தமிழ்நாடு அரசு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) இயக்குனரான ஏ. அருண், ஐபிஎஸ் தமிழ்நாடு காவல் பயிற்சிக் கல்லூரியின் இயக்குனராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
DVAC-ன் கூடுதல் இயக்குநர் பொறுப்பு தற்போதைய DVAC ஐஜி சி. மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் சென்னை காவல்துறை ஆணையரான ஏ. அருண், ஐபிஎஸ் சமீபத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார் தற்போது அவர் அந்தப் பணியில் இருந்து மாற்றப்பட்டு, தமிழ்நாடு காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் 1998-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தவர், பல்வேறு முக்கிய பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இவர் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, DVAC-யின் கூடுதல் இயக்குநர் பொறுப்பு தற்போதைய DVAC ஐஜி சி. மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே DVAC-யின் சிறப்பு புலனாய்வு பிரிவு-1-ன் ஐஜியாக பணியாற்றினார். இப்போது, அவருக்கு DVAC இயக்குநரின் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது
தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், அருண் ஐபிஎஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால், அவர் DVAC இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, காவல் பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என பேசப்படுகிறது..
இருப்பினும், இந்தப் பணி மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அருண் ஐபிஎஸ் தமிழ்நாடு காவல் பயிற்சிக் கல்லூரியில் புதிய பொறுப்பை ஏற்பார். மகேஸ்வரி ஐஜி DVAC-யின் கூடுதல் இயக்குநர் பொறுப்பில் செயல்படுவார்.
அதேபோல தமிழ்நாட்டில் 3 IAS அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவுகால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் துறை இயக்குநராக கிருஷ்ணன் உன்னி நியமனம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஷில்பா பிரபாகர் நியமனம்
தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குநராக அம்ரித் நியமனம், செய்யப்பட்டனர்





கருத்துகள்