முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

80 ஆவது சுதந்திர தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமரும், சென்னை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் முதல்வரும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் இன்று 15 ஆகஸ்ட் 2026 டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வரலாற்று சாதனை





சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பாக நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த முறை விழா முழுவதும் 'வந்தே மாதரம்' மையக் கருப்பொருளாக இருந்தது பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றியவுடன், இந்திய விமானப்படையின் இரு Mi-17 ஹெலிகாப்டர்கள் செங்கோட்டை மற்றும் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மலர்களைத் தூவி மரியாதை செலுத்தியது, 21 குண்டுகள் முழங்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட '105mm லைட் ஃபீல்ட்' துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்கப்பட்டு தேசியக் கொடிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது,










இந்த ஆண்டு விழா "வளர்ந்த இந்தியா 2047-க்கான யுவ சக்தி" (Youth Power for Viksit Bharat) என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது சக்தி கி சப்த தாரா எனும் 7 சீர்திருத்தங்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க உற்பத்தி, விவசாயம், தொழில்நுட்பம், கதி-சக்தி, ரக்ஷா சக்தி, பசுமைப் பொருளாதாரம் மற்றும் இந்தியாவின் மென் ஆற்றல் ஆகிய 7 முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் உறுதியளித்தார் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியைக் காண அழைக்கப்பட்டிருந்தனர் Greater காஷ்மீர் 2,500 NCC கேடட்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து 'வந்தே மாதரம்' என்ற வார்த்தையை மனித சங்கிலி வடிவில் உருவாக்கிக் காட்டினர்.


அதேபோல் இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழ்நாட்டில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.




முதலமைச்சராகப் பொறுப்பேற்று அவர் கொடியேற்றும் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு கொடியேற்றுவதற்கு முன்பாக, தமிழ்நாடு காவல்துறையினரின் கம்பீரமான சிறப்பு அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதலமைச்சரின் பெற்றோர்களான திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் முன்னிலையில் கலந்துகொண்டனர்.






கொடியேற்றத்தைத் தொடர்ந்து சாதனை படைத்தவர்களுக்கு தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது மற்றும் கல்பனா சாவ்லா விருது போன்ற பல்வேறு மாநில அரசு விருதுகளை முதல்வர் வழங்கி கௌரவித்தார். தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கு 
 தகைசால் தமிழர் விருது வழங்கியது அவர் முன்னாள் நாடாளுமன்ற மக்களவை மூத்த உறுப்பினர்,   கிருஷ்ணசாமியின் மாமனார் வினாயகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், 










கிருஷ்ணசாமியின் சம்பந்தி  பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ். கிருஷ்ணசாமி மகள் டாக்டர் சௌமியா அனபுமணி பாமக சடடமன்றக் கட்சித்தலைவர்  கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் தற்போது நடாளுமன்ற மக்களவைஉறுப்பினர், மருமகன் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போது நடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இவர் தகைசால் தமிழர் விருதுக்கு தகுதியான தலைவர் என்பதில் மாற்றில்லை. தேசியக் கொடியை ஏற்றிய பின் உரையாற்றிய


முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், "மக்களை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவது கூட உண்மையான விடுதலைக்குச் சமமானது தான்" என தனது உரையில் குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் 1974-ல் மத்திய அரசுடன் போராடிப் பெற்ற உரிமையின் படி, சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் வழக்கம் உருவானது. அந்த வரிசையில், சென்னை கோட்டையில் கொடியேற்றும் 7-வது தமிழ்நாடு முதலமைச்சர் என்ற பெருமையை சி. ஜோசப் விஜய் பெற்றுள்ளார்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த புலனாய்வு மற்றும் பொதுச்சேவைக்காக தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்குத் தமிழ்நாடு முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு 8 கிராம் தங்கப் பதக்கமும், ரூபாய் . 25,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் புலனாய்வில் சிறந்து விளங்கியோர்: சி. ஜெயஸ்ரீ, என். தமிழரசி, கே. அழகராஜ், என். தனுசியா, எஸ். லதா, எம். சித்ரா, ஆர். வினிதா, ஜி. மகாலட்சுமி, வி. கோமதி மற்றும் எஸ். விஜயகுமார்.பொதுச்சேவையில் சிறந்து விளங்கியவர்களில் வி. சசிமோகன் (DIG), டி. சண்முகபிரியா (SP), சி.எம்.ஆர். மணிமொழியன், கே. மதன் மோகன் மற்றும் எம். ரவிக்குமார். ஆகியோர் ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...