சமூக வலைத்தளங்களில் கட்டணச் சந்தா மூலம் ஆபாச உள்ளடக்கம் மற்றும் பேச்சுக்களைப் பகிர்ந்ததாக, சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால்
கோயமுத்தூர் தர்ஷா குப்தா மற்றும் திருச்சிரப்பள்ளி சாதனா உள்ளிட்ட 12 குற்றவாளிகள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய காவல்துறை தீவிரம்
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதன் பேரில் காவல்துறை ஆய்வாளர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான தனிக் குழு விசாரணை நடத்தினர். தொடர்ந்து கண்காணிப்பில் சைபர் கிரைம் காவல்துறை
இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உள்ளடக்கங்கள், கட்டண அடிப்படையிலான தொடர்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகாரைப் பெற்ற சேலம் சைபர் கிரைம் காவல்துறை சமூக வலைதளக் கணக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், ஆபாசமாகச் சித்தரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, சம்பந்தப்பட்ட சமூக வலைதளக் கணக்குகளுடன் வாடிக்கையாளர்களாக இணைந்தவர்களின் விவரங்களையும் காவல்துறை சேகரித்தனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் அஜீத் தாக்கோர் (வயது 29), ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி சேலம் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்ததில், சமூக வலைதளங்களில் சிலர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதாகவும், குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி வாடிக்கையாளராக இணைந்தால் தனியாகப் பேசலாம், பழகலாம் என அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவர்களில் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, சூரிய பிரபா, ஹனி சென்னை, அபிநயா சித்ரா, பிரியங்கா ராஜ், சரண்யா, சந்தோஷ், யூடியூப்பில் ஐஸ்வர்யா சிவா, திவி திலகவதி, தீபா கரூர், சிந்தசேகர் ஆகியோர் லைவில் வந்து சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுமாறு கூறுகின்றனர். அதன் பிறகு ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும்,பேசுவதாகக் கூறுகின்றனர். இவ்வாறு பணத்தை பெற்று மோசடி செய்கின்றனர்.
இதன்மூலம் மாதம் தோறும் பல லட்சங்களை குற்றம் செய்து சம்பாதிக்கின்றனர். இவர்களின் நடவடிக்கை இளைஞர்களை சீரழிக்கிறது. எனவே, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை தடை செய்ய வேண்டும். எனக் கூறியிருந்தார். இந்த புகார் மனுவை பெற்ற சைபர் கிரைம் காவல்துறை நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





கருத்துகள்