தமிழ்நாடு தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கையில் மாநகராட்சி ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் கள ஆய்வில் இருக்க வேண்டும்! முதலமைச்சர் உத்தரவின் பேரில்
காலை திடீர் ஆய்வு, கழிவு மேலாண்மை, தெரு நாய் கட்டுப்பாடு, பள்ளிகளின் உள் கட்டமைப்பு உள்ளிட்ட 16 புள்ளிகள் அடங்கிய உத்தரவு செயல்படுத்தத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் . ககன்தீப் சிங் பேடி, ஐ.ஏ.எஸ்., 03.06.2026 அன்று அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும், பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்
முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களுக்கு வெளிப்படையான, சீரான சேவைகளை வழங்கிடவே இந்த 16 அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளன.
அதில் அறிவுறுத்தல் செயல்படுத்த வேண்டிய முறை,
முதலாவது காலை ஆய்வு ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் களத்தில் இருக்க வேண்டும். பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிலையங்களை தினமும் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக பணி வருகை பயோமெட்ரிக் முறை மூலம் உண்மையான வருகையைக் கண்காணிக்க வேண்டும். மூன்றாவதாக கழிவுகள் அகற்ற விழிப்புணர்வு பேட்டரி வாகனங்கள் 'சுகாதாரப் பாடல்' ஒலிக்க வேண்டும்.
ஆன்லைன் கட்டணம் தாமதம் மற்றும் தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். தவறும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை.
சுகாதாரம் ஆய்வுகள் (வழக்கமான மற்றும் திடீர்), மருத்துவமனை கட்டமைப்பு மேம்பாடு.
பள்ளிகள் கட்டிடம், மரச்சாமான்கள் பராமரிப்பு. மரம் நடுதல்.
தெருநாய் கட்டுப்பாடு ABC திட்டத்தின் வழக்கமான ஆய்வு, வெறிநாய்க்கடி தடுப்பூசி (ARV) சிறப்பு கவனம்.
பணி தரம் UGSS, நீர் வழங்கல், சாலை & கட்டிடப் பணிகள் குறித்து பொறியாளர்கள் தினமும் ஆய்வு செய்து, தடிமன், சிமெண்ட், பிற்றுமின் தரத்தை சோதிக்க வேண்டும்.
குறிப்பு: ஆய்வுக் குறிப்புகளை மாதாந்திர கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உத்தரவில் "ஒழுங்கு நடவடிக்கை" மற்றும் "தரச் சோதனை" போன்ற வார்த்தைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், முந்தைய சுற்றறிக்கைகள் பல செயல்படுத்தப்படாமல் போனதே பெரும் கேள்விக்குறி.
காலை 7 மணிக்கு முன் கள ஆய்வு என்பது ஏற்கனவே உள்ள விதிகளின் மறுபதிப்பா? அல்லது புதிய கண்காணிப்பு முறையா?
பணியாளர் பற்றாக்குறை கையாளப்படாவிட்டால், இந்த உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே நிற்கும்.
நான்காவதாக பொதுமக்களின் எதிர்வினை (சமூக ஊடகங்களில்)
"வருகை, தூய்மை, தெருநாய், பள்ளிகள் குறித்து எல்லாவற்றுக்கும் சுற்றறிக்கை. ஆனால் நடைமுறையில் ஊழலும், அலட்சியமும் தொடர்கிறதே?"
பலர் இந்த உத்தரவுகளை வரவேற்பதாகத் தெரிவித்தாலும், கடந்த 10 ஆண்டுகளாகப் பின்பற்றப்படாத பல விதிகள் இன்றும் பொருட்படுத்தப்படாமல் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜூன் மாத மதிப்பாய்வுக் கூட்டத்தில் ஆணையர்கள் நிறைவேற்றத்தை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்படுமா?
பொதுமக்களின் குறைகள் எளிதில் பதிவாகும் வழிமுறை இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
இந்தச் சுற்றறிக்கை ஒரு சிறந்த நிர்வாகக் கையேடு போல் இருந்தாலும், கடந்த கால தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளவில்லை. "தினமும் ஆய்வு", "தரச் சோதனை" என்பதெல்லாம் 2000-ஆண்டுகளிலேயே இருந்த விதிகளே. புதிதாக ஒன்றுமில்லை. முக்கியப் பிரச்சனை பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்தில் உள்ள அரசியல் தலையீடு. அது சரி செய்யப்படாவிட்டால், இந்த 16 அறிவுறுத்தல்களும் காகிதக் புலிகளாகவே இருக்கும்.தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் உத்தரவைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு : தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் தினமும் காலை ஏழு மணிக்கு குப்பைகள் அள்ளுவதையும், கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா என்பதையும் மற்றும் பொதுமக்கள் கூடும் பஸ் நிலையங்கள் சுத்தமாக இருக்கிறதா என்பதையும் அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது முன்னுரிமை அடிப்படையில் உடனுக்குடன் அதைச் சரி செய்து தர வேண்டும். ஊழியர்கள் பணிக்கு வருகிறார்களா என்பதை தினமும் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு புதன் கிழமை மாலையும் தெரு விளக்குகள் எரிகிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். எரியாவிட்டால் 24 மணி நேரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் கட்டட அனுமதிக்கு கேட்டு விண்ணப்பித்தால் ஆய்வு செய்து எவ்வித காலதாமதம் இன்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். தாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தினமும் ஆணையர்கள், பொறியாளர் அவர்களுடன் நேரில் ஆய்வு செய்து கட்டுமானப் பணி தரமாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறையினர் செயலாளர் ககன் தீப்சிங் பேடி மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.




கருத்துகள்