தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்த பிறகு மூடப்பட்ட 717 டாஸ்மாக் மது விற்பனைக் கடைகளின் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு தவெக அரசு அமைந்த பிறகு, பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் ஸ்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகிலிருந்த 717 டாஸ்மாக் மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே. விக்னேஷ் முழுமையான முகவரிகள் அடங்கிய 38 பக்கங்கள் கொண்ட அதிகாரப்பூர்வமான பட்டியலை வெளியிட்டார் அதில் .மண்டலம் வாரியாக மூடப்பட்ட கடைகளின் விவரங்கள் மதுரை மண்டலம்: 270-க்கும் மேற்பட்ட கடைகள் (அதிகபட்சம்) கோயம்பத்தூர் மண்டலம்: 179 கடைகள் திருச்சிராப்பள்ளி மண்டலம்: 84 கடைகள் சென்னை மற்றும் சேலம் மண்டலம்: தலா 82 கடைகள் முக்கியமாக வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள் மூடப்பட்டன. கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 186 கடைகள் மூடப்பட்டன. பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 255 கடைகள் மூடப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களின் நலன் கருதி பல முக்கிய வருவாய் தரும் கடைகளும் அகற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மண்டல வாரியாக மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை
அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் அதிக கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் மாவட்ட வாரியான எண்ணிக்கையில்: தூத்துக்குடி: 63 கடைகள், விருதுநகர்: 42 கடைகள், மதுரை தெற்கு: 39 கடைகள், திருநெல்வேலி: 33 கடைகள், இராமநாதபுரம்: 29 கடைகள், திண்டுக்கல்: 25 கடைகள்
டாஸ்மாக் மது விற்பனைக் கடைகளில் மதுப் பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், விதிமீறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மக்கள் நலனே முக்கியம் என்பதால், அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தந்த முதன்மையான மதுக் கடைகளும் இந்த 717 பட்டியலில் சேர்க்கப்பட்டு மூடப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள இந்த 38 பக்கங்கள் கொண்ட முழுமையான முகவரிப் பட்டியலை டாஸ்மாக் மது விற்பனை நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இதுபோல படிப்படியாக மது முழுமையாக தடை செய்தால் மக்களுக்கு நன்மை, மது விற்பனை தொடர்வது அரசுக்கு வருவாய் வாக்களித்த மக்களுக்கு தீமை






கருத்துகள்