கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு:
கோவில்களின் 3,084 ஏக்கர் நிலத்தை பத்திரபதிவு செய்ய அனுமதி வழங்கயதற்கு எதிராக அவசர வழக்கு தாக்கல் செய்த நிலையில் இன்று விசாரணை
கோவில்களின் 3,084 ஏக் கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய அனுமதி அளித்த கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அவசர வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
திருத்தொண்டர் சபை அறக் கட்டளையின் அறங்காவலர் ராதா கிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ள தகவல் :-
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், புகழிமலை பாலசுப் பிரமணிய சுவாமி கோவில்,
குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் 3,084 ஏக்கர் நிலங்கள் உள்பட ஏராளமான நிலங்கள் உள்ளன. இவை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையவை.
இந்த நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்கள் 3,390 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதுதொடர் பாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து இருந்தது.
அதன் விளைவாக மேற் கண்ட 3,084 ஏக்கர் நிலங்களையும் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை ஆணை விதிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டு அது தற்போது வரை நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் மேற்கண்ட கோவில்களுக்குச் சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்களை ஆக்கிமித்தவர்கள் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த 9- ஆம் தேதி உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவின் மூலம் ஹிந்து சமய அறநிலையத்துறையும் தடை உத்தரவுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
உயர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கோவில் நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே |
மேற்கண்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதித்த தடையை நீக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முன்பாக நேற்றே ஆஜரான ராதாகிருஷ்ணன் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன் முறையிட்டார்.
அதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். WP(MD) 19954/2026 A.RADHAKRISHNAN VS THE SECRETARY TO GOVERNMENT AND 25 OTHERS. M/S.A.RADHAKRISHNAN (PARTY-IN-PERSON) WMP(MD) 14721/2026 இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர். அப்போது, இந்த மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் மாதம் .,11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் பழனி கோயில் நிலம் முறைகேடாகப் பதிவு: சார் பதிவாளர் பணியிடை நீக்கம் பழனி தண்டபாணி
சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்த மான நிலம் தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பதிவுத்துறை சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பழனி மலையடிவாரத்தில் ஸ்ரீ தண்ட பாணி சுவாமி கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூபாய் .100கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை விதிகளை மீறி அறக்கட்டளை நிர்வாகம் விற்பனை செய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதன் பிறகு, நீதிமன்ற உத்தரவின் பேரில், அறக் கட்டளை நிலத்தை பழனி கோயில் நிர்வாகம் கையகப் படுத்தியது. மேலும், இதற்கு தக்காராக இணை ஆணையர் மாரிமுத்து நியமனம்செய்யப் பட்டார்.
இதையடுத்து, அவர் ஆக் கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை இலவச வாகன நிறுத்துமிடமாக மாற்றினார்.
இந்த நிலையில், கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய 1.40 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறி, முருகதாஸ், திருப்புகழ் உள்ளிட்டோர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவருக்கு விற் பனை செய்தனர். ரூபாய் .2 கோடி நிலம் என குறைவாக மதிப்பீடு செய்து, பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த இருவரது பெயர்களிலும் நிலம் பதிவு செய்யப்பட்டது. பழனி சார் பதிவாளர் விடு முறையிலிருந்த நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்த கொடைக்கானல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இந்த நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில், பழனி கோயில் தரப்பில் பழனி
சார் பதிவாளர்,பத்திரப்பதிவுத்துறை ஆணையர், துணை ஆணையர், திண்டுக்கல் மாவட்டப் பதிவாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. பழனி அடிவாரம் காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது.
முறைகேடான இந்த நில பத்திரப் பதிவு தொடர்பாக பல்வேறு கட்சியினரும், ஹிந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதல் கட்டமாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், வெள்ளத்துரை, சேதுபதி, முருகதாஸ் ஆகியோர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சார் பதிவாளர் ஜஸ்டின் மணி கண்டன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.




கருத்துகள்