SIR உள்பட பிற தேர்தல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இன்டி கூட்டணி கடிதம்
வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் உள்பட பிற தேர்தல் சார்ந்த நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க கோரி
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு 'இந்தி' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கடிதம் எழுதினர். SIR குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தி கூட்டணி எழுதிய கடிதத்தில் திமுகவும் கையெழுத்து
SIR குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இந்தி கூட்டணிக் கட்சிகள் 23 மற்றும் ஒரு சுயேச்சை இணைந்து கடிதம். ஜூன்
8 ஆம் தேதி நடந்த இந்தி கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காத திமுக. இந்தி கூட்டணி கட்சிகள் சார்பில் எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது1 INC, 2 TMC, 3 SP, 4 AAP, 5 DMK, 6 RJD, 7 Shivsena UBT, 8 NCP SP, 9 CPI M, 10 CPI, 11 JMM, 12 JKNC 13 PDP, 14 IUML, 15 CPI ML, 16 AIFB, 17 RSP, 18 DK, 19 MDMK, 20 KMDK, 21 VCK, 22 AJP, 23 KCM, 24 KAPIL SIBAL, ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு ‘INDI’ கூட்டணிக் கட்சிகள் எழுதியுள்ள கடிததம், இருந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை பலவீனப்படுத்தவும், இந்தியாவின் ஜனநாயகத்தின் அடித்தளத்தை சீர்குலைக்கவும் செய்யப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி தான்
சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) என்பது வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் ஒரு வெளிப்படையான, சட்டபூர்வமான நடவடிக்கையாகும். இதன் மூலம் பல முறை பதிவு செய்யப்பட்ட பெயர்கள், இறந்தவர்களின் பெயர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் தகுதியற்ற நபர்களை நீக்குகிறது தேர்தல் ஆணையம். எதிர்க்கட்சிகள் கூறும் 'வாக்கு திருட்டு' என்பது பொய்யான குற்றச்சாட்டு இது, ‘ஒரு குடிமகன், ஒரு வாக்கு’ என்ற கொள்கையை உறுதி செய்யும் அரசியல் சாசனக் கடமையாகும். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே SIR- திருத்தத்தை அங்கீகரித்துள்ளது. இது அமைதியான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது.
பல ஆண்டுகளாக ‘INDI’ கூட்டணி பொய்யான மற்றும் போலி வாக்காளர் பட்டியல்களால் போலி வாக்காளர்களால் பயனடைந்து வந்தது. இப்போது தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட 6 கோடி வாக்காளர்களை போலிகள் எனக் கண்டறிந்து இந்தியா முழுவதும் நீக்கியுள்ள போது, எதிர்க்கட்சிகள் அஞ்சி, நடுங்கி நீதிமன்றத்தை நாடுகிறார்கள். இது எதிர்க்கட்சிகளின் இரட்டை வேடம் எனப் பலரும் விமர்சனம் முன் வைக்கும் நிலையில் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறவர்கள், வெளிப்படையான தேர்தல் சீர்திருத்தத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? என்பதே ஜனநாயக வாதிகள் எழுப்பும் வின்?
பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் SIR நடவடிக்கைகளை ஆதரிக்கிறது. ஒவ்வொரு தகுதியான குடிமகனும் SIR செயல்முறையில் பங்கேற்கவும், தங்கள் விவரங்களை சரிபார்க்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம். ஏனெனில் தெளிவான வாக்காளர் பட்டியல் என்பது எதிர்க்கட்சிகளின் போலியான மற்றும் பலவீனமான அரசியலுக்கு முடிவு கட்டும்.
உண்மை வெல்லட்டும், ஜனநாயகம் ஒளிரட்டும். இதுவே
பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு . ஆகவே எதிர் கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதவாக ஏன் இந்த முயற்சி என்பதே பலருக்கும் புரியாத புதிர். இந்தக் கடிதத்தில் 'இந்தி கூட்டணியில் இருந்து விலகிய திமுக, ஆம்ஆத்மி கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளனர். இதன்மூலம் இருகட்சிகளும் மீண்டும் 'இந்தி கூட்டணியுடன் கைகோர்த்துள்ளன. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு துறையின் பொறுப்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''கடந்த 8 ஆம் தேதி 'இந்தியா' ஜன்பந்தன் மீட்டிங் நடந்ததில் 21 கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் 'சார்' நடவடிக்கை மற்றும் பிற தேர்தல் பிரச்சனைகள் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுத முடிவெடுக்கப்பட்டது. இப்போது 23 கட்சிகள் + ஒரு சுயேச்சை ஆதரவில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்க்க்கட்சிகள் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கையில் உறுதியாக உள்ளன'' என்று கூறியுள்ளார்.




கருத்துகள்