மதுரை- திருச்சிராப்பள்ளி நான்கு வழிச்சாலை வஞ்சிநகரத்தில் இன்று அதிகாலை
சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி KMR Tranz தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. கீழ் மற்றும் மேல்தள படுக்கை வசதி கொண்ட பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பைக் கடந்து எதிர் திசையில் செல்லும் சாலையில் நுழைந்த போது, திருச்சிராப்பள்ளி நோக்கி சென்றுச் கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்தின் மீது, வேகமாக மோதிய விபத்தில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 6 பேர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக நெடுஞ்சாலை சுற்றும் காவல்துறையினர் உறுதி செய்தனர்.
அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில், தனியார் ஆம்னி பேருந்து மீண்டும் இடது புறம் வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிறுத்தப் பயணிகள் நிழற்குடையில் மோதியது. முதற்கட்ட விசாரணையில், விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் 3 பேரும், ஆம்னி பேருந்தில் சென்றவர்கள் 2 பேரும், பேருந்து நிறுத்தத்தில் உறங்கியவர் ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்திருப்பதாக கொட்டாம்பட்டி காவல்நிலையத் தகவல். விபத்துக் குறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் சம்பவம் நிகழ்விடத்திற்கு விரைந்த நிலையில் , உள்ளூர் நபர்கள் இரு பேருந்துகளிலும் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் திருநெல்வேலி பாளையங்கோட்டையசிறிய புஷ்பம் (வயது 56), திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டி ஆனந்த ராஜ் (வயது 46), திருச்சிராப்பள்ளி காவல்துறைக் குடியிருப்புக் காலனி சூர்யா (வயது 29), திருவாரூர் முகமது யாசின் (வயது 60), திசையன்விளை ஆபிரகாம் (வயது 40) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
இரு பேருந்திலும் பயணித்த 41 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தை மதுரை சரக டி.ஐ.ஜி அபிநவ் குமார், மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விபத்து தொடர்பாக தகவல் கிடைத்தவுடன், மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.







கருத்துகள்