தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் கலந்துகொண்ட கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி,
இன்று 10. ஜூலை. 2026 வெள்ளிக்கிழமை, கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை பகுதியில் மதியம் 12.00 மணி அளவில் நடைபெற்றது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி நிகழ்ச்சி முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக கட்சி மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.
விரைவுக் குறியீட்டுடன் (QR CODE) கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்ட 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. விரைவு குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான
விரைவு குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம் என முன் அறிவிப்பும், விரைவுக் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் காண அறிவுரை, விரைவு குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கினார்.கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக அரசியல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கிய 41 பேர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தகுதியின் அடிப்படையில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப் படி தற்காலிகப் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்வின் மூலம் மொத்தம் 31 பேருக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டன, மேலும் விழாவில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் புதிய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார், கரூரின் மனவாசி ஊராட்சியில் சுமார் ரூபாய் 1,700 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்திக்கு Evergreen Kothari Footwear தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் தொழிற்சாலையின் மூலம் கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 13,500 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலத்தில் தனியார் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிமுக ஆட்சியில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் மற்றும் படுகாயமடைந்த 16 பேருக்கும் அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப தமிழ்நாடு அரசுப் பணி மற்றும் தலா ரூபாய் . 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையையும் கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த பணி நியமன ஆணைகள் 2021-ஆம் ஆண்டு மே மாதம் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு நேரில் வழங்கப்பட்டன. அப்போது யாரும் அரசு வேலை வழங்குவதற்கு தடை கேட்டு நீதிமன்றம் செல்லவில்லை என்பதும், தற்போது பணி வழங்க நீதிமன்றம் சென்ற நிலையில் தற்போது தற்காலிக பணி ஆணை வழங்க வேண்டிய நிலை வந்துள்ளது, காரணம் இறுதி உத்தரவு வரும் முன் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் பிரதிவாதியாக இணைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது."ஓடு.. ஓடு.. ஓடு.. வரான் பாரு வேட்டைக்காரன்" எனப் பாடி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டுப் பேசிப் பாடியது சமூக வலைத்தளங்களில் வந்து இணையத்தில் வைரலானது.













கருத்துகள்