெடுக்க வேண்டும். பிறந்த நாள் கொண்டாட்டங்கள், போஸ்டர் அரசியல் ஆகியவற்றை முற்றிலும் ஒதுக்க வேண்டும்.

ஒரு முதலமைச்சர் மட்டும் மாறினால் போதாது. 35 அமைச்சர்கள், 234 எம்எல்ஏக்கள், 39 எம்பிக்கள், 30,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளென அனைத்து மட்டங்களிலும் நேர்மையான, திறமையான, சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும்.

இது ஒரு குடும்பத்திற்கு மட்டுமானது அல்ல. அதேசமயம எல்லோருக்கும் அரசியலில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும். “No chairs is permanent for anybody” – இது அனைவருக்கும் பொருந்தும். புதியவர்கள், புதிய ஐடியாக்கள் தொடர்ந்து வர வேண்டும்.

ஏற்கெனவே 2020-ல் தொடங்கிய “We The Leaders” இயக்கத்தை இப்போது முழுமையாகச் செயல்படுத்துகிறோம். கோயம்புத்தூரில் ஏபிஜே அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ் என்ற பயிற்சி மையத்தைத் தொடங்குகிறோம். அங்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களே உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவார்கள்.

நாம் யாருக்கும் போட்டி இல்லை. யாருடனும் வன்மம் இல்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மரியாதையோடு பார்க்கிறேன். நமது கொள்கையை மக்கள் முன் வைப்போம். மக்கள் தரத்தைப் பார்த்து தேர்வு செய்வார்கள். நாகரிகமான அரசியல், பொறுப்பான சமூக ஊடகப் பயன்பாடு, நேர்மறை, பொறுமை  இவையே நமது பாதை. 42 ஆண்டுகள் வளைந்து நெளிந்து இன்று இந்த இடத்தில் உள்ளேன்.

நிச்சயமாக நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புரட்சியை மாற்றத்தை உருவாக்குவோம். இந்திய நாட்டிற்குள் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது தான் நமது குறிக்கோள் வேறு எதுவும் இல்லை. அதற்காக வாழ்வை அர்பணிப்போம் ” என்றார்". அவர் பேசி முடித்த நிலையில் பலரும் இணைப்பு மூலம் இணைந்து வருகின்றனர். இன்று இரவு அது பத்து லட்சத்தைத் தாண்டும்.

கருத்துகள்