முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லோக்பால் போல மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமையாத வரை ஊழல் ஒழிப்பு கானல் நீரே,

இந்தியா முழுவதும் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான எழுச்சி தான் மக்கள் மத்தியில் வரவேண்டும்


நாணயத்தின் மறுபக்கம் நாளும் வளரும் ஊழல் தானே, ஏழையின் வியர்வைத் துளிகளை எச்சில் துளியாய் விழுங்கும் ஒரு லஞ்சப் பெருங்கூட்டம்,  நான்கு கால்களில் அமைந்த ஜனநாயக நாற்காலிக்கு இரண்டு கால்கள் பழுது எனில் அதன் அடியில் செல்லும் ஊழல் கைகள்,  நாட்டின் உரிமையை விற்கும் நேர்மை இல்லாத அந்தகக் கண்கள்!சாமானியனின் உரிமை மறுக்கப்பட்டு, சட்டத்திலுள்ள சிறிய எலிப்பொறி ஓட்டைகளில் தப்பிக்கும் பெரிய ஊழல் பெருச்சாளிகள், மூலம் லஞ்சம் நுழைந்து தானே உண்மை !   இனி நாளை மலரும் விடியலாய்,ஒன்றாகுவோம் வாரீர்! 





தற்போது தமிழ்நாடு அரசாணை  நேர்மையின் ஒளியை ஏந்தி, ஊழலை வேரறுப்போம் பாரீர் என வந்தாலும் !    ஊழல் என்பது பலவகை   "தானும் செய்யாது தருபவரையும் தடுத்தல் அதுவே  தகுதியில் செய்யும் ஊழல், காணும் அனைத்திலும் காழ்ப்புடன் எழுதல் கற்பனையில் செய்யும் ஊழல், மானம், மரியாதை, மதிப்பைக் கெடுத்தல்  மனிதம் அழிக்கும் ஊழல், வீணாய் தர்க்கித்து விவாதம் புரிதல்   விவேகத்தில் செய்யும் ஊழல், கூட்டம் சேர்த்து குறிவைத்து ஒருவரைக் குதறுதல் ஒரு வகை ஊழல், கேட்டதையெல்லாம் போட்டுப் பேசுதல்  கூட்டத்தில் செய்யும் ஊழல், இப்படி பல வகை ஊழல் லஞ்சம் லாவண்யங்களின் மத்தியில் 

அத்தி பூத்த கதையாக தமிழக அனைத்துத் துறைச் செயலகங்கள் மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள், அனைத்து ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான அலுவலர்கள், ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிவிப்புப் பலகையை ஒவ்வொரு அலுவலகத்திலும், ( ஏற்கனவே உள்ளது) பொது இடங்களில் காணக்கூடிய இடங்களிலும், பின்வரும் வாசகங்கள் அடங்கிய இணையதளத்திலும் வைக்குமாறு தற்போது கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:-"லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்", ஊழல் தொடர்பான புகார்கள், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்திற்கு அனுப்பப்படலாம். எண்.293, எம்கேஎன் சாலை, ஆலந்தூர், சென்னை - 600 016.  தொலைபேசி: +91-44-2232 1090, 2232 1085, 2231 0989,  2234 2142  மொபைல்: 94981 80936 (Whatsapp) தொலைநகல்: 91-44-2232 1005,  மின்னஞ்சல்: dvac@nic.in 

ஊழலை ஒழிக்க முன்னோக்கி நகர்வது மிகவும் நல்ல நடவடிக்கை என்ற போதிலும் இவை ஊழலை ஒழிக்க உதவுமா என்பதே இங்கு எழுவினா? மக்களில் ஆயிரத்தில் ஒருவர் வேண்டுமானாலும் இதை உணரலாம் ஆனால் மக்கள் விழிப்புணர்வு இப்போது எதுவும் இல்லை, அது குறித்து கவலை அவர்கள் மத்தியில் இல்லை,மேலும் புகார் மீது தாங்களே நடவடிக்கை எடுத்த வரலாறு என்பது ஊழல் தடுப்புக் கண்காணிப்ப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் இதுவரை இல்லை அதில் பொறிவைத்து பிடித்தால் மட்டுமே நடவடிக்கை பாயும், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை சாமானியன் அறிய வாய்ப்புகள் இல்லை, காரணம் அந்த துறைக்கு மக்கள் மத்தியில் நெருக்கம் இல்லை, ஆகவே இது அரசாணையாக வந்தாலும் வெற்று விளம்பரம் போலவே ஆகும், ஊழலை ஒழிக்க ஒரே வழி நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள லோக் ஆயுக்தா வழக்கில் அரசு முயற்சி எடுத்து தீர்ப்புகள் வந்து அவை புதிய சட்டமாக தமிழ்நாட்டில் மாறாத வரை இது மக்கள் மத்தியில் கவனம் பெறாது. தற்போது உண்மை நிலை யாதெனில்


:-மதுரை கிளை சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துரையூர் வட்டம் பகலவாடி குருநாதன்  உச்சநீதிமன்றம் வரை சென்று பல போராட்டங்கள் நடத்தித் தொடுத்த பொதுநல வழக்கு, 2018-ஆம் ஆண்டு அதிமுகவின் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக இருந்த போது இயற்றப்பட்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் ஊழல் வாதிகளைக் காப்பாற்றும் நோக்கில் உள்ளதால் அதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். மத்திய லோக்பால் சட்டத்திற்கு முரணாக இந்த மாநிலச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இவர் ஒரு பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்தார். 



அது விசாரணை இன்னும் முடிவான தீர்ப்பை நேக்கி வரவில்லை ஆகவே காத்திருக்கும் நிலை உள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு, 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள வேறு ஒரு வழக்கு தஞ்சாவூர் வி.ஜீவகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தப் பொதுநல வழக்கைத் (PIL) தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்வு, இது குறித்து 6 வார காலத்திற்குள் விரிவான பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அந்த மனுவில்  அரசு ஊழியர்கள், ஆடசியாளர்கள் மற்றும் மக்களால் தேர்வான பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக 2018-ஆம் ஆண்டில் 'தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்' கொண்டுவரப்பட்டாலும், அது இன்னும் முழுமையான வீரியத்துடன் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை.தகவல் வெளிப்படைத்தன்மை இன்மை: லோக் ஆயுக்தா இணையதள விவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 617 புகார்கள் முடிக்கப்பட்டு, 137 புகார்கள் நிலுவையில் உள்ளதாகக் காட்டுகிறது. ஆனால், அவற்றில் எத்தனை வழக்குகளில் முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல லோக் ஆயுக்தா அமைபுக்கு என தனி காவல் படை இல்லை, நிலுவை வழக்குகள் என்ன நிலையில் உள்ளன என்பது போன்ற விவரங்கள் வெளிப்படையாக இல்லை. லோக் ஆயுக்தா செயலாளராக, சட்டப்படி துணைச் செயலாளர் அந்தஸ்து கொண்ட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற விதியை மீறி தற்போதைய அரசாணை உள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஊழலுக்கு எதிரான இந்த அமைப்பைத் தமிழ்நாட்டில் மேலும் வலுப்படுத்தக் கோரி இந்த சட்டப் போராட்டம் தொடரப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஊழல் ஒழிப்பு என்பதை மக்கள் உணரவைத்தாலும் அவர்கள் நேரடியாக புகார் தரும் போது சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது அது மாறாத வரை ஊழல் ஒழிப்பு ன்பது காணல் நீரே.               



"இல்லாத விடயத்தை இருக்குது என்றால்  இவரது உரையில் ஊழல், சொல்லாத விடயத்தை சொன்னதாய்ச் சொன்னால் சொன்னவர் சொல்லில் ஊழல், பொல்லாத பொய்யும் புரட்டும் சொன்னால் உள்ளது நம்பிக்கை ஊழல், எல்லோரும் பணத்தை எடுத்தல் மட்டுமே சொல்லுவார் ஊழல்,  வீணாய் தர்க்கித்து விவாதம் புரிதல் விவேகத்தில் செய்யும் ஊழல்,         


கூட்டம் சேர்த்து குறிவைத்து ஒருவரைக்  குதறுதல் ஒரு வகை ஊழல்,  கேட்டதையெல்லாம் போட்டுப் பேசுதல் கூட்டத்தில் செய்யும் ஊழல்,அடுத்தவர் பொருளைத் திருட வேண்டும் அல்லது ஏமாற்றி ஊழல் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எண்ணமே ஒருவரை அழித்துவிடும். அது குறள் 282 ல் :"களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும்." ஒரு நாட்டின் அதிகாரம் கொண்டவர்கள் குடிமக்களை வருத்தி, முறைகேடாகப் பொருள் (லஞ்சம்/ஊழல் பணம்) வாங்குவது, கையில் ஆயுதம் ஏந்திய திருடன் 'கொடு' என்று மிரட்டுவதற்குச் சமம் என்கிறார் வள்ளுவர். அதுபோல குறள் 552:"வேலோடு நின்றான் இடுவென்றது போலும்கோலோடு நின்றான் இரவு".அறநெறிக்கு மாறாக, பிறரை ஏமாற்றிச் சேர்க்கும் ஊழல் பணம் ஒருபோதும் நிலைக்காது. மேலும் குறள் 113:"நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே ஒழிய விடல்". முறையற்ற வழிகளில் சேர்க்கப்படும் பணத்தால் எவ்விதப் பயனும் இல்லை என்பதை இக்குறள் உணர்த்துகிறது. மேலும் குறள் 39:"அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல." என்கிறார்.  லோக்பால் போல மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமையாத வரை ஊழல் ஒழிப்பு கானல் நீரே,மாநில அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் முறையான சட்ட அமலாக்கம் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஆரோக்கியமான தொடக்கமாகும். ஆனால் இதுவே முடிவல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...