முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகர்கோயில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி கொலையில் காவல் மற்றம் சிறைப் பணியாளர்கள் மூவர் கைது

நாகர்கோயில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியான வியாபாரி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணமடைந்த சம்பவம்


தமிழ்நாட்டின் சிறை நிர்வாகத்தின் மீதும், சட்டம் ஒழுங்கு அமைப்பின் மீதும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜூலை மாதம் 9 ஆம் தேதி அன்று தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட 35 வயது சபரிவர்மன், ஜூலை மாதம் 13 ஆம் தேதியன்று அதிகாலையில் சிறையில் உயிரிழந்த நிலையில் . உடல் நலக் குறைவென் முதலில் கூறப்பட்டாலும், நீதித்துறையின் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 19 காயங்கள் கண்டறியப்பட்டதாகத் தகவல் தெரிலிக்கின்றன. 


முன்பே ஊனமுற்ற வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. CCTV காட்சிகளில் சிறை அலுவலர்களும் கைதிகளும் அவரைத் தாக்கியது பதிவாகியுள்ள தகவல்கள் வெளியாகின, தொடர்ந்து மூன்று சிறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறுகிறது.


இது வெறும் தனிப்பட்ட சம்பவமல்ல. இது தொடர்ச்சியான காவல் துறை மற்றும் சிறை அலுவலர்களின் அலட்சியம், மூர்க்கத்தனம் ஆகியவற்றின் வெளிப்பாடு. ஒரு உடல் ஊனமுற்ற நபர், சிறிய வியாபாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு முன்பே சிறையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இந்த மரணம் தமிழ்நாட்டில் காவல் நிலைய மற்றும் சிறை மரணங்கள் தொடர்பான பழைய நிலையை மீண்டும் தந்தது சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய அநீதிகள், ஜனநாயகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்பவையாகும்.

சிறை என்பது தண்டனை அனுபவிக்கவும், அவர்கள் திருந்தவதற்கான இடம்; சித்திரவதை மையம் அல்ல. விசாரணைக் கைதிகள் குற்றவாளிகளும் அல்லர்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, மருத்துவ உதவி, மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இங்கு நடந்தது முற்றிலும் எதிர்மாறானது. CCTV இருந்தும், அலுவலர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இதில் மூன்று பேரை மட்டும் கைது செய்வது போதாது. இந்தச் சம்பவத்தில் உயர் அதிகாரிகளின் பொறுப்பும், சிறைத்துறை அமைப்பு ரீதியான தோல்வியும் சரியாக விசாரிக்கப்பட வேண்டும். முழுமையான, சுயாதீன விசாரணை நடத்தி, குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். என்பதும் 

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யப்படும் போது பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. உடல் ஊனமுற்ற ஒருவருக்கு கூட இத்தகைய கொடுமை நிகழ்ந்திருப்பது, சமூக நீதியின் பெயரால் நாம் கட்டமைத்திருக்கும் அமைப்புகளின் தோல்வியை உணர்த்துகிறது . அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறைச் சீர்திருத்தம், அதிகாரிகளுக்கு பயிற்சி, CCTV கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இத்தகைய மரணங்கள் தொடரும்; மக்களின் நம்பிக்கை சிதைந்து போகும்படியாகும்

சபரிவர்மனின் மரணம் சிறைத்துறையில் மாற்றத்துக்கான திருப்புமுனையாக அமைய வேண்டும். காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் மக்களின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டுமே தவிர, அச்சுறுத்தலாக மாறக் கூடாது. இந்த அவலத்துக்கு கடும் கண்டனம். உண்மை வெளியாகட்டும்; நீதி நிலைநாட்டப்படட்டும்.தடைசெய்த பான்பராக் விற்றதாகக் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கொலை. எதிர்த் தாக்குதலோ, தடுத்து தற்காத்துக் கொள்ளும் வாய்ப்போ அமையாத, உடற்கூறு கொண்ட மனிதனுக்கு சகமனிதன் தான் உதவி. இங்கே அது தலைகீழாகி அப்படி ஒரு மனிதரை அடித்தே கொலை செய்த காவல் பணியாளர்கள். 





கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் ( வயது 34). மாற்றுத்திறனாளி. 

 அவரது பெட்டிக் கடையிலிருந்து பத்து பாக்கெட் பான்பராக் -குட்காவை தென் தாமரைக்குளம் காவல் நிலையத்தினர் பறிமுதல் மற்றும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு போனதில்

"சொந்தப் பயன்பாட்டுக்காக நான் வைத்திருந்த பத்து பான்பராக் பாக்கெட்டுகளை தான் காவல்துறையினர் கைப்பற்றினர், மற்றபடி நான், பான்பராக் விற்பனை செய்யவில்லை" எனக் கதறிய சபரிவர்மனின் குரல் யாருக்கும் கேட்காமல் போகவே, பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு, கைது, ரிமாண்ட் என்று, சிறையில் சேர்த்திருக்கிறது. இந்த நிலையில் முன்தினம், மனு போட்டு கணவனை கைக்குழந்தையோடு போய் நாகர்கோவில் கிளைச்சிறையில் பார்த்துத் திரும்பிய மனைவிக்கு அடுத்த நாள் கணவன், இல்லை 

என்பதை ஏற்க முடியவில்லை. 

 சபரிவர்மன் உடலில், 19 இடங்களில் கொடுங்காயம் இருந்ததை, உடற்கூராய்வு முடித்து வெளியான தரவுகள் உறுதிப்படுத்துகிறது.

கைகள், கால்கள் போக எஞ்சியிருந்த நெஞ்சகப் பகுதியும் குண்டாந்தடிகளால் கொடூரமாக கையாளப்பட்டிருப்பதை அந்த அறிக்கை அடையாளப்படுத்துகிறது. 

ஜெயராஜ் -பென்னிக்ஸ் போன்ற அப்பாவி அப்பா-மகனை அடித்தே கொன்ற தூத்துக்குடி சாத்தான் குளம் காவலருக்கான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி ஆறுமாத காலம் 

 கூட ஆகவில்லை. அதற்குள்காவல்துளைக்கு என்ன அவசரமோ, அடுத்த தீர்ப்பை விரைந்து வாசிக்கும் சூழலை, உருவாக்கியுள்ளனர்.

நாகர்கோவில் கிளைச்சிறையின் தலைமை வார்டன் ஜெகன் மற்றும் காவலர்கள் சிவகுமார், திருவிடைநம்பி ஆகிய மூவர், இந்த 'லாக்கப் மரணம் ' விவகாரத்தில் கைது -சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபரிவர்மன் மரணத்துக்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு அல்லவா பதிவு செய்திருக்க வேண்டும் !

தமிழ்நாட்டை எந்த முதலமைச்சர் ஆண்டாலும் அவர்களின் ஆட்சி காலத்தில் கொடூரமான லாக் அப் மரணங்கள், குறைந்த பட்சம் நடந்துவிடுகிறது.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஆட்சியின் அறுபத்தி ஐந்து நாள் ஆட்சியில் முதல் கொலை பலிக் கணக்கை நாகர்கோயில் காவல் துறை - சிறைக் காவலர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

 முளைக்கிற போதே முனை முள்ளை முறித்துப்போட்டு விட்டால் இனி ஒரு சிக்கலும் முளைக்காது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...