நாகர்கோயில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியான வியாபாரி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணமடைந்த சம்பவம்
தமிழ்நாட்டின் சிறை நிர்வாகத்தின் மீதும், சட்டம் ஒழுங்கு அமைப்பின் மீதும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜூலை மாதம் 9 ஆம் தேதி அன்று தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட 35 வயது சபரிவர்மன், ஜூலை மாதம் 13 ஆம் தேதியன்று அதிகாலையில் சிறையில் உயிரிழந்த நிலையில் . உடல் நலக் குறைவென் முதலில் கூறப்பட்டாலும், நீதித்துறையின் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 19 காயங்கள் கண்டறியப்பட்டதாகத் தகவல் தெரிலிக்கின்றன.
முன்பே ஊனமுற்ற வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. CCTV காட்சிகளில் சிறை அலுவலர்களும் கைதிகளும் அவரைத் தாக்கியது பதிவாகியுள்ள தகவல்கள் வெளியாகின, தொடர்ந்து மூன்று சிறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறுகிறது.
இது வெறும் தனிப்பட்ட சம்பவமல்ல. இது தொடர்ச்சியான காவல் துறை மற்றும் சிறை அலுவலர்களின் அலட்சியம், மூர்க்கத்தனம் ஆகியவற்றின் வெளிப்பாடு. ஒரு உடல் ஊனமுற்ற நபர், சிறிய வியாபாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு முன்பே சிறையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இந்த மரணம் தமிழ்நாட்டில் காவல் நிலைய மற்றும் சிறை மரணங்கள் தொடர்பான பழைய நிலையை மீண்டும் தந்தது சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய அநீதிகள், ஜனநாயகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்பவையாகும்.
சிறை என்பது தண்டனை அனுபவிக்கவும், அவர்கள் திருந்தவதற்கான இடம்; சித்திரவதை மையம் அல்ல. விசாரணைக் கைதிகள் குற்றவாளிகளும் அல்லர்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, மருத்துவ உதவி, மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இங்கு நடந்தது முற்றிலும் எதிர்மாறானது. CCTV இருந்தும், அலுவலர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இதில் மூன்று பேரை மட்டும் கைது செய்வது போதாது. இந்தச் சம்பவத்தில் உயர் அதிகாரிகளின் பொறுப்பும், சிறைத்துறை அமைப்பு ரீதியான தோல்வியும் சரியாக விசாரிக்கப்பட வேண்டும். முழுமையான, சுயாதீன விசாரணை நடத்தி, குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். என்பதும்
அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யப்படும் போது பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. உடல் ஊனமுற்ற ஒருவருக்கு கூட இத்தகைய கொடுமை நிகழ்ந்திருப்பது, சமூக நீதியின் பெயரால் நாம் கட்டமைத்திருக்கும் அமைப்புகளின் தோல்வியை உணர்த்துகிறது . அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறைச் சீர்திருத்தம், அதிகாரிகளுக்கு பயிற்சி, CCTV கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இத்தகைய மரணங்கள் தொடரும்; மக்களின் நம்பிக்கை சிதைந்து போகும்படியாகும்
சபரிவர்மனின் மரணம் சிறைத்துறையில் மாற்றத்துக்கான திருப்புமுனையாக அமைய வேண்டும். காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் மக்களின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டுமே தவிர, அச்சுறுத்தலாக மாறக் கூடாது. இந்த அவலத்துக்கு கடும் கண்டனம். உண்மை வெளியாகட்டும்; நீதி நிலைநாட்டப்படட்டும்.தடைசெய்த பான்பராக் விற்றதாகக் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கொலை. எதிர்த் தாக்குதலோ, தடுத்து தற்காத்துக் கொள்ளும் வாய்ப்போ அமையாத, உடற்கூறு கொண்ட மனிதனுக்கு சகமனிதன் தான் உதவி. இங்கே அது தலைகீழாகி அப்படி ஒரு மனிதரை அடித்தே கொலை செய்த காவல் பணியாளர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் ( வயது 34). மாற்றுத்திறனாளி.
அவரது பெட்டிக் கடையிலிருந்து பத்து பாக்கெட் பான்பராக் -குட்காவை தென் தாமரைக்குளம் காவல் நிலையத்தினர் பறிமுதல் மற்றும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு போனதில்
"சொந்தப் பயன்பாட்டுக்காக நான் வைத்திருந்த பத்து பான்பராக் பாக்கெட்டுகளை தான் காவல்துறையினர் கைப்பற்றினர், மற்றபடி நான், பான்பராக் விற்பனை செய்யவில்லை" எனக் கதறிய சபரிவர்மனின் குரல் யாருக்கும் கேட்காமல் போகவே, பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு, கைது, ரிமாண்ட் என்று, சிறையில் சேர்த்திருக்கிறது. இந்த நிலையில் முன்தினம், மனு போட்டு கணவனை கைக்குழந்தையோடு போய் நாகர்கோவில் கிளைச்சிறையில் பார்த்துத் திரும்பிய மனைவிக்கு அடுத்த நாள் கணவன், இல்லை
என்பதை ஏற்க முடியவில்லை.
சபரிவர்மன் உடலில், 19 இடங்களில் கொடுங்காயம் இருந்ததை, உடற்கூராய்வு முடித்து வெளியான தரவுகள் உறுதிப்படுத்துகிறது.
கைகள், கால்கள் போக எஞ்சியிருந்த நெஞ்சகப் பகுதியும் குண்டாந்தடிகளால் கொடூரமாக கையாளப்பட்டிருப்பதை அந்த அறிக்கை அடையாளப்படுத்துகிறது.
ஜெயராஜ் -பென்னிக்ஸ் போன்ற அப்பாவி அப்பா-மகனை அடித்தே கொன்ற தூத்துக்குடி சாத்தான் குளம் காவலருக்கான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி ஆறுமாத காலம்
கூட ஆகவில்லை. அதற்குள்காவல்துளைக்கு என்ன அவசரமோ, அடுத்த தீர்ப்பை விரைந்து வாசிக்கும் சூழலை, உருவாக்கியுள்ளனர்.
நாகர்கோவில் கிளைச்சிறையின் தலைமை வார்டன் ஜெகன் மற்றும் காவலர்கள் சிவகுமார், திருவிடைநம்பி ஆகிய மூவர், இந்த 'லாக்கப் மரணம் ' விவகாரத்தில் கைது -சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபரிவர்மன் மரணத்துக்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு அல்லவா பதிவு செய்திருக்க வேண்டும் !
தமிழ்நாட்டை எந்த முதலமைச்சர் ஆண்டாலும் அவர்களின் ஆட்சி காலத்தில் கொடூரமான லாக் அப் மரணங்கள், குறைந்த பட்சம் நடந்துவிடுகிறது.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஆட்சியின் அறுபத்தி ஐந்து நாள் ஆட்சியில் முதல் கொலை பலிக் கணக்கை நாகர்கோயில் காவல் துறை - சிறைக் காவலர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.
முளைக்கிற போதே முனை முள்ளை முறித்துப்போட்டு விட்டால் இனி ஒரு சிக்கலும் முளைக்காது.











கருத்துகள்