முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழலுக்கு குடை பிடித்த திமுகவின் அமைச்சர்கள்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக திமுக ஆட்சியில் ஆர். காந்தி  பதவி வகித்தார். இவர் தி.மு.க சார்பில் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத்


தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்  இவர் கடந்த திமுக ஆட்சியில் தமிழக கைத்தறித் துறையில் இலவச வேட்டி-சேலைத் திட்டத்தில் அமைச்சராக இருந்த ஆர். காந்தி மற்றும் அவர் மகன் வினோத் காந்தி ஆகியோர் 

தமிழக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, ராஜஸ்தானிலிருந்து தரம் குறைந்த துணிகளை இறக்குமதி செய்து, அவற்றை ரகசியமாகச் சலவை செய்து கொல்கத்தாவில் விற்பனை செய்யும் 'ஸ்கேம்' நடைபெறுவதாகக் கூறும் புகார்கள் அதிர்ச்சியூட்டுவதாகும், அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் துணிகளை மக்களுக்கு விநியோகிக்காமல், அவற்றை ரகசியமாகச் சலவை செய்து கொல்கத்தாவில் விற்பனை செய்யும் சம்பவமும் நடைபெற்றள்ளதாம்.

இலவச வேட்டி-சேலை திட்டத்தில் ரூபாய் .60 கோடி மோசடி நடந்துள்ளதாகப் புகார்கள் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலியைச் சுரண்டி, இடைத்தரகர்கள் கோடிகளில் புரளும் இந்த அவலத்தை அரசு கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை விநியோகிக்காமல், ராஜஸ்தானிலிருந்து பாலியஸ்டர் துணிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அந்த துணிகளில் 78 சதவீதம் பாலியஸ்டர் கலந்திருப்பதாகவும், இது இயற்கை பருத்தி நாரின் தரத்திற்கு மாறானது என்றும் குற்றம்சாட்டப்படுகிறத

இந்த விவகாரம் குறித்து பல அமைப்புகள் பலமுறை புகார்களை அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சர் காந்தி தனது மகன் வினோதுடன் இணைந்த இந்த மோசடியில் இந்த ஊழல் மூலம் கிடைக்கும் பணம் அமைச்சரின் குடும்பத்திற்கு செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.

நெசவாளர்கள் தங்களின் பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், சில அதிகாரிகளின் சுயநலத்திற்கு பயன்படுத்தப்படுவது வேதனையானது. இந்த ஊழல் குறித்து உடனடி விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.  தமிழ்நாட்டின் தற்போதைய கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சராக எம். விஜய்பாலாஜி  பதவி வகித்து வருகிறார். இவர் த.வெ.க  சர்பில் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார்,   அதே போல மற்றுமொரு ஊழல் சிஎம்டிஏ 3,500 கோடி கடனும், சென்னை மாநகராட்சி ஊழலும்.

மழைநீர் வடிகால் டெண்டர் 24 மணி நேரத்தில்; கழிப்பிடம் சீரமைப்பு என்ற பெயரில் ஒரு ஷீட்டுக்கு 500 ரூபாய்; பார்க்கிங் வசூலில் முறைகேடுகள் அதிகார மிரட்டல் - சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏவில் நடந்த ஊழல்.

 சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பொறுப்பான சிஎம்டிஏ (CMDA) ரூபாய் 3,500 கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளிப்பதற்கு முக்கியக் காரணம், ஊழல் கொள்ளைக்காரராக  விமர்சிக்கப்படும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா. இவருக்கும் அமைச்சர் பி. கே.சேகர் பாபுவுக்கும் இடையே நடக்கும் 'கட்டிங்' போட்டியால் நிர்வாகம் சீரழிந்தது. விவகாரம் முற்றியதும், அன்சுல் மிஸ்ரா லாவகமாகத் தப்பித்து டெல்லி எய்ம்ஸ்-க்கு டெபுடேஷனில் சென்றுவிட்டார்.

சிஎம்டிஏ அலுவலகத்தைப் புதுப்பிக்க மட்டும் ரூபாய் 3 முதல் 4 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நன்றாக இருந்த அலுவலகத்தை புதுப்பித்து பணத்தை வீணடித்த நிகழ்வு நடந்துள்ளது. இன்னொருபுறம், சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால்  ஒப்பந்தங்கள் வெறும் 24 மணி நேர துரித டெண்டர் முறையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுக் கழிப்பிடச் சீரமைப்பு என்ற பெயரில் ஒரு ஷீட்டுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் செலவு காட்டிப் பணத்தைச் சுருட்டுகிறார்கள். பார்க்கிங் வசூலில் நடக்கும் முறைகேடு மாநகராட்சியால் சம்பளம் கூட வழங்க முடியாத நிதி நெருக்கடிக்குக் காரணம் இத்தகைய ஸ்கேம்களே.



CMDA இன்று ரூபாய் 3,500 கோடி  கடன் சுமையில் தத்தளிக்கிறது. கடந்த மே மாதம், அன்சுல் மிஸ்ரா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டெபுடேஷனில் சென்று விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சென்ற பின்னரும், CMDA-வின் நிதி நிலைமை மேம்படவில்லை; மாறாக கடன் சுமை அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் நிலவும் ஊழல்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வருகின்றன. மழைநீர் வடிகால் ஒப்பந்தங்கள் துரித டெண்டர் முறையில் வழங்கப்படுவதாகவும், அதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 24 மணி நேரத்தில் டெண்டர் முடிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் வழங்கப்படுவது வழக்கமான நடைமுறை அல்ல என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 

இந்த விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. CMDA-வின் கடன் சுமை குறைக்கவும், மாநகராட்சியில் நிலவும் ஊழல்களை ஒழிக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், சென்னை மாநகரின் வளர்ச்சி மேலும் பாதிக்கப்படும்; மக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...