மத்திய மற்றும் மாநில அரசு நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் பாடப்பட வேண்டும். அதன்பிறகு தான் தேசியக்கீதம் பாட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள்
‘வந்தே மாதரம்’ பாடலை தேசிய கீதத்துக்கு முன்பாகவே பாடப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவு.
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நடத்திவைத்த முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழா மற்றும் சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலும், அதன்பிறகு தேசிய கீதமும், பிறகு தமிழ் தாய் வாழ்த்தும் முறையாகப் பாடல்கள் இசைக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்', தேசிய கீதம் மற்றும் மாநில மொழிப்பாடல்கள் பாடுவது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஆளுநர் அலுவலங்களுக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கும் இதுதொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஜூலை 9ம் தேதியிட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் உத்தரவில் உள்ள சாரம்சங்கள் வருமாறு:
ஜனாதிபதி நிகழ்ச்சி மற்றும் பிற அரசுகள் ஏற்பாடு செய்யப்படும் ஜனாதிபதி நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி வரும் போதும், புறப்படும் போதும் முதலில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் பாடுவது அல்லது இசைக்கவோ வேண்டும். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடவோ, இசைக்கவோ வேண்டும். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நிகழ்ச்சிகளின் போதும் இது பின்பற்றபப்பட வேண்டும்.அதே வேளையில் குறிப்பிட்ட ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசரத்தில் நடக்கும் அரசு விழாக்கள், நிகழ்வின் போதும் ஆளுநர், துணை நிலை ஆளுநர் பங்கேற்கும் போதும், அங்கிருந்து புறப்படும் போதும் முதலில் தேசியப் பாடலான வந்தே மாதரமும், அதன்பிறகு தேசிய கீதமும் இசைக்கப்படவோ அல்லது பாடப்படவோ வேண்டும்.
தேசிய பாடல் (வந்தே மாதரம்) மற்றும் தேசிய கீதம் பாடும் போதோ அல்லது இசைக்கும் போதே சரியான உச்சரிப்பு மற்றும் சரியான ஒலிப்புடன் இருக்க வேண்டும். இதனைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும். சரியான இசை, உச்சரிப்பு தொடர்பான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுசில மாநிலங்களில் மாநிலப் பாடலுடன் (தமிழ்நாட்டில் தமிழ்தாய் வாழ்த்து) தேசிய கீதம், தேசிய பாடல் இசைக்கப்படுகிறது. இப்படி மாநிலப் பாடலுடன் தேசியப் பாடல், தேசியக் கீதம் பாடப்படும் போதோ அல்லது இசைக்கப்படும்போதோ முதலில் 'வந்தே மாதரம்' தேசிய பாடலும், அதைத்தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும்'' என மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் மாநில பாடலுடன் தேசிய பாடல், தேசிய கீதம் பாட வேண்டும் என்று மத்திய அரசு கூறியது இனி தொடர்ந்து நடைமுறைக்கு வரும்.






கருத்துகள்