2026 மே மாதத்தில் தமிழ்நாடு அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் Public Prosecutor ஆக மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் குற்றவியல் வழக்குகளை கவனிப்பதற்காக கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் Public Prosecutor (அரசு குற்றவியல் வழக்கறிஞர்) ஆக சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15.05.2026 அன்று வெளியிடப்பட்ட G.O.(D) No.660 அரசாணையின் மூலம், மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் குற்றவியல் வழக்குகளை கவனிப்பதற்கான Counsel for Government of Tamil Nadu (Criminal Side) ஆக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் 07.07.2026 அன்று அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தற்போது புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 09.07.2026 தேதியிட்ட G.O.(Ms) No.225 அரசாணையின் மூலம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) சட்டத்தின் பிரிவு 18 (1)- ன் கீழ், சென்னை உயர்நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து, மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யனை சென்னை உயர்நீதிமன்றத்தின் Public Prosecutor ஆக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
எனவே, மே மாதத்தில் வெளியான நியமனமும் தற்போதைய ஜூலை மாத நியமனமும் ஒரே தன்மையிலானவை அல்ல. மே மாதத்தில் அவர் தமிழ்நாடு அரசின் குற்றவியல் வழக்குகளுக்கான அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது BNSS சட்டப்பிரிவு 18(1)-ன் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தின் Public Prosecutor ஆக சட்டப்பூர்வ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த புதிய நியமனம் ஆளுநரின் உத்தரவின்படி பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்