முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

HR & CE சட்டம் பிரிவு 8(2) 1(a) படி 1.4.1960 ற்கு முன் 60 ஆண்டு காலம் அதை அனுபவிப்பவர்கள் நிபந்தனையின்றி பட்டா பெறலாம்.

தமிழ்நாடு வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் ஸ்தலங்கள் மட்டுமல்ல,


அவை தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் கலந்த பொருளாதாரத்தின் உன்னத அடையாளங்களாகும். இத்தகைய போற்றுதலுக்குரிய திருக்கோவில்களின் வருமானத்தில் இருந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் பன்னிரண்டு சதவீதத்தை நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கிறது. இந்தத்தொகை, 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையச் சட்டத்தின் பிரிவு 96-ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 'ஹிந்து சமய மற்றும் அறக்கட்டளைகளின் நிர்வாக நிதி' என்ற கணக்கில் சேர்க்கப்படும். நிதியை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையரே முழுமையாக நிர்வகிக்கிறார். 


HR & CE சட்டம் வகுத்துள்ள விதிகளின்படி, இந்த நிதியைக் கொண்டு துறையின் அன்றாடச் செலவுகள், அலுவலர்கள் மற்றும் பணி ஊழியர்களின் ஊதியங்கள், இதர சலுகைகள் போன்ற நிர்வாக ரீதியான செலவினங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்; வேறு எந்தவொரு காரியத்திற்கும் இதைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை.

ஆனால், கடந்த காலங்களில் இந்த நிர்வாக நிதி அதன் உண்மையான நோக்கத்தை மீறி, சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு இதர காரியங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட புகார்களும்  தொடர்ந்து எதிரொலித்தன. இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி  மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அண்மையில் வழங்கியது. 



டி. ஆர். ரமேஷ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கை (W.P. (MD) No. 34090 of 2025) விசாரித்த மாண்புமிகு நீதியரசர்கள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆர். பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த சட்டப் பிரிவுகளை மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் விளக்கியுள்ளது.

சட்டப்பிரிவு 96 மற்றும் பிரிவு 92(4)- ஐ சுட்டிக்காட்டியுள்ள உயர் நீதிமன்றம், இந்த நிர்வாக நிதியிலிருந்து எடுக்கப்படும் தொகையானது, அரசுத் தரப்பில் இந்தத் துறைக்காக மேற்கொள்ளப்பட்ட உண்மையான நிர்வாகச் செலவுகளை அரசாங்கத்திற்குத் திரும்பச் செலுத்துவதற்கும், அரசிடமிருந்து பெற்ற கடன்களை அடைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கட்டளையிட்டுள்ளது. 


இந்த இரண்டு காரணங்களைத் தவிர, ஆணையருக்குத் தனது விருப்பப்படி இந்த நிதியை வேறு எந்த நோக்கத்திற்காகவும் செலவழிக்க எவ்வித அதிகாரமும், சட்டப்பூர்வமான உரிமையும் கிடையாது என்று நீதிமன்றம் தன் தீர்ப்பில்  கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு ஆன்மீகப் பெருமக்களிடையேயும், கோவில் சொத்துக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தத் தீர்ப்பின் பின்னணியில், தமிழ்நாடு அரசு உடனடியாகச் செயல்பட்டு, கடந்த காலங்களில் சட்ட விதிகளுக்குப் புறம்பாக இந்த நிர்வாக நிதியிலிருந்து திசைதிருப்பப்பட்டு செலவழிக்கப்பட்ட ஒட்டுமொத்தப் தொகையையும் கண்டறிந்து, அதனை மீண்டும் அதே நிர்வாக நிதி கணக்கிலேயே முழுமையாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது. அதுமட்டுமன்றி, தற்போதைய சூழலில் ஹிந்து சமய அறநிலையத்துறை தனது உண்மையான நிர்வாகச் செலவுகளைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான தொகையைக் கோவில்களிடம் இருந்து கட்டணமாகப் பிழிந்தெடுப்பது அநீதியானது என்ற விவாதமும் எழுந்துள்ளது. 

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்,மற்றும் சம்பந்தப்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் உடனடியாகத் தலையிட்டு, தற்போது கோவில்களின் ஆண்டு வருமானத்திலிருந்து வசூலிக்கப்படும் பன்னிரண்டு சதவீத நிர்வாகக் கட்டணத்தை, வெறும் நான்கு சதவீதமாகக் குறைத்து நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பக்தர்களின் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இறைவனின் சொத்து இறைவனின் பணிகளுக்கும், ஆலயப் புனரமைப்புக்கும் மட்டுமே பயன்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் நிலைநாட்டியுள்ளது. கோவில் நந்தவனங்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு என்பது கோவில் நிதியை முறைப்படுத்துதல் சார்பாக கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிதியை வேறு எந்தவொரு பொதுப் பணிகளுக்கும் அல்லது அரசு திட்டங்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. நந்தவனப் பராமரிப்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையிலும், இறைவனுக்குத் தேவையான மலர்கள் கிடைக்கும் வகையிலும் நந்தவனங்களை முறையாகப் பராமரிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளைகளில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு ஏற்கனவே இரண்டு தீர்ப்பு உள்ள நிலையில் தற்போது பல வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.நந்தவனம் மற்றும் கோவில் நிலங்கள் தொடர்பான கூடுதல் வழிகாட்டுதல்கள் கோவில் சொத்துக்கள் மற்றும் கிராம நத்தம் நிலங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பல்வேறு நீதிமன்றங்களின் நிலைப்பாடாக உள்ளது.மதுரையை சேர்ந்த ஜெய வெங்கடேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில்களில் நந்தவனம் அமைக்கப் பட்டு அதில் செடிகள், பூந்தோட்டம் ஆகியவை வைக்கப் பட்டு இருக்கும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு ஓய்வு எடுப்பார்கள்.

ஆனால் ஒரு சில பிரசித்தி பெற்ற கோவில்களில் மட்டுமே நந்தவனம் முறையாக பராமரிக்கப் பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு உள்ளது. பூந்தோட்டங்களில் இருந்து பறிக்கப் படும் பூக்கள் வைத்து கோவிலில் உள்ள சாமிகளுக்கு தரிசனம் செய்யப் படும்.கோவில்களில் உள்ள மரங்கள், குளங்கள் மற்றும் நந்தவனத்தை பாதுகாக்க ஊழியர்களை நியமித்து முறையாக பராமரித்து பக்தர்களுக்கு உபயோகிக்கும் வகையில் வழி வகை செய்ய வேண்டும். நந்தவனங்களை பாதுகாத்தால் கோவில்களில் அதிகப் படியான பக்தர்கள் வந்து செல்வர்.கோவில்களில் உள்ள அரிய வகை மரங்கள் பாதுகாக்கப்படும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இருக்கும் நந்தவனங்களை பராமரித்து, முறையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு பாதுகாவலர்களை நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப் பட்டு உள்ளது. தற்போது அறநிலையத்துறை அமைச்சர் தொகுதி சார்ந்த திருப்பராய்துறை நந்தவனம், ஆக்கிமிப்பை நீதிமன்றம் உத்தரவு இருந்தும் அதன் குத்தகைதரரரான ஸ்ரீ ராமகிருஷ்ண தபோபனம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்,   கரூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நான்கு கோயில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்கள்,சுமார்  ரூபாய் 25,000 கோடி மதிப்புடையவை எனக்கூறப்படும்  நிலங்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளன.இது கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாக பலர் புரிந்துகொள்வது அவசியம்.

 அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; அதில் சம்பளம் அம்பலம் உம்பலம் என பல முறை உண்டு பெரும்பாலானவைதவறான புரிதலில் தவறான விமர்சனம்.

ஆலயங்களில் பணியாற்றுபவர்களுக்கு  பேரரசராலும் இதர ஜமீன்களாலும், சில தர்மகர்த்தாக்களாலும், அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு வருவதற்கு முன்பு பல தனியார் மடாலயம் மற்றும் தேவஸ்தானங்களாலம் மான்யமாக கொடு்கப்பட்ட நிலங்கள் இனாம் மற்றும் இருவார தர்மாசன நிலங்கள் அல்லது பூமிகள்.அவைகள் ஆலயத்திற்கு அறநிலையத்துறை வாங்கியதல்ல, ஆலயத்தில் உள்ள கடவுள் வழிபாடு ஆறுகாலப் பூஜைக்கு தனியார் வழங்கிய நிலங்களை வேற்று மதத்தை சார்ந்த யாரும் வாங்கிக் கொடுத்ததல்ல. அந்த நிலங்களை ஒழுங்குபடுத்த முன்னாள் காங்கிரஸ் முதல்வர் கு.காமராஜர் அரவக்

குறிச்சி.MLA,.சதாசிவம்,காங்கயம்.MLA K.G.பழனிசாமிக் கவுண்டர் ஆகியோர் கொண்ட கமிட்டியை அமைத்தார்.அந்தக் கமிட்டி பரிந்துரையின் படி “ தமிழ்நாடு இனாம் கமிஷன் போர்டு மூலம் ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல் சட்டம் 1963 (Act 30/1963)  ஐ அமல்படுத்தியது 29.01.1964 ல் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 5.2.1964 அன்று அரசாணையாக வெளி யிடப்பட்டது.

மேற்படி சட்டம் பிரிவு 8(2) 1(a) படி 1.4.1960 ற்கு முன் 60 ஆண்டு காலம் அதை குத்தகை முறையில் அனுபவிப்பவர்கள் நிபந்தனையின்றி வருவாய் வரி செலுத்த பட்டா பெறலாம். 1.4.1960 க்கு முன் 12 ஆண்டு காலம் அனுபவித்திருந்தால் நிபந்தனையுடன் பட்டா பெறலாம்.

அதற்காக மண்டல வாரியாக தமிழ்நாடு அரசு “Special Settlement Thasildar” எனும் ASO “ நியமித்து முறையான விசாரணை நடத்தி ரயத்துவாரி பட்டாக்களை வழங்கியது. பட்டா பெற்ற விவசாயிகள் பெரும் பொருட்செலவில் அதை மராமரத்து செய்து 50 ஆண்டுகளுக்கு மேலாக சர்வில்லங்க சுத்தியாய் அனுபவித்து வருகிறார்கள்.

அவைகள் கோவில் உபயம் மற்றும் மானியம் இனாம் நிலங்கள் அல்ல. முந்தைய தி.மு.க.அரசு கோவில் நிலத்தோடு சேர்த்து பட்டா பெற்ற முந்தைய இனாம் நிலங்களையும்”0”செய்து பத்திரப் பதிவை நிறுத்தியிருந்தது. அதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.அதை நீக்கி விவசாயிகளின் உரிமையை காப்பாற்றியுள்ளது. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த அரசாணையால்  கோயமுத்தூர் ,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டுமென பல கோரிக்கை 

இனாம் வழக்குகளை 50 ஆண்டுகளாக நடத்தி வரும் நபர்கள் கருத்து 

இருந்த போதிலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இதை அனுமதிக்கிறதா என்பதே எழுவினா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...