தமிழ்நாடு விசாரணை நீதிமன்றங்களுக்கான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான அரசாணைகள் மாவட்ட வாரியாக வெளிவரத் துவங்கியுள்ளன.
சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இது குறித்து வெளியிட்ட விபரம் நியமன நடைமுறையில் தகுதியற்றவர்கள் எவரும் நியமிக்கப்படாமல் இருக்க, தற்போது வெளியிடப்படும் அனைத்து அரசாணை நியமனங்களும் ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக வழங்கப்படுகின்றன. இவர்களின் நீதிமன்றச் செயல்பாடுகள், திறமை மற்றும் பணிகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே நிரந்தரமாக்கப்படுவர்.
தமிழ்நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் உள்ளிட்டவைகளில் மொத்தம் 800 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் இந்த முறையில் நிரப்பப்படுகின்றன 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் நிர்வாக ரீதியான தனிநபர் பின்னணித் தகவல்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நேற்று மாலை முதல் அரசாணைகள் வெளியிடப்படுகின்றன. மீதமுள்ள மாவட்டங்களுக்கான அனைத்து நியமன நடைமுறைகளும் மற்றும் அரசாணை வெளியீடுகளும் நாளை மாலைக்குள் முழுமையாக நிறைவடையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்களை மறுத்தவர் கடந்துபோன 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை 100 சதவீதம் நேர்மையாகவும், தகுதி அடிப்படையிலும் மட்டுமே நியமனங்கள் நடைபெறுகின்றன என விளக்கமளித்தார். யாராவது தகுதியற்ற நபர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடியாக அவர்களை மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது "மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவறாக தகவல்கள் பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. மாவட்ட அளவில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தகுதியானவர்கள் முறைப்படி பரிசீலனை செய்யப்படுகின்றனர்.
பணம் பெற்றுக்கொண்டு தவறான நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் உண்மை இல்லாதது. நேற்று மாலைதான் இதற்கான அரசாணையே வெளியிடத் துவங்கியது. அதற்குள் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் நடைபெறும் ‘காவல்துறை வெரிஃபிகேஷன்’ உள்ளிட்ட சரிபார்ப்பு நடைமுறைகளைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு வதந்திகளைப் பரப்பியுள்ளனர் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100 சதவீதம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துள்ளது. யாராவது பணம் வாங்கிக்கொண்டோ அல்லது அமைச்சரின் பெயரையோ, கட்சியினர் பெயரையோ தவறாகப் பயன்படுத்தினாலோ உடனடியாகப் புகார் அளிக்கலாம். புகார் அளித்தால் அவர்கள் மீது எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் தற்போது வழங்கப்படும் இந்த நியமனங்கள் அனைத்தும் ஆறுமாத காலத்திற்கு தற்காலிகமானது மட்டுமே. அதன் செயல்பாடுகளைப் பொறுத்தே நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். தற்காலிகமாக நியமிக்கப்படுவதால், யாராவது தகுதியற்ற நபர்கள் இருப்பது தெரியவந்தால், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடியாக அவர்களை மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி எந்தவொரு தவறும் நடக்காமல், நேர்மையான முறையில் இந்த நியமனங்கள் நடைபெறுகின்றன.
தவெக வழக்கறிஞரே லஞ்சம் தொடர்பான குற்றாச்சாட்டை முன் வைத்தது குறித்த கேள்விக்கு, ” உள்ளே இருக்கும் போட்டி காரணமாகச் சிலர் இதுபோன்ற புகார்களைக் கூறுவதாக் தெரிவித்தார் ஊழலற்ற நேர்மை ஆட்சி' பிரசாரத்தை முன்னெடுத்து ஆட்சியைப் பிடித்தது தமிழக வெற்றிக் கழகம் ஆனால் ஆட்சிக்கு வந்த சில தினங்களிலேயே கட்சி நிர்வாகிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகப் பலவிதப் புகார்கள். அதில்
ஆவின் தலைவர் பதவி ரூபாய் .50 லட்சம். அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூபாய் .30 லட்சம் என வசூல் சர்ச்சையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் 'குஷி' மோகன் மீது பலவித குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார் தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி.
அவரது கட்சி நிர்வாகி ஒருவருடன் அவர் பேசும் ஒலிப்பதிவு சமூக இணைய வலைதளங்களில் பரவியது தற்போது அது நெருப்பாக தகித்துக் கொண்டுள்ளது அந்த ஒலிப்பதிவில், 'நான் எவ்வளவு கஷ்டப்படற குடும்பம் தெரியுமா? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் நான்.
தளபதி வெற்றிபெற்றதும், அவர் எனக்காகவே வெற்றிபெற்றதாக நினைத்தேன். ஏனென்றால் நாம் அரசு தரப்பு வழக்கறிஞராவோம். வாழ்க்கையில் முன்னேறுவோம் என்று நினைத்தேன்.
ஆனால் அவர் (குஷி மோகன்) என்னை மிகவும் கேவலமாக நடத்தினார். அ.தி.மு.க, தி.மு.க-வில் அந்தக் கட்சிக்காரர்களைத் தவிர வேறடயாருக்கும்
கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம் கட்சியில் தான் மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு கொடுக்கிறார்கள்' என வருகிறது அந்த ஒலிப்பதிவு .`வழக்கறிஞர் ஞானசௌந்தரி தரப்பில் கூறும் போது, "தளபதி கட்சி ஆரம்பித்த சமயத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 11 வழக்கறிஞர்கள் தேவை எனக் கேட்டார்கள். ஆனால் அப்போது விழுப்புரத்தில் ஞானசுந்தரி உட்பட நான்கு பேர்தான் ரசிகர்கள் என்ற முறையில் பெயர் கொடுத்தார்கள்.
அதில் மூன்று பேர்தான் சீனியர். எங்களுடன் ஏழு ஜூனியர் வழக்கறிஞர்களை சேர்த்து, ஆன்லைனில் அப்லோட் செய்தோம். அப்போது அனைத்து செலவுகளையும் அவர்கள் தான் செய்தார்கள்.இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர் குஷி மோகன் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது,அதற்கும் அவர்கள்தான் ஆஜரானார்கள். அப்படி உள்ள போது அவர்களை விட்டுவிட்டு, அரசு வழக்கறிஞராக மிகவும் பிற்படுத்தப்ப்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு பேரைப் போட்டிருக்கிறார் 'குஷி' மோகன். ஒரு நியமனத்துக்கு ரூபாய் .5 லட்சம் முதல் ரூபாய் .30 லட்சம் வரை வாங்கிக் கொண்டு தான் நியமித்திருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார். அதற்கு, ``வழக்கறிஞர் அணியில் பொறுப்பு வேண்டும் என்று கேட்டு வந்தார். ஆனால் எந்தப் பொறுப்பையும் அவருக்கு வழங்கவில்லை. இப்போது தளபதி ஆட்சி அமைந்ததும், இப்படி ஒரு வாய்ப்பிருக்கிறது எனக்கு கொடுங்கள் என்று கேட்டார்.
மற்ற கட்சிகளில், அந்தந்த கட்சிக்காரர்களுக்குத்தான் கொடுப்பார்கள் என்றார். உங்கள் கோரிக்கையை தலைமைக்கு தெரிவிக்கிறேன் என்று கூறிவிட்டேன். இப்போது அந்த ஒலிப்பதிவில் கூட அவர், அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு பணம் வாங்குவதாக பேசிக் கொள்கிறார்கள் என்றுதான் கூறுகிறார். பெண் என்பதால் அவர் மீது நாங்கள் எந்த வழக்கையும் போடவில்லை” என்கிறார் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்.எல்லாம் சரி இதற்கு ஒரு தகுதித் தேர்வு வைத்து எடுத்தால் இது போன்ற தவறுகள் தடுக்க வாய்ப்பாகும்








கருத்துகள்