முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவின் மாநிலத் தலைமையை மாற்ற வேண்டும் தேசியத் தலைமைக்கு கூடடணிக் கட்சி வலியுறுத்தல்

கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு பின்பாக பாஜவுடன் அதுவரை ஒட்டி உறவாடிய


தமிழ்நாடு கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ), ஜான் பாண்டியன் மமுக கட்சிகள் ஏற்கனவே காரணம் கூறாமல் வெளியேறியது ஆனால் 1991 ஆம் ஆண்டு முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையில் பல தலைவர்கள் இருந்த நிலையில் தற்போது சரியில்லாத அதன் பொறுப்பாளர்களை முழுவதும் மாற்ற வேண்டும் என தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.சி.திருமாறன் ஜி தரும் குரல் பலமானது, அதிமுகவில் இருந்து பாஜக மாறி வந்த அதன்
 மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை நீக்கம் செய்தால் மட்டுமே கூட்டணி தொடரும் என கே.சி. திருமாறன் ஜி வெளியிட்ட அறிக்கை. டெல்லி தேசியத் தலைமையை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசியலில்  கூட்டணி கட்சி பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரனை  தேசியத் தலைமை நீக்கம் செய்ய வேண்டும் என கே.சி. திருமாறன் ஜி வெளியிட்ட 'அந்த' அறிக்கை. வி தி லீடராக அண்ணாமலை வெளிவந்த பின் நடக்கும் அடுத்த காட்சி

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையையும், அதன் பொறுப்பாளர்களையும் அடியோடு மாற்ற வேண்டும் என தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.சி. திருமாறன் ஜி தற்போதைய பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார், தமிழ்நாடு பாரரதிய ஜனதா கட்சியின் தலைமை ஒரு தனி 'சிண்டிகேட்' போலச் செயல்படுவதாகவும், இவர்களால் பாஜகவுக்கு அழிவே தவிர எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேசியத் தலைமை உடனடியாக தலையிட்டு இந்த நிர்வாகிகளை மாற்றாவிட்டால், கட்சி இன்னும் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என எச்சரித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பத்து வருடமாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நீடித்து வருவதைச் சுட்டிக்காட்டிய கே. சி.திருமாறன் ஜி, பரரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்தவும்,  ஜனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும் மட்டுமே தாங்கள் இந்தக் கூட்டணியில் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு எந்தவித சுயநலமோ, ஆதாயமோ இல்லாத நிலையிலும், கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டதாகக் கூறுமவர், தற்போதைய மாநிலத் தலைமைக்கு ஒரு கூட்டணியை எப்படி நடத்த வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூடத் தெரியவில்லை எனவும் சாடியுள்ளார். மேலும், பல்வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவர்களைத் தங்கத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டும் தற்போதைய தலைமை, தங்களைப் போன்ற உண்மையான சித்தாந்தவாதிகளைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய பாஜக மாநிலத் தலைமையின் தவறான அணுகுமுறையால் தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் வெற்றி பெற முடியாத தொகுதிகளைக் கேட்டுப் பெற்று, நின்ற வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர் என்ற கடுமையான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். திமுக, அதிமுகவில் இருக்கும் அதிகாரக் கலாச்சாரத்தை பாஜகவிற்குள் இந்தத் தலைமை கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளவர், அடிமட்டத் தொண்டன் எப்போதுமே அடிமட்டத் தொண்டனாகவே இருக்க வேண்டும் என இவர்கள் நினைப்பதாகக் கூறியுள்ளார். “தேர்தல் என்று வந்துவிட்டால் தாங்களே நிற்க வேண்டும், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது” என்ற சுயநலச் சித்தாந்தமே தற்போதைய மாநிலப் பொறுப்பாளர்களிடம் மேலோங்கியுள்ளது என விமர்சித்துள்ளார்.

1991 முதலே ஹிந்து ஜனாதன தர்மத்திற்காகப் போராடி வரும் தங்களைப் போன்றவர்களின் வரலாறு தற்போதைய தேசியத் தலைமைக்குத் தெரியாதென்று குறிப்பிட்டுள்ள கே.சி. திருமாறன் ஜி, தன்னை கூட்டணியை விட்டு வெளியேற்றத் தேர்தல் காலத்தில் பல்வேறு இன்னல்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். முக்குலத்தோர் சமுதாயத்தின் பிரதிநிதியாகவும், அனைத்துச் சமூக மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவும் விளங்கும் தான், கட்சியின் நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பி.எல். சந்தோஷ் ஆகிய பாஜகவின் தேசியத் தலைவர்களுக்கு இந்தக் கோரிக்கையை வைப்பதாகக் கூறியுள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஒட்டுமொத்தத் தலைமையையும் மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளவர், தாங்கள் கட்சி கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை இனி தேசியத் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  சமீப காலமாக அதிமுக கட்சியிலிருந்து பலரும் மாற்று கட்சிக்கு விலகிச் செல்லும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறுவது பாஜக மாநிலத் தலைமை தொடர்ந்து நீடிக்கும் நிலைமை தான் என்பது தற்போது தெரிய வருகிறது.  மத்திய அரசின் உள்துறை அமைச்சர் உளவுத்துறை மூலம் இதை நன்கு அறிவார் அவர் தான் பாஜகவை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேணடும் அதற்கு பாஜக மாநிலத் தலைமை மாறவேண்டும் இதுவே பல தலைவர்கள் கருத்து.   அதிமுக 2023 செப்டம்பர் மாதமே பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலருந்து முற்றிலும் வெளியேறியது பின் சேர்த்து தேர்தலைச் சந்தித்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...