உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவராக நியமனம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) என்பது பொதுமக்களுக்குத் தேவையான இன்றியமையாப் பொருட்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளும் அரசு நிறுவனம். 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பாதுகாப்பு வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. இக்கழகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் மற்றும் ராகி ஆகியவற்றை அரசு நிர்ணயிக்கும் விலைக்குக் கொள்முதல் செய்கிறது.
கொள்முதல் செய்யப்படும் நெல்லைத் தனக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலைகள் மற்றும் தனியார் முகவர்கள் மூலம் அரிசியாக அரவை செய்கிறது. நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை விநியோகம் செய்கிறது. மாநிலத்தின் மொத்த ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடைகளை இக்கழகமே நேரடியாக நடத்தி வருகிறது. கொள்முதல் செய்யப்படும் மற்றும் இந்திய உணவுக் கழகத்திடம் (FCI) இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களைத் தனது சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கிறது, கிடங்குகளில் இருந்து தடையின்றி ரேஷன் கடைகளுக்குப் பொருட்களைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் போக்குவரத்தைக் கண்காணிக்கிறது.
அரசு நலத்திட்டங்களுக் பள்ளிகளில் செயல்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய சத்துணவுத் திட்டத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களைத் தடையின்றி வழங்குகிறது. தமிழ்நாடு அரசு அறிவிக்கும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கான உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்து விநியோகிக்கிறது. வெளிச்சந்தையில் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை மலிவு விலையில் விற்க 'அமுதம் அங்காடி' விற்பனை நிலையங்களை நடத்துகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் மற்றும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு விநியோக நிலையங்களையும் இக்கழகம் இயக்குகிறது. கடந்த ஆட்சியில் கொள்முதல் ஊழல் குறித்து பல புகார் உண்டு அதுபோல இனி நடக்காது என நம்பலாம் காரணம் கமிஷன் இல்லாத கொள்முதலே தீர்வு அதேபோல தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக அனுராக் மிஷ்ரா IFS நியமனம். 2019 TNPCB நியமன விதிகளின் கீழ் அரசின் பரிந்துரையின்படி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறையின் சிறப்புச் செயலாளர் மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (PCCF) போன்ற முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் வனப்பாதுகாப்பு போன்ற துறைகளில் இவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.அனுராக் மிஷ்ரா 2019 ஆம் ஆண்டு இந்திய வனப்பணி (IFoS) தேர்வில் அகில இந்திய அளவில் 6-வது இடத்தைப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சிறப்புச் செயலாளர் பொறுப்பையும் அவர் கூடுதலாகக் கவனிப்பார் என அரசாணை வெளியீடு





கருத்துகள்