பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை நடத்திய பிரமாண்டம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு,
பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை தலைமையில் நடத்திய பிரமாண்டம்
'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு, பொள்ளாச்சி வட்டம் ஆச்சிப்பட்டியில் இன்று மாலை, 4:00 மணிக்கு, நடந்தது; அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். மாநாட்டு பந்தல் முகப்பு பகுதி, ஆழியாறு அணை, தென்னை மரங்கள் போன்று படங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அரங்குக்குள், 20 ஆயிரம் நபர்கள் வரை அமரும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளியிலிருந்து பார்க்கும் வகையில், 'எல்.இ.டி.,' திரைகள் அமைக்கப்பட்டன. மாலை, தமிழர் பண்பாடு கலாச்சாரம் கலந்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. கே.அண்ணாமலை, 'வீ த லீடர்ஸ்' அமைப்பு துவங்கிய பின்னர் , அவரது தலைமையில் பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடந்தது. இதனால், மாநிலம் முழுவதுமிருந்து, முன்னணி அமைப்பினர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. பொள்ளாச்சியில் நடந்த வீ த லீடர்ஸ் அமைப்பின் மாநாட்டில் போதைப்பழக்கத்திற்கு எதிராக ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வீ த லீடர்ஸ்' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் :
முதல்: .ஒவ்வொரு ஜூலை மாதமும் 'ஒயிட் பேண்ட்' மாதம்; போதை பயன்படுத்த மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்
இரண்டு :.பள்ளி, கோவில் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற வேண்டும்
மூன்று :-.கள்ளச்சந்தை போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தவேண்டும் நான்கு:- .மாவட்டம் தோறும் போதை தடுப்புக்குழு உருவாக்க வேண்டும்
ஐந்து:- .புதிய மனமகிழ் மன்ற பார்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது
ஆறு :-.போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்
எனபது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றிய பின் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதன் பின் செயலி வெளியீடு நடந்தது,
"பாஜகவின் மீது எனக்கு கோபம் இருந்ததா எனக் கேட்டால், இருந்தது; இறுமாப்புடன் எப்போதும் சொல்வேன் நான் ஒரு தேசியவாதி
எனது மதத்தையும், சாதியையும் வீட்டில் வைத்துவிட்டு வருகிறேன்; எல்லா காலத்திலும் மதத்தை தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை
ஜாதி, மதத்தை வைத்து இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்து பட்டதுபோதும்; அந்த சாக்கடை அரசியல் நமக்கு வேண்டாம்.". கே. அண்ணாமலை
வீ த லீடர்ஸ் அமைப்பின் மொபைல்போன் செயலியை அண்ணாமலை வெளியிட்டார். மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மாநாடு முடிந்த பின் பொறுப்பாக சேர்களை அடுக்கி வைத்து விட்டு கீழே இருந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட காட்சிகளும் நிகழ்ந்தது ஜாதி,மதங்களைக் கடந்து ஒரு தமிழனாக ஒரு இந்தியனாக அரசியல் செய்ய கே.அண்ணாமலை அழைப்பு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. "யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறும். சரியான எண்ணிக்கையும் சரியான தலைவர்கள் வரும்போது நிச்சயமாக கட்சியாக மாறும். இன்று நமக்கு சேவை பணிகள் நிறைய இருக்கு." - அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்
அண்ணாமலை தெளிவாக தான் ஒரு தேசியவாதியும், ஹிந்துத்துவவாதியும். ஆனால், பாஜக மீது தனக்கு கோபம் இருப்பதாகவும், அதிலிருந்து விலகி இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நேரடியாக இன்றைய ஆளும் கட்சியான தவெக முன்னெடுக்கும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்களை மையப்படுத்திய அரசியலுக்கு எதிராக, ஓபிசி அரசியலை கையில் எடுத்திருக்கிறார் கே.அண்ணாமலை.
மாயாவதி ஒரு தேர்தலில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார். ஆனால், ஓபிசி வாக்குகளை ஒருங்கிணைக்காததால், பின்வந்த காலங்களில் அரசியலில் இருந்தே காணாமல் போனார். இதை உணர்ந்த கே.அண்ணாமலை, அந்த அரசியல் அணுகுமுறையை தற்போது கையில் எடுத்திருக்கிறார்.
அவரது கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றிருந்தாலும், தான் "ஜாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவன்" என்பதை உணர்த்தும் விதமாக, எந்தக் கொங்கு சமூகத் தலைவரையும் முன்னிலைப்படுத்தாமல், தன்னுடன் பாஜகவில் பயணித்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை முன்னிறுத்தியுள்ளார். இதன் மூலம், தான் ஜாதிய அரசியல் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.
2009-ஆம் ஆண்டு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் கட்சி சுமார் 25 லட்சம் வாக்குகளைப் பெற்றது. எனவே தற்போது பொள்ளாச்சியில் நடத்தியது போல, கே. அண்ணாமலை மற்ற எட்டு மண்டலங்களிலும் வெற்றிகரமாக இதுபோன்ற கூட்டங்களை நடத்தினால், நிச்சயமாக 20 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
தூய சக்தி என்று ஆட்சிக்கு வந்தாலும், லாட்டரிகளையும் மற்றும் குட்காகளையும் முன்னிறுத்தி தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய் மேற்கொண்டு வரும் அரசியல் அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
கே.அண்ணாமலையும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியலையே முன்னிறுத்துகிறார். திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிரான அலையை முதலில் உருவாக்கியது அவர்தான். ஆனால், அதை பாஜக ஏற்காததால் சந்தர்ப்பம் காரணமாக சி. ஜோசப் விஜய் அறுவடை செய்தார். தற்போது, அந்த இடத்தை மீண்டும் கைப்பற்ற கே.அண்ணாமலை களத்தில் இறங்கியிருக்கிறார்.
2031 ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கே அண்ணாமலை சொல்வதன் மூலமாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறார். மறுபுறம், உதயநிதியை முன்னிறுத்தி "திராவிடம்" என்ற அடையாளத்தை மையமாக வைத்து திமுக தனது அரசியல் பயணத்தைத் தொடரும்.
திக்கற்ற நிலையில் இன்னும் யார் யாரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதை விட, யாரையெல்லாம் கட்சியில் இணைத்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை பலப்படுத்துவது என்பதை எடப்பாடி கே பழனிசாமியால் சிந்திக்க இயலாது , மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு அதிமுகவுக்கு இல்லை இன்றைக்கும் எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கி ஆட்சியை அமைப்பதற்குப் போதுமான வலிமையை விஜயை நோக்கி திரும்பியுள்ளது. அதை தவெக நோக்கிப் பயணிப்பதே அவர்களின் சரியான அரசியல் அணுகுமுறையாக இருக்கும்.
எல்லோரும் சுதாரித்துக்கொள்ள வேண்டிய காலமாக தற்போதைய தமிழ்நாடு அரசியல் களம் மாறியுள்ளது. அண்ணாமலை தற்போது பிற்பட்ட 64 ஜாதி சமூகத்தின் கூட்டுத் தலைவராக காலம் தற்போது உறுவாக்குகிறது.





























கருத்துகள்