இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தனது 88 ஆவது வயதில் மைசூருவில் காலமானார்.
திரையுலகினராலும் ரசிகர்களாலும் அன்போடு "ஜானகி அம்மா" என்றும், "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" (இசைக்குயில்) என்றும் அவர் போற்றப்படுகிறார்.
1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா கிராமத்தில் பிறந்தார்.
மூன்று வயது முதலே பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
1957 ஆம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு' தமிழ்த் திரைப்படத்தில் "பெண் என் ஆசை பாழானது" என்ற பாடலின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, கொங்கணி, துளு, சிங்களம், ஆங்கிலம் உட்பட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடியுள்ளார்.
ஒரு சிறு குழந்தை, 16 வயதுப் பெண், நடுத்தர வயதுப் பெண் மற்றும் வயதான பாட்டி என எந்தவொரு வயதினருக்கும் ஏற்கும் வகையில் தனது குரலை மாற்றிப் பாடும் அசாத்தியத் திறமை பெற்றவர். எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் போன்ற தலைசிறந்த பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளியான 'திருநாள்' என்ற படத்தில் பாடிய பிறகு, இனி திரைப்படங்களில் பாடப் போவதில்லை எனத் தனது 60 ஆண்டு கால இசைப் பயணத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.
'பதினாறு வயதினிலே' (செந்தூரப்பூவே), 'தேவர் மகன்' (இஞ்சி இடுப்பழகி) உள்ளிட்ட பாடல்களுக்காக 4 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
மாநில விருதுகள்: பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும், 12 முறை ஆந்திரப் பிரதேச அரசின் நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.
2013 ஆம் ஆண்டு தனக்கு மிகவும் தாமதமாக இந்த விருது அறிவிக்கப்பட்டதாகக் கூறி, இந்திய அரசின் பத்ம பூஷண் விருதை அவர் மறுத்தார்.
55.மொட்டு விட்ட முல்லை (இன்று நீ நாளை நான்)
56.நேத்து ராத்திரி (சகலகலா வல்லவன்)
57.அடடட மாமரக்கிளியே (சிட்டுக் குருவி)
58.கூண்டுக்குள்ள என்ன (சின்ன கவுண்டர்)
59.என்னை மானமுள்ள (சின்ன பசங்க நாங்க)
60.ராதைக்கேற்ற கண்ணணோ (சுமைதாங்கி)
61.சலக்கு சலக்கு சேலை (செம்பருத்தி)
62.வளையல் சத்தம் யம்மா (சேலம் விஷ்ணு)
63.ராத்திரியில் பூத்திருக்கும் (தங்க மகன்)
64.சுந்தரி கண்ணால் (தளபதி)
65.சந்தைக்கு வந்த கிளி (தர்மதுரை)
66.நீதானா நீதானா (தாலாட்டு பாட வா)
67.சும்மா நிக்காதிங்க (தூங்காதே தம்பி தூங்காதே)
68.இஞ்சி இடுப்பழகா (தேவர்மகன்)
69.தேவ மல்லிகை பூவே (நடிகன்)
70.கொட்ட பாக்கும் (நாட்டாமை )
71.பெண் மானே சங்கீதம் (நான் சிகப்பு மனிதன்)
72.பிள்ளை நிலா (நீங்கள் கேட்டவை)
73.என் ஜீவன் பாடுது (நீ தானா அந்தக்குயில்)
74.மணி ஓசை கேட்டு (பயணங்கள் முடிவதில்லை)
75.அசைந்தாடும் காற்றுக்கும் (பார்வை ஒன்றே போதுமே)
76.கருத்த மச்சான் (புது நெல்லு புது நாத்து)
77.மெட்டி மெட்டி (புள்ளக்குட்டிக்காரன்)
78.நெஞ்சிக்குள்ளே இன்னாருன்னு (பொன்னுமணி)
79.ஆசை அதிகம் வச்சு (மறுபடியும்)
80.கன்னி மனம் கெட்டு (மணமளே வா)
81.முதல்வனே (முதல்வன்)
82.செக்க செக்க செவந்த (வல்லரசு)
83.பொன்மேனி உருகுதே (மூன்றாம் பிறை)
84.ஊருசனம் தூங்கிருச்சு (மெல்ல திறந்தது கதவு)
85.வா வா பூவே வா (ரிஷி)
86.வெள்ளை புறாவொன்று (புதுக்கவிதை)
87.கோழி கூவும் நேரத்துல (வண்ண வண்ண பூக்கள்)
88.சின்ன ராசாவே (வால்டர் வெற்றிவேல்)
89.வா வா அன்பே பூஜை (ஈரமான ரோஜாவே)
90.பாம்பே டையிங் (சிஷ்யா)
91.இவளொரு இளங்குருவி (பிரம்மா)
92.தாலாட்டுதே (கடல் மீன்கள்)
93.காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
94.ஒட்டகத்தை கட்டிக்கோ (ஜென்டில்மேன்)
95.காதல் கடிதம் தீட்டவே (ஜோடி)
96.கண்ணன் மனம் (வசந்த ராகம்)
97.மஞ்சள் பூசும் (சக்கரை தேவன்)
98.மூக்குத்தி பூ மேலே (மெளன கீதங்கள்)
99.மந்திரம் சொன்னேன் (வேதம் புதிது)
100.மல்லியப்பூ பூத்திருக்கு (தாய் மேல் ஆணைபுகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு. (1938 -2026) பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக அஞ்சலி செலுத்துகிறது.
17 மொழிகளில் பாடிய இசைக்குயில், சினிமாவில் பாடுவதை நிறுத்திய (2016- 2026) அதாவது பத்தாவது ஆண்டில், மைசூரில் உயிர்ப் பறவை பிரிந்தது .
இதுவரை 48 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய ஆயிரம் பிறை கண்ட ஜானகியம்மாள் அனைவரையும் வியக்க வைத்தவர்.


கருத்துகள்