வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகில் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்த விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக
வியட்நாமிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று தெரிவித்தது. இந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து நபர்கள் பலியானதாகவும், கேரளத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் பலியானதாகவும் இந்தியத் தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது அதிகாரிகள் தரப்பு முதல்கட்ட தகவல்களின்படி, 32 சுற்றுலாப் பயணிகள், சில பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த அதிவேகப் படகு கவிழ்ந்தது.
அதில் 23 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏஜி 26751 என்ற பதிவு எண் கொண்ட இந்த அதிவேகப் படகு, 'மின் ஹுய் ஃபூ குவோக் டிரேடிங் அண்ட் டூரிசம் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்திற்குச் சொந்தமானது. வியட்னாமில் நடந்த படகு விபத்தில் திருச்சிராப்பள்ளி, பழநி, தர்மபுரி, சேலம், வேலூரை சேர்ந்த 7 பேர் பலியாகினர். திருச்சிராப்பள்ளி கிராப்பட்டி அருணாசலம் நகர் அழகுராஜன் (வயது 40), திருவனைக்காவல் கீழகொண்டையாம் பேட்டை பாலாஜி(வயது 40), பீமநகர் யானைக்கட்டி மைதானம் ஷேக் அப்துல்லா(வயது 41) ஆகிய 3 பேர் வியட்நாமில் நடந்த படகு விபத்தில் இறந்தனர். இறந்த 3 பேரும் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளனர்.தமிழ்நாடு அரசுத் தரப்பு அறிவிப்பில்
வியட்நாம் நாட்டின் படகு விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்தியாவிற்குள் 1800 309 3793 என்ற எண்ணும் வெளிநாடு +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு +91 80 6900 9901 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் ஏற்பட்ட படகு விபத்து தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளதாகவும், இது தொடர்பாக நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் இருந்து காவல்துறை டிஐஜி ஒருவர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்உயிரிழந்தோரின் உடல்களை விரைவாகக் கொண்டு வரவும்,
பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை ஒருங்கிணைக்கவும் சேலம் டிஐஜி சாந்தோஷ் ஹடிமானி ஐபிஎஸ்ஸை ஹோ சி மின் நகருக்கு அனுப்பியுள்ளார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்.





.webp)




கருத்துகள்