முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம்

இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம்

இந்திய, நியூசிலாந்து பிரதமர்கள் 11 ஜூலை 2026 அன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சந்தித்து, இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கும், இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பகிரப்பட்ட கட்டமைப்பாக, 2030-ம் ஆண்டுக்கான இந்த செயல்திட்டத்தை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர். இந்த உத்திசார் ஒத்துழைப்பானது, இந்த செயல்திட்டத்தின் பின்வரும் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், முன்முயற்சிகளை உள்ளடக்கியது.


தூண் I: அரசியல், ராஜ்ய ரீதியிலான ஈடுபாடு.

பிரதமர்கள், அமைச்சரவை, அமைச்சர்களுக்கு இடையே வழக்கமான அடிப்படையில் சந்திப்புகளையும் பரஸ்பரப் பயணங்களையும் திட்டமிட முயற்சித்தல்.

வழக்கமான வெளியுறவு அமைச்சர்களின் உரையாடல் மூலம் பயனுள்ள உயர் மட்ட ஒத்துழைப்பை உறுதி செய்தல்.

பொதுவான நலன் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த, தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகளுக்கு இடையேயான சந்திப்புகளையும் கலந்துரையாடல்களையும் தீவிரப்படுத்துதல்.


இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே வழக்கமான நாடாளுமன்றப் பரிமாற்றங்களையும் அரசுமுறைப் பயணங்களையும் ஊக்குவித்தல்.

தூண் II: பாதுகாப்பு ஒத்துழைப்பு

பயிற்சிகள், படைப்பிரிவுகளின் (கடல், வான், தரை) வருகைகள், குறுகிய கால பணியாளர் பரிமாற்றங்கள், விளையாட்டுப் பயணங்கள், பாதுகாப்புப் பணியாளர் கல்லூரி பரிமாற்றங்கள், உயர் மட்ட பாதுகாப்பு உரையாடல்கள் மூலம் ராணுவத் தொடர்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்துதல்.

இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியின் கடல்சார் பாதுகாப்புத் தூணின் கீழ் கடல்சார் விஷயங்களில் ஒத்துழைப்பைத் தொடர்தல்.

இந்தியா-நியூசிலாந்து இணையவழி உரையாடல் மூலம் பகிரப்பட்ட இணையப் பாதுகாப்பு முன்னுரிமைகளில் ஈடுபடுதல்.

இந்திய தேசிய புலனாய்வு முகமைக்கும் நியூசிலாந்து காவல்துறைக்கும் இடையே சட்ட அமலாக்க ஒத்துழைப்புக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறைப்படுத்துவதற்குப் பணியாற்றுதல்.

தூண் III: வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு

2030-ம் ஆண்டுக்குள் பொருட்கள் மற்றும் சேவைகளில் இருதரப்பு இருவழி வர்த்தகத்தை ₹35,000 கோடியாக இரட்டிப்பாக்கும் இலட்சிய இலக்கை நோக்கிப் பணியாற்றுதல்.

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வருவதையும் திறம்பட செயல்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய, அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்றுதல்.

தூண் IV: மக்கள், கலாச்சாரம், விளையாட்டு

இருதரப்பு மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதில் புலம்பெயர் சமூகங்களை ஈடுபடுத்துதல்.

2025-ம் ஆண்டின் விளையாட்டு தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்துதல்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கும், நியூசிலாந்து விளையாட்டுத் துறைக்கும் இடையிலான இந்தியா-நியூசிலாந்து கூட்டு விளையாட்டுச் செயல் திட்டத்தைச் செயல்படுத்துதல்.

நமது கலாச்சாரங்களைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக, கலாச்சார ஒத்துழைப்புக்கான ஏற்பாட்டைச் செயல்படுத்துதல்.

தூண் V: கல்வி, ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்பு

இந்தியா, நியூசிலாந்தின் கல்வி அமைப்புகள் குறித்த தொடர்ச்சியான தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்காக, இரு கல்வி அமைச்சகங்களுக்கு இடையேயான 2025 கல்வி ஒத்துழைப்பு ஏற்பாட்டைச் செயல்படுத்துதல்.

நிலையான எரிசக்தி மாற்றங்களுக்கு ஆதரவளிக்க உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியுடன் இணைந்து செயல்படுதல்.

தயார்நிலை, அவசரகால பதில் நடவடிக்கை, திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் நியூசிலாந்து தேசிய அவசரகால மேலாண்மை முகமைக்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துதல்.

தூண் VI: பிராந்திய, பலதரப்பு ஒத்துழைப்பு

விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பகுதியை நிலைநிறுத்த, ஆசியான் தலைமையிலான அமைப்பிலும் பிற பிராந்திய மன்றங்களிலும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதல்.

ஐ.நா. சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...