ஆட்சிக் கவிழ்ப்பு ஊழல் பேரம் தேடுதல் தீவிரம் முன்னால் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை சுற்றிவளைத்த காவல்துறை
பேரம், கூட்டு சதி நடவடிக்கை மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அரசைக் கவிழ்க்க ரூபாய் 700 கோடி வரை பேரம் நடந்த நிகழ்வில் இதுவரை வி.செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒன்பது நபர்கள் கைதாகியுள்ளனர், ஆளும் தவெக கூட்டணி அரசைக் கவிழ்க்க ரூபாய் 700 கோடி பேரம் பேசப்பட்டதாக காவல் உளவுத்துறை அம்பலப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வி செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் ஆளுநர் உத்தரவின் பேரில் நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா உள்ளிட்ட சில எம்.எல்.ஏ-க்களுக்கு தலா ரூபாய் 35 கோடி வீதம் லஞ்சம் பேரம் பேசப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு விவகாரத்தில், தனியார் யூடியூபரும் ஐபிடிஎஸ் நடத்தும் திருநாவுக்கரசு உள்ளிட்ட மூன்று பேர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் தற்போது 9 நபர்களாக அது உயர்ந்துள்ளது இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் தான் சடடமனற உறுப்பினர்களை விலைக்கு வாங்க உத்தரவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஊத்தங்கரை (தனி) தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவை வேறு கட்சிக்கு மாறுமாறு கூறி பேரம் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில்
உளவுத்துறை அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ளன. அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வி.செந்தில் பாலாஜி தப்பிவிடாத அளவு சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
ஊத்தங்கரை தனித் தொகுதி தவெக எம்.எல்.ஏ பேர வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம்.
முன்னாள் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தில் பெரும் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். சுமார் 2000 டாஸ்மாக் கடைகளை பினாமிகளுக்கு வழங்கி, அரசுக்குச் செல்ல வேண்டிய பல கோடி ரூபாய் வருமானத்தை கரூர் கம்பெனிக்கு தாரைவார்த்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த வழக்கை சரியாக விசாரித்தால், செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையிலிருந்து வெளியே வர முடியாது என மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மற்றும் மதுபான நிறுவனங்களில் ரூபாய் .1000 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் களத்தை அதிரவைக்கும் விதமாக,தற்போது ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் .35 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்ட இந்த பேரத்திற்கு வி.செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், 5 பேரை அழைத்து வந்தால் ஆளுக்கு ரூபாய் 25 கோடி பணம் திமுகவில் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பதவியும் வழங்கப்படும் என பேரம் நடந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தவெக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகவே கணிக்கின்றனர். ஊத்தங்கரை தனித் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவை அணுகி கட்சி மாற பேரம் பேசியதாக யூ-டியூபர் IDPS திருநாவுகரசு ஏற்கனவே கைது
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான மேலும் இருவர் கைதாகினர்
கரூரில் சக்தி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் திமுக பிரமுகர்கள் கார்த்திக் மற்றும் ரமேஷை சென்னை காவல்துறையால்
கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர்கள் இருவரின் வீடுகளிலும் காவல்துறை சோதனை மூலம் பணம் பறிமுதல், விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்
ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ மட்டுமின்றி மேலும் சில தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக அவிநாசி தொகுதி எம்.எல்.ஏவும் தற்போது அமைச்சருமான கமலியிடமும் பேரம் நடந்துள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக எம்.எல்.ஏக்கள் யார் யாரிடம் பேரம் பேசப்பட்டது? யார் யார் இந்த பேரத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணையில் களம் இறங்கிய காவல்துறை
வேலூர் எம்.எல்.ஏ வினோத் கண்ணன், கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ முகுந்தன், நாமக்கல் எம்.எல்.ஏ திலீப், பொன்னகரம் தொகுதி எம்.எல்.ஏ கஜேந்திரன், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ திருப்பதி ஆகியோரிடமும் பேரம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேரம் பேசியதாக மொத்தம் ஒன்பது நபர்கள் இதுவரை கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனித் தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல்துறை ஆணையரிடம் கொடுத்த புகாரில், யூடியூபர் திருநாவுக்கரசு என்னிடம் போன் பேசினார். ஒரு பெரிய கட்சி கேட்டுக்கொண்டதின் பேரில் நான் உங்களிடம் பேசுகின்றேன். நீங்க கட்சி மாறினால் ரூபாய் .35 கோடி தருவதாகவும், சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாகச் சொன்னால் போதும் என்று கூறி பேரம் பேசியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சென்னையை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு, தியாகராஜன் மற்றும் திமுக ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த கரூர்- ஈரோடு சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். சென்னையில் இருந்து கரூர் சென்று இருவரையும் திருவல்லிக்கேணி காவல்துறை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக், திமுகவின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
வேலூர் எம்.எல்.ஏ வினோத் கண்ணன்,
கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ முகுந்தன், நாமக்கல் எம்.எல்.ஏ திலீப்,
பொன்னகரம் தொகுதி எம்.எல்.ஏ கஜேந்திரன், திருப்பத்தூர் எம்.எல்.ஏ திருப்பதி
அவிநாசி தொகுதி எம்.எல்.ஏவுமான கமலி
எம்.எல்.ஏ இளையராஜா மட்டுமின்றி மேலும் 6 எம்.எல்.ஏக்களிடம் இதே போன்று பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக தற்போது அமைச்சரும், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏவுமான கமலியிடமும் பேரம் நடந்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.முன்னால் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரை சென்னை மற்றும் கரூர் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனித் தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவிடம் ரூபாய் .35 கோடி பேரம் பேசப்பட்டதாக புகார் அடிப்படையில் பதிவான எஃப்.ஐ.ஆர் சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் சிலரது பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்த்துள்ளது. இந்த ஊழல் பேரம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கரூரைச் சேர்ந்த ரமேஷ், கார்த்திக், மற்றும் நாடார்கள் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் ஸ்ரீநிவாசன் உட்பட இதுவரை 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை மற்றும் கரூரில் உள்ள வி.செந்தில் பாலாஜியின் இல்லங்கள் மற்றும் பண்ணை வீடுகளில் தனிப்படை காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், எந்த நேரத்திலும் அவர்கள் கைது செய்யப்படலாம் என்பதால் சென்னை MRC நகரில் உள்ள அவரது இல்லப் பகுதி மற்றும் கரூர் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.








கருத்துகள்