முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு ஊழல் செய்த அலுவலர்கள் பணியிடை நீக்கம்

பழனி ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில்,


ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டிருந்த நிலையில், அதே விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் 



பழனி கோயில் நிலப் பதிவு முறைகேடு தொடர்பான புகாரில் நடைபெற்று வரும் விசாரணை தீவிரமடைந்துள்ளது சமூக வலைதளப் பதிவுக்காக குற்ற வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்,  சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்காக தேவையற்ற குற்ற வழக்குகளைப் பதிவு செய்வதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில், தனிநபர் அவதூறுகளுக்கு சிவில் சட்டத்தின் கீழ் அவதூறு வழக்கு மட்டுமே தொடர முடியுமே தவிர, கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்வது முறையாகாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யா மீது பொது அமைதியை குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலப்பதிவு குறித்த முதலாவது பர்வை:- D.சேதுபதி ,K.வெள்ளதுரை எனும் இரண்டு பேர் ஏப்ரல் 10-ஆம் தேதி ஸ்ரீ தண்டபானி ஆலய மடத்துக்குச் சொந்தம்மென்று சொல்லப்படுற நிலத்தோட விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய உத்திரவிட வழக்கு தொடுக்க அதில் எதிர்மனுதாரர்களில் ஒருவர் "The sub registrar".

பார்வை 2 :-ஸ்ரீ தண்டபானி மடம் அந்த ரெண்டு பேர் வழக்கு தொடுத்து ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வாங்கின தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய அதிலும் எதிர்மனுதாரர்  The subregistrar" ஒரு வருடமாக திமுக ஆட்சியில் அந்த இடத்தை பதிவு செய்யக் கூடாதுனு பல கடிதம் மாவட்ட மற்றும் துணைப் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பபட்டிருக்கிறது, ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நிலத்தை பதிவு பண்ணனும் சொல்றவனுக்கும் respondent "Sub registrar"தான்,அதை எதிர்த்து முறையீடு போன தண்டபானி மடத்துக்கும் respondent "sub registrar"தான்.அப்போது இதோட முழு விவரங்களும் எல்லாருக்கும் தெரியும் அப்படி இருந்தும் இந்த இடைப்பட்ட காலத்துல எப்படி அந்த நிலம் பதிவு செய்யப்பட்டுச்சு? தவறு நடந்துச்சுனா எங்க நடந்துச்சு? எப்படி நடந்துச்சு? யாரெல்லாம் இதுக்கு பின்னால் இருக்கிறார்கள்! என்பதே இதில் எழு வினா,?  அதேபோல் சென்னை பெருநகர மாநகராட்சியில் ஊழல் ஒழிப்பு  நடவடிக்கையாக 4 மூத்த அலுவலர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்; போலி ரசீது, லஞ்சம், வேலை வாய்ப்பு மோசடி உள்ளிட்ட புகார்களில் துறை ரீதியான விசாரணை மற்றும் வழக்குப்பதிவு!



சென்னை பெருநகர மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் முறைகேடு புகார்களுக்கு ஆளான 4 மூத்த அலுவலர்கள் உட்பட 6 பேரை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம்  செய்துள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல், போலி ரசீது சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும், வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அலுவலர்கள்

1.டாக்டர் தேவிகலா (மண்டல சுகாதார அலுவலர்): ரூபாய் .9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்கியதில் போலியான ரசீதுகளை சமர்ப்பித்து முறைகேடு செய்ததாகப் புகார். கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2.ஆனந்தராவ் (உதவிப் செயற்பொறியாளர், மாதவரம் மண்டலம்): புதிய கட்டிடம் ஒன்றின் உரிமையாளரிடம் ரூபாய் .2.5 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில் ஜூலை மாதம் 10-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

3.சிவ பொற்கொடி (மூத்த பூச்சியியல் வல்லுநர்): மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ஒரு இளைஞரிடம் ரூபாய் .6 லட்சம் பெற்றதாகப் புகார். இவர் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

4.பாஸ்கர் (சாலைப் பணியாளர், கோடம்பாக்கம்): முறையான அனுமதி பெற்றிருந்த கட்டட உரிமையாளரை, கட்டடத்திற்குப் பூட்டி சீல் வைப்பதாக மிரட்டி ரூபாய் .50,000 லஞ்சம் பெற்றதாகப் புகார்.

5.துர்கா (பில் கிளார்க்) மற்றும் அவரது கணவர் கண்ணன் (NULM பணியாளர்): ராயபுரம் மண்டலத்தில் இயந்திரவியல் துறை ஒப்பந்ததாரரிடம் பில்களை அனுமதிப்பதற்காக லஞ்சம் கேட்டதாகப் புகார்

மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், ஊழல் தொடர்பாக எந்த அலுவலரும் சமரசம் செய்யப்பட மாட்டார் என்று தெளிவுபடுத்தியுள்ளார். "எந்த அலுவலராவது லஞ்சம் அல்லது பிற சட்டவிரோதமான பணம் கோரினால், அதை நேரடியாக எனது கவனத்திற்கு கொண்டு வரலாம். கடுமையான துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் விஷயத்தில் சமரசம் இல்லை என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் லஞ்சம் மற்றும் முறைகேடு புகார்களில் சிக்கிய 6 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தவெக அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். குறிப்பாக, முறைகேடு செய்தது,  ஊழல் மனநிலையை வெளிப்படுத்துகின்றன. இந்த நடவடிக்கை மற்ற அலுவலர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமையும். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒரு சில அலுவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது; மாநகராட்சியில் ஊழல் வேரறுக்கப்பட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...