இயக்குனர் இமயம் காலமானர்
தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் பிறந்து தமிழ் நேசராக வாழ்ந்த மனிதர், "என் இனிய தமிழ் மக்களே" என்ற வரிகள் நினைவு படுத்தும் இயக்குனர், பணம் படைத்த நபர்கள் மட்டுமே சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற நிலையை மாற்றியவர்
அரங்கத்திற்குள் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடித்தவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத பாடல்களைத் தந்தவர்.ஸ்ரீ தேவி, ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ரோஜா உள்ளிட்ட கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர் பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படமாக்கிய பாரதிராஜா மருத்துமனை தரப்பு இதுவரை எந்த அறிவிப்பும் தராத நிலையில் தற்போது
ஏதோ ஒரு காரணம் அவரது முதல்மரியாதை துவக்கக் காட்சிகள் போல நடக்கிறது
கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலின் உதவியாளராகத் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பெரியமாயத்தேவர், கருத்தம்மாள் இணையருக்கு பிறந்தவரின் இயற்பெயர் சின்னச்சாமி பாரதிராஜாவானார். சந்திரலீலாவை மணந்த வருக்கு மனோஜ் மற்றும் ஜனனி என்ற இரண்டு பிள்ளைகளில் கடந்த ஆண்டு மனோஜ் காவமானார்
மனோஜ் தாஜ்மஹால் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் நடிகை நந்தனாவை மணந்தார். ஜனனி மலேசிய ராஜ்குமார் தம்பி ராஜாவை மணந்தார். பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் மண்ணுக்குள் வைரம், வண்டிச்சோலை சின்ராசு , வானவில் மற்றும் குரு பார்வை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கத்துக்குட்டி திரைப்படத்தில் அறிமுகமானார். இலக்கியத் தமிழை தூக்கிச் சுமந்த கலைச் சிகரங்களை இளைப்பாறச் செய்து..
நாட்டு நடைமுறை சொல்லாடல்களையும், கோவணம் கட்டிய வெள்ளந்தி மனிதர்களின் அன்றாட வாழ்வியல் உரையாடல்களையும் 70 MM வெள்ளித்திரையில் விரித்துக் காட்ட வைத்த தமிழன்
உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.
தனது தமிழ்த் தேசிய தகிப்பை இறுதி மூச்சு வரை ஏந்தி நின்ற உனது ஆன்மா என்றும் எங்கள் நெஞ்சில் இளைப்பாறட்டும்.
அன்னாரின் ஆன்மா அமைதி பெறட்டும் ஓம் சாந்தி, "மண்ணுக்குள் வைரம்' புதைகிறது ஆனால் அது என்றும் திரையுலகில் வரலாறாக ஜோலிக்கும் "முதல் மரியாதை' உடன் காலங்கள் தோறும்,















கருத்துகள்