முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் கோவில் நிலங்கள் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு ஏற்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு:

கோவில்களின் 3,084 ஏக்கர் நிலத்தை பத்திரபதிவு செய்ய அனுமதி வழங்கயதற்கு எதிராக அவசர வழக்கு தாக்கல் செய்த நிலையில் இன்று விசாரணை

கோவில்களின் 3,084 ஏக் கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய அனுமதி அளித்த கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அவசர வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது 



திருத்தொண்டர் சபை அறக் கட்டளையின் அறங்காவலர் ராதா கிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ள தகவல் :-

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், புகழிமலை பாலசுப் பிரமணிய சுவாமி கோவில்,

குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் 3,084 ஏக்கர் நிலங்கள் உள்பட ஏராளமான நிலங்கள் உள்ளன. இவை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையவை.

இந்த நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்கள் 3,390 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதுதொடர் பாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து இருந்தது.

அதன் விளைவாக மேற் கண்ட 3,084 ஏக்கர் நிலங்களையும் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை ஆணை விதிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டு அது தற்போது வரை நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் மேற்கண்ட கோவில்களுக்குச் சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்களை ஆக்கிமித்தவர்கள் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த 9- ஆம் தேதி உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவின் மூலம் ஹிந்து சமய அறநிலையத்துறையும் தடை உத்தரவுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

உயர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கோவில் நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே |

மேற்கண்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதித்த தடையை நீக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்  இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முன்பாக நேற்றே ஆஜரான ராதாகிருஷ்ணன் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர்  முன் முறையிட்டார்.

அதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். WP(MD) 19954/2026 A.RADHAKRISHNAN    VS   THE SECRETARY TO GOVERNMENT AND 25 OTHERS. M/S.A.RADHAKRISHNAN (PARTY-IN-PERSON) WMP(MD) 14721/2026    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர். அப்போது, இந்த மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் மாதம் .,11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 



 இந்த நிலையில் பழனி கோயில் நிலம் முறைகேடாகப் பதிவு: சார் பதிவாளர் பணியிடை நீக்கம்  பழனி தண்டபாணி

சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்த மான நிலம் தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பதிவுத்துறை சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனி மலையடிவாரத்தில் ஸ்ரீ தண்ட பாணி சுவாமி கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூபாய் .100கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை விதிகளை மீறி அறக்கட்டளை நிர்வாகம் விற்பனை செய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதன் பிறகு, நீதிமன்ற உத்தரவின் பேரில், அறக் கட்டளை நிலத்தை பழனி கோயில் நிர்வாகம் கையகப் படுத்தியது. மேலும், இதற்கு தக்காராக இணை ஆணையர் மாரிமுத்து நியமனம்செய்யப் பட்டார்.

இதையடுத்து, அவர் ஆக் கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை இலவச வாகன நிறுத்துமிடமாக மாற்றினார். 

இந்த நிலையில், கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய 1.40 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறி, முருகதாஸ், திருப்புகழ் உள்ளிட்டோர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவருக்கு விற் பனை செய்தனர். ரூபாய் .2 கோடி நிலம் என குறைவாக மதிப்பீடு செய்து, பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த இருவரது பெயர்களிலும் நிலம் பதிவு செய்யப்பட்டது. பழனி சார் பதிவாளர் விடு முறையிலிருந்த நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்த கொடைக்கானல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இந்த நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில், பழனி கோயில் தரப்பில் பழனி 

சார் பதிவாளர்,பத்திரப்பதிவுத்துறை ஆணையர், துணை ஆணையர், திண்டுக்கல் மாவட்டப் பதிவாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. பழனி அடிவாரம் காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது.

முறைகேடான இந்த நில பத்திரப் பதிவு தொடர்பாக பல்வேறு கட்சியினரும், ஹிந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதல் கட்டமாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், வெள்ளத்துரை, சேதுபதி, முருகதாஸ் ஆகியோர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சார் பதிவாளர் ஜஸ்டின் மணி கண்டன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...