சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டம் கே.ஆர்.தோப்பூர் மின் பகிர்மான நிலைய உதவி மின் பொறியாளர்
கவிதா, (வயது 43). பால் பண்ணையை சேர்ந்தவர். மின்சார அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்த கயிறு திரிக்கும் தொழிலாளி, அவரது கூடத்துக்கு புதிம மின் இணைப்புக் கோரினார். அதற்கு கவிதா, 7,000 ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டார். லஞ்சம் தர விரும்பாத தொழிலாளி, சேலம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் நேரில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் திட்டமிட்டு பொறி வைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், புகார்தாரரிடம் அரசு சாட்சிகள் முன்னிலையில் லஞ்சப் பணத்தை உதவி மின் பொறியாளர் கவிதா பெற்றுக்கொண்டபோது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதுடன், சம்பந்தப்பட்ட ஆவணங்களும் ஊழல் தடுப்புத் துறையினரால் களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மின் அலுவலகத்தில் வைத்து தொழிலாளி பணம் வழங்கிய போது , கவிதா பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த, நல்லம்மாள் தலைமையிலான ஊழல் தடுப்புப் படையினர் கவிதாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் சேர்த்தனர்

கருத்துகள்