பழனி ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி ஆலயத்தின் டிரஸ்ட் சொத்து ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், முறைகேடாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட குற்றம் நடந்த நிலையில், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, பழனி கோயில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு மனு அனுப்பப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் பதிவுத்துறை விசாரணை மேற்கொண்ட போது வழக்கின் முக்கியத்துவம் மற்றும் கோயில் சொத்து பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை கருத்தில் கொண்டு, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்த நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என கோயில் நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தூய கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை என பழனி கோயிலின் நிலக் கண்காணிப்பாளர் முருகானந்தம் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது மேலும் . நேற்று சமூக வலைதளப் பதிவுக்காக குற்ற வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்,உத்தரவிட்டது, சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்காக தேவையற்ற குற்ற வழக்குகளைப் பதிவு செய்வதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில், தனிநபர் அவதூறுகளுக்கு சிவில் சட்டத்தின் கீழ் அவதூறு வழக்கு மட்டுமே தொடர முடியுமே தவிர, கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்வது முறையாகாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யா என்ற திமுக நபர் மீது பொது அமைதியை குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலப்பதிவு குறித்த முதலாவது பார்வை:- D.சேதுபதி, மற்றும் K.வெள்ளதுரை எனும் இரண்டு பேர் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ஸ்ரீ தண்டாயுதபானி ஆலய மடத்து டிரஸ்ட்க்குச் சொந்தம்மான நில விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய உத்திரவிட தாக்கலான வழக்குத் தீர்ப்பு தவறாக உண்மை மறைத்து வாங்கிய உத்தரவு, முறைகேடு வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.இந்த நிலத்தை பாலச்சந்தர் என்ற சார்பதிவாளர் 3ஆம் தேதியே பதிவு செய்துவிட்டார்.ஆனால், அரசு திட்டமிட்டு தன்னை மட்டும் குற்றவாளியாக்கி பத்திரப்பதிவு செய்தவரை தப்பிக்க வைத்துள்ளதாக ஜஸ்டின் மணிகண்டன் தரப்பு வாதம்.3-ஆம் தேதி பதிவுக்கான வேலைகள் மட்டுமே செய்யப்பட்டன. ஜஸ்டின் மணிகண்டன் தான் முறைப்படி பதிவு பணிகளை முடித்துள்ளார் என அரசுத் தரப்பு வாதம் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதா?
இரு சார்-பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா? என நீதிபதி கேள்வி இவர் தான் அந்த ரூ.100 கோடி மதிப்புள்ள இடத்தை ரூபாய் .2 கோடிக்கு வாங்கிய இரண்டு பேரில் ஒருவராம் பத்திரத்தில் கண்ட ஒருவர், நிலம் வாங்கியதாக பதிவில்
ஆகவே பல சந்தேகங்கள் எழவே சிபிசிஐடி விசாரணை மத்தியில் ஜாமீன் வந்துள்ளது. ஆனால் விசாரணை சூடு பிடித்தது.









கருத்துகள்