ஏழைகளுக்கு அதிகாரமளித்த
ல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம்
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம்
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் அத்தியாவசியச் சேவைகளுக்கான அணுகல் விரிவுபடுத்தப்பட்டு நலிவடைந்த குடும்பங்கள் எதிர்கொண்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில் குழாய் நீர் இணைப்பு வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 3.23 கோடியில் இருந்து, 2026 மே மாதத்தில் 15.84 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-ல் 39 சதவீத பகுதிகள் மட்டுமே சுகாதார வசதிகள் பெற்றிருந்த நிலையில், 12.11 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு அனைத்து கிராமங்களும் 100 சதவீதம் சுகாதார கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் 10.57 கோடிக்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு பெண்களின் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டதுடன் காற்று மாசும் குறைக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் 43.93 கோடி சுகாதார அட்டைகளை வழங்கிப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு மலிவு விலையில் மருத்துவ வசதிகளை வழங்கியுள்ளது. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 81 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்களை உறுதி செய்துள்ளது.
பெண் குழந்தைகளின் ஆரம்பப் பள்ளி இடைநிற்றல் விகிதம் 2013-14-ல் 4.6 சதவீதத்திலிருந்து 2024-25-ல் 0.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. டிஜிட்டல் சீர்திருத்தங்கள் ஆதார் அடிப்படையிலான ரேஷன் பொருட்கள் விநியோகத்தை சாத்தியமாக்கியுள்ளன. நீர், சுகாதாரம்,பிற வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை மூலம் முன்னேறும் மாவட்டங்கள், பழங்குடியினப் பகுதிகளில் நலத்திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
வறுமை ஒழிப்பு மற்றும் பிற துறைகளில் மக்கள் நலனுக்கான நடவடிக்கைகள்
கடந்த தசாப்தத்தில், வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு, நலத்திட்ட விநியோகத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது. பொதுக் கொள்கையானது உள்ளடக்கம், அணுகல்தன்மை, கடைக்கோடி நபர் வரையில் பலன்கள் சென்றடைதல் ஆகிய கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.
குறிப்பாக, சராசரி பணவீக்கம் 2004-2014 காலகட்டத்தில் 8.1 சதவீதத்திலிருந்து, 2014-2025 காலகட்டத்தில் 5.1 சதவீதமாகக் குறைந்தது. இது விலை ஸ்திரத்தன்மைக்கும், குடும்பங்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதற்கும் பங்களித்தது. அதே நேரத்தில், இந்தியாவில் வறுமை 2013-14-ல் 29.17 சதவீதத்திலிருந்து 2022-23-ல் 11.28 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த முன்னேற்றம் நிதி உள்ளடக்கம், குறைந்த விலையில் சுகாதார சேவைகள், உணவுப் பாதுகாப்பு, வீட்டுவசதி, வாழ்வாதார ஆதரவு, டிஜிட்டல் சீர்திருத்தங்கள் ஆகிய முக்கிய நலத்திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் சாத்தியமானது. மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, பொதுச் சேவை விநியோகம் ஆகியவை இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இத்தகைய முன்முயற்சிகள் கிராமப்புற, நகர்ப்புற இந்தியாவின் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன.
கண்ணியத்தின் அடித்தளம்: அடிப்படைத் தேவைகளுக்கான உலகளாவிய அணுகல்
அரசின் நலத்திட்டங்கள் நகர்ப்புற, கிராமப்புற இந்தியா முழுவதும் குழாய் நீர் இணைப்பு, சுகாதார வசதிகள், சமையல் எரிவாயு இணைப்புகள், கிராமப்புற மின்மயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளன. இந்த முயற்சிகள் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திலும், அடிப்படைச் சேவைகள் பெரிய அளவில் அனைவரையும் சென்றடைந்ததையும் பிரதிபலிக்கின்றன. கடந்த தசாப்தத்தில், தூய்மையான எரிசக்தி, பாதுகாப்பான குடிநீர், மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் ஆகியவை இந்தியாவின் நலன், பொதுச் சுகாதார உத்தியின் மையத் தூண்களாக உருவெடுத்துள்ளன. அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளதோடு சுகாதார பாதிப்புகளைக் குறைத்துள்ளன. இது கிராமப்புற, பின்தங்கிய பகுதிகளில் மக்களின் கண்ணியத்தை வலுப்படுத்தியுள்ளது.








கருத்துகள்