முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டையில் 80 வது சுதந்திர தினம் தேசியக் கொடியை ஏற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய்

தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டையில் 80 வது சுதந்திர தினம் தேசியக் கொடியை ஏற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய்



தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சராக தேர்வான பின் முதல்முறையாக சி. ஜோசப் விஜய் அங்கு நடைபெறும் 80-வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தலைமைச் செயலகம் சார்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வெளியிடப்பட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் (தலைமைச் செயலகம்) நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் காலை 9:00 மணிக்கு தேசியக் கொடியேற்றி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர தின உரையாற்றுவார்.

அதனைத் தொடர்ந்து தகைசலான தமிழர் விருதுகள் மற்றும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்குவார்.விழா நிகழ்ச்சி நிரல் விவரங்கள்காலை 8:55 மணி: முதலமைச்சர் கோட்டை கொத்தளத்திற்கு வருகை தருதல்.காலை 9:00 மணி: தேசியக் கொடி ஏற்றிவைத்தல் மற்றும் மலர் தூவுதல்.காலை 9:05 மணி: காவல்துறை மற்றும் முப்படை அணிவகுப்பு மரியாதை ஏற்பு.காலை 9:15 மணி: சுதந்திர தின உரை நிகழ்த்துதல்.காலை 9:45 மணி: அரசின் பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்குதல்.காலை 10:15 மணி: கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிறைவு விழாதமிழ்நாடு அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைத் தொடக்கத்தில் பாடுவது கட்டாயம் என்று முதலமைச்சர்  சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சுதந்திர தினம் உள்ளிட்ட அனைத்து விழாக்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் . அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.   அடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுதந்திர தினவிழாக் கொடியேற்ற நிகழ்ச்சிசுதந்திர தின விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடல்  சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை

மத்திய அரசின் “Har Ghar Tiranga Campaign 2026” அறிவுறுத்தலின்படி, தேசியப் பாடலான “வந்தே மாதரம்” பாடலின் 150-வது ஆண்டு நினைவையொட்டி, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவது மற்றும் இசைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு, மதுரை கிளை, தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல மையங்கள், மாவட்ட நீதித்துறை அலகுகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச நீதித்துறை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாக்களில் ‘வந்தே மாதரம்’ இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளின் வரிசை  1.தேசியப் பாடல் – “வந்தே மாதரம்” பாடல் / இசை 2.தேசியக் கொடி ஏற்றுதல் 3.தேசிய கீதம் என்ற வரிசையில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ( REGISTRAR GENERAL ) 

சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர்  (REGISTRAR GENERAL) அவர்கள் உடனடியாக CIRCULAR - ஜ திருத்தி தமிழ்தாய் வாழ்த்து பாடலோடு சுதந்திர தின விழாவைத் துவங்க வழக்கறிஞர் சங்கம் வேண்டுகோள் !


சுதந்திர தின விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இடம்பெற வேண்டும் என MMBA கோரிக்கை !

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் மற்றும் இசை இடம்பெற வேண்டும் என, மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் (MMBA) சார்பில் பதிவாளர் பொதுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள R.O.C.No.1162-A/2026/D1/D4/F/J/PROTOCOL/D1(MB) சுற்றறிக்கையில்,  சுதந்திர தின விழாவின் நிகழ்ச்சி வரிசையாக: ‘வந்தே மாதரம்’  தேசியக் கொடி ஏற்றுதல், தேசிய கீதம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் இடம்பெறவில்லை என MMBA தனது பிரதிநிதித்துவத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலாவது நிகழ்வாகப் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு G.O.Ms.No.531, Public Department, dated 12.08.2026 மூலம் உத்தரவிட்டுள்ளதாகவும் MMBA குறிப்பிட்டுள்ளது.

மேலும், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ என்பது தமிழ்மொழி, பண்பாடு மற்றும் தமிழகத்தின் அடையாளத்துடன் தொடர்புடைய முக்கியமான மரியாதைக்குரிய பாடல் என்றும், தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலுக்கான மரியாதைக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும் MMBA தனது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

தேசியத்திற்கான மரியாதையும், தமிழ்மொழி மற்றும் தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்திற்கான மரியாதையும் சமமான கண்ணியத்துடன் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள MMBA, சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலை இடம்பெறச் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.                          இந்த நிலையில் சென்னையில் 30 கோவில்களில் நடைபெரும் சுதந்திர தின விழாவில் : அமைச்சர்கள் பங்கேற்பு  



ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள 30 முக்கியக் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொது சமபந்தி விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில்  ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், வடபழனி முருகன் கோவிலிலும், நீர்வளத்துறை அமைச்சர், என.ஆனந்த் வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலிலும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா, மயிலாப்பூர் மாதவபெருமாள் கோவிலிலும், அமைச்சர் கீர்த்தனா கபாலீஸ்வரர் கோவிலிலும், அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும், அமைச்சர் நிர்மல்குமார் பாரிமுனை காளிகாம்பாள் கோயிலிலும்,  அமைச்சர் டி.கே.பரபு பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலிலும்  பங்கேற்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...