தமிழ்த் திரையுலகில் பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று 30-07-2026) காலமானார்.
அவருக்கு வயது 88. கல்லஹள்ளியில் அவரது இறுதிசடங்குகள் இன்று நடந்தன.
ஆந்திரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜமுனா ராணி. வரதராஜுலு திரௌபதி தம்பதிக்கு மகளாக 1938-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி பிறந்தார். அவர் குடும்பமே இசைக்குடும்பம். அவருடைய தாயார் திரௌபதி வீணை இசைக் கலைஞர். பெண்களை மட்டுமே கொண்ட ஒரு வாத்தியக்குழுவை அக் காலத்திலேயே நடத்தி வந்துள்ளார்.
ஏழு வயதில் பாட வந்த ஜமுனா ராணியின் முதல் பாடல் சித்தூர் நாகய்யாவின் 'தியாகய்யா' என்ற தெலுங்குப் படத்தில் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸின் 'கல்யாணி' படத்தில் 'சக்ஸஸ் சக்ஸஸ்', 'ஒன் டூ த்ரீ' ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார்.
தொடர்ந்து டி. எம். சௌந்தர்ராஜனுடன் இணைந்து 'வளையாபதி' என்ற படத்தில் இடம் பெற்ற 'குலுங்கிடும் பூவில் எல்லாம்' என்ற பாடலை, முதல் டூயட் பாடலாக பாடினார். எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசையில் இடம் பெற்ற அந்த பாடலை பாடும்போது ஜமுனாராணியின் வயது 13.
அவரை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்த பாடல் சி.ஆர். சுப்பராமனின் இசையில் 'தேவதாஸ்' படத்தில் சின்ன வயது பார்வதிக்காக இவர் பாடிய 'ஓ தேவதாஸ்' பாடல் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்கள மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகியான கே. ஜமுனா ராணி இசை உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்.புகழ்பெற்ற பாடல்கள்:"நான் சிரித்தால் தீபாவளி" (நாயகன்)"ஆசையும் என் நேசமும்" (குலேபகாவலி)"யாரடி நீ மோகினி" (உத்தம புத்திரன்)"பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்" (பாசமலர்)"செந்தமிழ் தேன்மொழியாள்" (மாலையிட்ட மங்கை)"மாமா மாமா மாமா" (குமுதம்) கலைத்துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு மதிப்புமிக்க கலைமாமணி விருது (1998) மற்றும் அறிஞர் அண்ணா விருது (2002) வழங்கி கௌரவித்துள்ளது. பாடகி ஜானகியைத் தொடர்ந்து பாடகி ஜமுனா ராணியும் தற்போது மறைந்துவிட்டார், குயில்கள் மரிக்க மரிக்க. காடு நிசப்தம்
தேனை இழைபிரித்துப் பனியில் பாதுகாத்த குரல் ஜமுனா ராணி பாடல் கேளாத இன்றைய தலைமுறை இழந்த தலைமுறை
ராணி சம்யுக்தாவில் ‘சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற சோகப் பாடலில் ஜமுனா ராணியின் குரல் கண்ணீருக்கு உருவம் தந்திருக்கும்
மன்னாதி மன்னனில் ‘காவிரித் தாயே’ பாடலில் அவர் விம்மல்கூட ஒரு சங்கதி பாடியிருக்கும்
கவலை இல்லாத மனிதனில் ‘காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்’ பாடலில்
இரவின் சௌந்தர்யம் இழைந்து இழைந்து படிந்திருக்கும்
கறுப்புப் பணத்தில் ‘பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ பாடலில்
ஒருகோடிப் பெண்களின் வலியை ஒருகுரல் ஏந்திவரும்
நம்மைவிட்டுப் போய்விட்டது நகலெடுக்க முடியாத குரல்
50-களில் பிறந்து 60-களில் வளர்ந்தவர்கள் பூமியில் பாக்கியவான்கள்
போய் வாருங்கள் என்றும் குரலாய் வாழும் குயிலே!



கருத்துகள்