முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய12 வது கைத்தறி தினம்

தேசத்தின் உயிர்நாடி விவசாயம்  அடுத்தபடியாக நெசவு மானம் காக்கும் மாண்பு கொண்ட  கைத்தறித் தொழிலையும், நெசவாளர் பெருமக்களின் உழைப்பையும்



போற்றும் வகையில்.  1905 ஆம் ஆண்டு துவங்கிய சுதேசி இயக்கத்தின் தொடர்ச்சியாக,  2015 ஆம் ஆண்டு முதல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது 12 ஆவது தேசிய கைத்தறி தினம் இன்று   "தேய்ந்த மிதிக்கு தெரிந்திருக்கும் நெய்தவன் சேய்கள் வளர்ந்த செழிப்பு"...... இதன் .விளக்கம்:

"தேய்ந்த மிதிக்கு தெரிந்திருக்கும்" – நெசவு செய்யும்போது தறியின் மிதிக்கட்டையை அதாவது பெடலை கால்களால் மாறி மாறி மிதித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நெசவாளர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தத் தறியிலேயே அமர்ந்து கால்களால் மிதித்து மிதித்து, அந்த மரக்கட்டையே தேய்ந்து போயிருக்கும். காஞ்சிபுரம் சென்றால் கால் ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம் என்பதன் அர்த்தமும் இதுதான்,


"நெய்தவன் சேய்கள் வளர்ந்த செழிப்பு" – அந்த மிதிக்கட்டை சும்மா தேயவில்லை; தன் பிள்ளைகளை அல்லது சேய்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும், அவர்கள் பசி இல்லாமல், செழிப்பாக வளர வேண்டும் என்பதற்காக அந்தத் தந்தை சிந்திய வியர்வையாலும் உழைப்பாலும் தேய்ந்தது.

நெசவாளர்களின் கடின உழைப்பையும், ஒரு தந்தை தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தன் உடலையும் தறியையும் தேய்த்துக் கொள்ளும் தியாகத்தையும் இந்த இரண்டு வரிகள் உணர்வு கலந்து சொல்கிறது அதேபோல் திருவள்ளுவர் "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு." என்கிறார். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம்  கொண்டாடப்படுகிறது. சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், நாட்டின் பாரம்பரியமான கைத்தறித் தொழிலையும், நெசவாளர்களின் உழைப்பையும் கௌரவிக்கும் நோக்கிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.  முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி அன்று  அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. சுதேசி தொடர்பு: 1905 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 7 அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவு கூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.  பொருளாதாரம்: நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் லட்சக்கணக்கான நெசவாளர்களுக்கு கைத்தறி துறை வாழ்வாதாரம் அளிக்கிறது.  பாரம்பரியமிக்க கைத்தறித் தயாரிப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது."Vocal for Local"  எனும் உள்நாட்டுப் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்) மற்றும் "Make in India" திட்டங்களை ஊக்குவிக்கிறது. நெசவாளர்களின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தவும், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் வழிவகுக்கிறது.1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள் கொல்கத்தாவில் முறையான 'சுதேசி இயக்கம்' தொடங்கப்பட்டதில் வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து, இந்தியப் உள்நாட்டுத் தயாரிப்புகளை, குறிப்பாக கைத்தறி ஆடைகளை ஆதரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், இந்திய அரசு 2015 இல் ஆகஸ்ட் 7 ஐ தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது, முதலாவது தேசிய கைத்தறி தினத்தை 2015, ஆகஸ்ட்மாதம் 7 ஆம் தேதியில் பிரதமர் நரேந்திர மோடி  சென்னையில் தொடங்கி வைத்தார். நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடும் லட்சக்கணக்கான நெசவாளர்களின் பங்களிப்பைப் பாராட்டுதல். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, 'உள்நாட்டுத் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுப்போம்' (Vocal for Local) என்ற கொள்கையை முன்னெடுத்தல். இந்தியாவின் 5000 ஆண்டுகள் பழமையான கலாச்சார நெசவுப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தல். என்பனவாகும் நமக்கு இன்று வாசிக்கக் கிடைத்த முன்னால் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் எழுதிய கடைசித் தறியில் கண்டாங்கி சேலை" நூல் என்பது தமிழ்நாடு புகழ்பெற்ற கைத்தறி பாரம்பரியமான செட்டிநாட்டு மற்றும் சின்னாளப்பட்டி கண்டாங்கி சேலைகளின் கதையையும், நெசவாளர்களின் வாழ்வியலையும் பேசும் தலைப்பாகும். மேலும் இது நேர்மையான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உ. சகாயம் எழுதிய நூல் காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாகத் தயாரிக்கப்படும் கண்டாங்கி சேலைகள், அதன் தடித்த பருத்தி இழை, தனித்துவமான கட்டங்கள் (Checks) மற்றும் துடிப்பான வண்ணக் கரைகளுக்கு பெயர் பெற்றவை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, செட்டிநாடு பகுதிகளில் இச்சேலைகள் பாரம்பரியமாக கைத்தறியில் நெய்யப்படுகின்றன.சிறப்புப் பெயர்க் காரணம்: சேலையின் உடல் முழுவதும் காணப்படும் பெரிய கட்டங்கள் அல்லது கோடுகளே 'கண்டாங்கி' என்ற பெயரைப் பெறக் காரணமாக அமைந்தன.புவிசார் குறியீடு (GI Tag): இக்கலை மரபு அழியாமல் காக்க காரைக்குடி தறி கூட்டுறவுச் சங்கம் எடுத்த முயற்சியால் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.






இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்து, சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.  சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி பகுதியில் வாழும் நெசவாளர்களால் இது பிரத்யேகமாக நெய்யப்படுகிறது. இதற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கியுள்ளது. தடிமனான பருத்தி நூல் (Coarse Cotton), பெரிய கட்டங்கள் (Checks) மற்றும் பிரகாசமான வண்ணக் கரைகளைக் (Borders) கொண்டு இது நெய்யப்படுகிறது போதிய வருமானம் இல்லாததால் தற்கால நெசவாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். "கடைசித் தறி" என்ற வார்த்தை, இந்த பாரம்பரிய கலை மறைந்துவிடக் கூடாது என்ற ஆதங்கத்தையும், அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...