முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபலங்கள் மரணத்தை நேரலை செய்வது குறித்து உரிய முடிவுகாண நடிகை ராதிகா சரத்குமார் கருத்து

நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட கருத்து


பணம் பார்க்கும் செய்தித் தொலைககாட்சிகளுக்கு சம்மட்டி அடி, அவரது செய்திக்குறிப்பில் 

"திரைக்கதை மன்னர்", நடிகர் இயக்குனர் K.பாக்யராஜ் மறைவு மற்றும் நல்லடக்கம் நிகழ்வு குறித்து நடிகை.ராதிகா சரத்குமார்  

"50 ஆண்டுகால நட்போடு பயணித்த நண்பருக்கு ஒரு பிரியாவிடை கொடுத்திருக்கிறோம். ஒரு சிறந்த படைப்பாளி, சிந்திக்க வைத்த எழுத்தாளர், கலையுலக நிகழ்வாக இருந்தாலும் சரி, குடும்ப நிகழ்வாக இருந்தாலும் சரி அவரோடு குடும்பசகிதமாகப் பழகிய நாட்களை நினைவு கூறுகிறோம்.

அவரது இந்த தீடீர் பிரிவு குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையில் இருக்கின்ற சக கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் பேரதிர்ச்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுடன் நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிலையில், திடீரென மறைந்தார், இன்று அவர் நம்மோடு இல்லை என்ற எதிர்பாராத அதிர்ச்சி செய்தி எங்கள் மனதை எப்படி ஆழமான துக்கத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவரை இழந்து தவிக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மனவேதனையோடு இறுதி மரியாதை செலுத்துகின்ற இடம் ஒரு அமைதி இல்லாமல், நிம்மதி இல்லாமல் மனதார அந்த ஆத்மாவிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் நடந்த சில நிகழ்வுகள் மனதிற்கு மிகுந்த வேதனையாக இருந்தது.



சமூக வலைதள தாக்கம், உடனுக்குடன் செய்திகளைத் தந்து யார் முதலிடம் பிடிக்கிறார்கள், அழுகையை எந்த அளவிற்கு zoom செய்து காட்டி ஏற்ற வாசகம் போட்டு அதிகப் பார்வையாளர்களைக் கவர்கிறார்கள் என்று போட்டி போடுவதால், மனிதர்களின் யதார்த்தமான உணர்வுகளை மதிக்க இயலாமல், புரிதல் இல்லாத சமூகமாக இச்சமூகம் தள்ளப்படுகிறதோ என்ற ஐயத்துடன் யோசிக்கத் தோன்றுகிறது.


வருங்காலத்தில் இதே நிலை தொடர்வது தமிழர்களின் மானுட வாழ்வியல், பாரம்பரியக், கலாச்சாரத்திற்கு நல்லதல்ல. சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் ஒருபுறம் இருந்தாலும், அங்கு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள் சமூகத்தில் இனி நடைபெறாமல் தடுத்திடல் வேண்டும்.

காக்கும் அனுசரிக்கும் இடங்களில் வழிமுறைகளை வகுத்து அரசும், திரைலகமும் இணைந்து, துக்கம் கண்ணியமும், மரியாதையும் நடைமுறைப்படுத்த அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் K.பாக்யராஜ் மறைவிற்கு அரசு மரியாதை வழங்கிச் சிறப்பித்த  மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கும், நிகழ்விற்கு ஒத்துழைத்த அமைச்சர் பெருமக்களுக்கும், உரிய பாதுகாப்பு காவல்துறையினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்". என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளா.ர்                                        அதன் தாக்கம் குறித்து இங்கு காணலாம்.பிரபலமானவர்களின் இறப்பு அதாவது அரசியல், சினிமா, சமூக பிரபல கலைஞர்களின் இறுதி நிகழ்வு அஞ்சலி, சடங்குகள் மீது அத்துமீறுவோர் அதிகரித்து வருகின்றனர்  கடந்த காலங்களில் செய்தி இதழ்கள் இது போன்ற தகவல் வந்தால் அல்லது தகவல் கேளவிப்பட்டு அவர் சார்ந்த கடந்த கால நினைவுகள் மற்றும் புகைப்படம் மட்டுமே பிரசுரித்து நினைவை போற்றும் விதமாக அஞ்சலி நிகழ்வாக அது இருந்து வந்தது, ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக பத்திரிகை தர்மம் அறியாத பலரும் செய்தி தொலைக்காட்சி ஊடகத்தில் பணிக்கு வந்த நிலையில் அதன் உரிபையாளர்கள், சம்பந்தப்படட பிரபல நபருக்கு நேரலையில் ஒவி-ஒளிபரப்பு செய்வது தான் தற்போது அருவருப்பாக மாறியுள்ளது, காரணம் 30 தொலைக்காட்சி கேமராக்கள், மற்றும் செய்தி புகைப்படக் கலைஞர்கள், தாங்கள் வித்தியாசமான செய்தி வெளியிடும் நோக்கத்தில் அனுமதி இல்லாமல் அத்துமீறி  காலமான நபர்கள் வீட்டு சமையல் கடடு வரை, வாக்கரிசி போடுவது முதல் அவர்கள் வீடடின் தனிப்பட்ட தகவல் வரை பகிரங்கப் படுத்துவதை தடுக்க வேண்டியது அவசியம் என்பதைத் தான் நடிகை ராதிகா சரத்குமார் கருத்து தற்போது பிரதிபலிக்கிறது, 

இதுவரை சாவு நடந்த வீட்டுக்கு 2010 ஆம் ஆண்டு வரை கேமரா வந்தது கிடையாது.

நமது பார்வையில் 

கையில் ஒரு கேமரா, கூட ஓரிரண்டு நிருபர்கள் பெயரில் எடுபிடிகள் இருந்தால் தனித்த எதை வேண்டுமானாலும் வீடியோ எடுக்கலாம் என்று நினைக்க வேண்டியது. கேமரா இல்லாவிட்டால், இருக்கவே இருக்கு அலைபேசி. அதைக் காட்டியபடி, மைக்கை நீட்டி துக்க வீட்டுக்கு யார் வந்து எங்கு சென்றாலும் வளைத்து வளைத்து வீடியோ எடுக்க வேண்டியது. அவற்றை தங்கள் தொலைக்காட்சி மற்றும் பதிவுகள் இல்லாத சமூக வலைத்தளங்களின் பக்கங்களில் பரபரப்பாகத் தலைப்பு வைத்து வெளியிட வேண்டியது. நிறைய வியூஸ், லைக் கிடைத்தால் அதில் பணம் பார்க்க வேண்டியது. இப்படி நிறைய பேர் சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் அலைகிறார்கள்.

அதிலும் சினிமா      பிரபலங்கள் இறந்துவிட்டால் இவர்க ளுக்கு கொண்டாட்டம் தான். இறந்த வீடு என்றெல்லாம் இவர்கள் நினைப்பதில்லை. இவர்களைப் பொறுத்தவரை அது இவர்கள் 'காசு பார்க்கும்' வீடு. போவோர் வருவோரை எல்லாம் வீடியோ எடுத்துத் தள்ளி, பேட்டி என்ற பெயரில் மைக்கை நீட்டி நேரம் காலம் தெரியாமல் கோமாளித்தனமாக கருத்துக் கேட்கிறார் கள்.

இவர்களின் இந்த செயல் அஞ்சலி செலுத்த வருபவர்களை, அவர்கள் உறவை இழந்து தவிப்பவர்களை அவர்களின் உறவினர்களை மிகுந்த "அதிருப்தி அடையச் செய்கிறது.

அவர்கள் அனுமதி இல்லாமல் இயக்குனர் பாரதிராஜா இறுதிச் சடங்கில் அத்துமீறியவர்கள இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா கடுமையாகவே திட்டினார்.

அதேமாதிரி  இயக்குனர் கே.பாக்யராஜ் நிகழ்ச்சியில் அஞ்சலி மீடியாவின் தொல்லை தாங்காமல் குமுறிய நடிகை ராதிகா சரத்குமார் 

இயக்குனர் கேஃபாக்யராஜ் இறுதிச் சடங்கில் 2 நாட்களாக இப்ப டிப்பட்டவர்களின் தொல்லைகள் அதிகமாகவே இருந்தது. நடிகைகள் ராதிகா, சுகாசினி உள்ளிட்ட பலர் அவர்களை திட்டித் தீர்த்தனர். கமலஹாசன் வந்தபோது காரை விட்டு சிரமப்பட்டு இறங்கும் சூழல் ஏற்பட கோபத்துடன் கேமராக்களை தட்டிவிட்டார்.

ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. கூல் சுரேஷ் என்ற கோமாளி நடிகன் கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் முருங்கைக் காயுடன் சென்று அஞ்சலி செலுத்தி சர்ச்சையாகி. இப்படிப்பட்ட விளம்பரப் பிரியர்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.

நடிகை ராதிகா சரத்குமார் சொன்னது மாதிரி சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் மரணம் சர்க்கஸ் கூடாரமாக மாறி வருகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். இனி வருங்காலங் களில் இப்படிப்பட்ட வீடியோ கோஷ்டிகளுக்கும் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கும் தடை விதிக்க

அரசும் மற்றும் தியையுலக சங்கங்களும் அரசியல் கட்சிகளின் தலைமையும் உரிய உத்தரவு மூலம் உணர்த்த வேண்டும். மரணத்தை உரிய மரியாதையுடன் அனுக வேண்டும்.

சினிமா சார்பாக உள்ள  சங்கங்களும்  தமிழ்நாடு அரசும் இதற்கு முடிவு காணும் வகையில் சங்கக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அதைக் கட்டாயம் பின் பற்ற வேண்டும். அதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களான மஹாராஷ்ட்ரா மும்பை, ஆந்திரப் பிரதேசம் , கேரளம் போன்ற இடங்களில் இந்தக் கூத்துகள் இல்லை. சினிமா பிரபலங்கள் இறந்தால் அந்த வீட்டுக்குள் எந்த மீடியாவுக்கும் அனுமதி இல்லை. விஐபிகள், வருகிறவர்கள், போகிறவர்களிடம் பேட்டி எடுப்பது இல்லை. அவர்களை துரத்துவதும் இல்லை.

மறைந்தவர்களுக்கு, அவர்களின் குடும்பத்தினருக்கு மீடியாவினர் மரியாதை கொடுக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட உணர்வை மதிக்கிறார்கள். சமீபத்தில் பாடகி ஆஷா போஸ்லே மறைந்த போதும் அப்படிதான் நடந்தது. அந்த நாகரிகம் தமிழ்நாட்டிலும் வர வேண்டும்.

இங்கு பத்திரிகை தொலைக்காட்சி அறியாத கார்பொரேட் ஹெச் ஆர் கள் தங்களது  செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு உரிய சமூக பயிற்சி அளிக்க வேண்டும் 

ஒருவரின் சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கு தொடங்கும் இடத்தில் முடிகிறது" என்பது ஆங்கிலத்தில் கூறப்படும் விளக்கம். அதாவது எவ்வளவு கையை வீசினாலும் அது அடுத்தவரின் மூக்கில்படும்போது எதிராளியின் சுதந் திரம் பறிபோகிறது. அப்படித்தான் பலரும் அடுத்தவர் மூக்குக்கு முன் மைக் நட்டுவதை இனியாவது மீடியாக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு  உரிய தீர்வு விரைவில் காணவேண்டும். சமீபத்தில் காலமான பிரபல நடிகர் அஜீத்குமார் தாயார் மரணத்தில் அவர்கள் சுய முயற்சி காரணமாக இவர்களை வீட்டுக்கு உள் படமெடுக்க அனுமதிக்காத நிலையில் தெருவில் கூட நின்று இந்த நிகழ்வில் நேரலை செய்தனர் சிலர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...