திருவெறும்பூர் அரசு உதவிப்பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியையின், 6 லட்ச ரூபாய் சம்பள நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் வழங்க ரூபாய் .30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) புகழேந்தியை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலராக பணிபுரிந்தவர் புகழேந்தி. இவரது பணிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக தேவி பணிபுரிந்து வருகிறார். அவரது வருடாந்திர ஊதிய உயர்வு TET தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான நிலுவைத் தொகை பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கக் கேட்டு, மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) புகழேந்தியை தேவியின் கணவர் இளமுருகு சந்தித்து கோரிக்கை வைத்த போது வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு செய்ய புகழேந்தி ரூபாய் 30,000 லஞ்சம் கேட்டுள்ளார்
அதன் தொடர்ச்சியாக நேற்று ஆசிரியர் இளமுருகு திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபா பதிவு செய்யப்பட்டு, துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல்,பிரசன்ன வெங்கடேஷ். பாலமுருகு,சேவியர் ராணி மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞச ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது புகழேந்தி லஞ்சப்பணம் ரூபாய் 30,000 ரூபாயை இளமுருகுவிடமிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் கேட்டுப் பெற்ற நிவையில் பணம் பெற்ற கையுடன் பிடிபட்டார். இது தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விசாரணை நடந்து. அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சேர்த்தனர்





கருத்துகள்