இந்திய வரலாற்றில் தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக மண்ணிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள விண்ணெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து மட்டும் 80 பேர் வரை தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல்
விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 20 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இங்கு திட்ட இயக்குனர் விக்டர் ஜோசப் அவரது பணியை ராஜினாமா செய்துள்ளார் சமீபத்தில் இந்தியாவில் விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைய மத்திய அரசு அனுமதி கொடுத்தது. எனவே அது சார்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்படுகிறது. இந்தத் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் சம்பளம் கொடுக்க முன்வருவதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இயக்குநர்கள் இஸ்ரோவிலிருந்து விலகி தனியார் நிறுவனங்களில் சேரத் துவங்கியுள்ளனர்.
இதனால் இஸ்ரோ செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்ப ஓய்வு பெறுதல் மற்றும் பணியிலிருந்து விலகுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிலிருந்து 100 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்தத் திட்டத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தங்களது பணியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதுவரை 120 விஞ்ஞானிகள், இயக்குநர்கள், உயர் தொழில்நுட்ப வல்லுனர்கள் அவர்களது பணியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது,
இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்ப ஓய்வு பெறுதல் மற்றும் பணியில் இருந்து விலகுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
இதுவரையில் இஸ்ரோ மைய இயக்குநர்கள் விருப்ப ஓய்வுக்கு அனுமதி கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது அவர்களிடமிருந்து அந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இனி விஞ்ஞானிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிலிருந்து விலக அல்லது விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தால் அது தொடர்பான மனுக்களை இஸ்ரோவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் பணி விலகுவதை இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி படுத்தினார். ஆனால் இந்த நெருக்கடியிலிருந்து வெளி வர முடியும் என்றும் ஒவ்வொரு நிறுவனமும் இது போன்ற நெருக்கடியைச் சந்திக்கக்கூடிய ஒன்றுதான் எனவும் தெரிவித்தார் அனைத்து ராஜினாமா விண்ணப்பங்களும் இறுதி முடிவிற்காக நேரடியாக மத்திய விண்வெளித் துறைக்கு (DoS) அனுப்பி வைக்கப்பட வேண்டும். இந்தியாவின் முக்கிய விண்வெளித் திட்டங்களான ககன்யான் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணி முடியும் வரை, அதில் தொடர்புடைய விஞ்ஞானிகளின் ராஜினாமாவை பொதுவாக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இது குறித்துக் கூறுகையில், பெரிய நிறுவனங்களில் பணியாளர்கள் வருவதும் போவதும் இயல்பான நிர்வாக நடைமுறைதான் என்றும், இதனால் இஸ்ரோவின் நீண்டகால திட்டங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்ற பக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எதிர்கால வளர்ச்சி குறித்து வினா எழுகிறது,
இப்போது ராக்கெட் விண்ணில் ஏவிய தனியார் நிறுவனம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸை நிறுவியவர்கள் பவன் குமார் சந்தனா மற்றும் நாக பாரத் டகா.
இருவருமே இஸ்ரோவில் பணிபுரிந்து 2018 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனத்தைத் துவங்கியவர்கள்.
இன்னொரு பக்கம் சமீபமாக இஸ்ரோவிலிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் அடுத்தடுத்து வெளியேறுகிறார்கள் என்ற செய்தி. இதற்குப் பின்னணி, அவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் என்கின்றனர். இஸ்ரோ மீண்டும் மீண்டு எழ வேண்டும்.








கருத்துகள்