முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல்வரை பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் கைது

முன் ஜாமீன் மனுவை நீதிமன்ற தள்ளுபடி செய்து உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்காக வந்த முன்னால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல் துறையினர் கைது செய்து


விசாரணைக்கு  கூட்டிச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆங்காங்கே சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு பின் கலைந்து சென்றனர்.  திருச்செந்தூர் தொகுதியிலிருந்து அதிமுக திமுக என மாறி தொடர்ந்து 7 வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராவார் " கைதான பின் "வழக்கறிஞர் வந்தா தான் நான் வருவேன்.. இல்லனா எங்கயும் வர மாட்டேன்..! ” என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் பேசியதால் புகார் அதற்கு முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில நிமிடங்களில் ஆத்தூருக்கு ஆய்வுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து கூட்டிச் சென்றனர்.




த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்டுள்ள முதல் அரசியல் கைது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.  கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து திமுக  நடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எக்ஸ் தளத்தில்  கண்டனம் தெரிவித்துள்ளார்.  "முதலமைச்சரை தரங்கெட்டு பேசியவரை கைது செய்வதே சரியான நடவடிக்கை" எனப் பேசப்படுகிறது.

ஜூன் 20-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியுள்ளார்.

அவர் பேசியதாக கூறப்படும் கருத்துகள்:

"முதலமைச்சர் சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார். அவரைக் கொண்டு வந்து சட்டசபையில் உட்கார வைத்த உடன் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்" மேலும், "சட்டப்பேரவையில் முதலமைச்சர் 'சிக்கிக் கொண்டார்' என்பது போன்று இருப்பதாகவும், 'நடிகை வீட்டில் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன், இப்போது இங்கே சிக்கிக் கொண்டேனே' என்று அவர் நினைப்பது போன்றும்" கூறியதாக அந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதையடுத்து, ஒட்டூர் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 352 (வெறுப்பூட்டும் நோக்கில் அவமதிப்பு) மற்றும் பிரிவு 353(2) (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அறிக்கைகள்) ஆகிய பிரிவின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர்

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கைது குறித்து கனிமொழி "அடக்குமுறை" என்று கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான அவர், ஒரு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பட்ட பிறர் அறியாத விபரம் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளார். இதற்கு நீதிமன்றம் கூட "முதலமைச்சர் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா?" என்று கேள்வியை எழுப்பியுள்ளது.

அரசியல் விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி. ஆனால், அது தனிப்பட்ட அவதூறாக மாறும்போது, அது சமூகத்தில் பகைமையையும், அரசியல் களத்தில் நம்பிக்கையின்மையையும் உருவாக்கும். ஒரு பொதுப் பிரதிநிதி, தனது விமர்சனங்களை கண்ணியமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்; அவதூறாக அல்ல.

மேலும், கைது நடவடிக்கை "அராஜகமானது" என்று கனிமொழி கூறியுள்ளார். ஆனால், நீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமீனை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், தான் காவல்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டது இது முற்றிலும் சட்டபூர்வமானது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவருக்கு சட்டத்திலிருந்து விலக்கு இல்லை. சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது அவர் சிறையில் அடைக்கப்படுவாரா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். மேலும், இந்த வழக்கில் திமுக மற்றும் தவெக இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடையும். இந்த தீர்ப்பு, அரசியல் விமர்சனங்கள் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் எல்லைகள் குறித்த புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது என பலரும் பேசும் நிலை. ஆனால் அவர் பொதுக்கூடடத்தில் நாவடக்கத்தடனே பேச வேண்டும் என்பதே பலரது கருத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...