முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

அனைத்து மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான மாநில அளவில் அனைத்​துக் கட்​சிகளின் நாடளுமன்ற உறுப்பினர்கள் கலந்​தாய்​வுக் கூட்​டம் முதல்​வர் சி. ஜோசப் விஜய் தலை​மை​யில் சென்​னை​யில் இன்று நடை​பெற்றது

 கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் அழைப்பு விடுத்த நிலையில், “அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என திமுக நிபந்தனை விதித்தது.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடூ அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை.

நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று திமுக-வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்குமில்லை.


முறையற்ற தொகுதி மறுவரையறையால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கெதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே திமுக-வும், எங்கள் தலைவரும் தான் என்பதை நாடறியும்.

சென்னையில் இதற்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மாநிலங்களையும் ஓரணியில் திரட்டி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, இந்த விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதிக்க வைத்தோம்.



இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் இருந்தபோதே, “தேர்தல் கூட எங்களுக்குப் பிறகுதான்; தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்திருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பது தான் எங்களது முதல் பணி” எனப் பிரகடனம் செய்தோம், 

எனவே, இவற்றின் அடிப்படையில், தற்போதைய அரசு ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை.



ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழ்நாடு உள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழ்நாடு அரசிடம் திமுக முன்வைக்கிறது.

புதுக் கூட்டாளியான காங்கிரஸின் மனம் புண்படும் என்பதால் மேகேதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது.

தொகுதி மறுவரையறையின் காரணமாக தமிழ்நாட்டு பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாகக் திமுக இருக்கும். அதேநேரத்தில், இன்றைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகேதாட்டு அணையைத் தடுப்பதும் மிக மிக முக்கியமானவை.

தமிழ்நாடு ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. இந்த நேரத்தில் தவெக அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் திருத்​தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிப்​ப​தாக தகவல்​கள் வெளி​யான நிலை​யில், தொகுதி மறு​வரையறை பணி​கள் குறித்து விவா​திப்​ப​தற்​காக தமிழ்நாடு நாடாளுமன்ற ஆலோ​சனைக் கூட்​டத்​துக்கு முதல்​வர் சி. ஜோசப் விஜய் அழைப்பு விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட அறி​விப்​பில், “மத்​திய அரசால் மேற்​கொள்ள உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ள தொகுதி மறு​வரையறை பணி​கள் மற்​றும் அதனால் தமிழகத்​துக்கு ஏற்​படும் தாக்​கங்​கள் குறித்​து, மாநில எம்​.பி.க்​களின் கலந்​தாய்​வுக் கூட்​டம் (சனிக்​கிழமை) மதி​யம் 3 மணிக்கு சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் நடத்​தப்பட உள்​ளது. இதற்கு முதல்​வர் தலைமை வகிப்​பார்.

இதற்​கான அழைப்​பிதழ் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தின் மூலம் தமிழ்நாடு சார்ந்த அனைத்து நாடாளுமன்ற மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை உறுப்​பினர்​களுக்கும் அனுப்​பப்​பட்டுள்ளது” என கூறப்​பட்​டது.

தமிழ்நாடு

புதிய பாராளுமன்ற தொகுதிகள் (உத்தேசமாக) 

1) திருத்தணி, 2) திருவள்ளூர், 3) சென்னை வடக்கு, 4) சென்னை கிழக்கு, 5) சென்னை மத்திய, 6) சென்னை தெற்கு, 7) சென்னை மேற்கு, 8) தாம்பரம், 9) செங்கல்பட்டு, 10) காஞ்சிபுரம், 11) வேலூர், 12) திருப்பத்தூர், 13) ராணிப்பேட்டை, 14) திருவண்ணாமலை,

15) வந்தவாசி அல்லது ஆரணி, 16) திண்டிவனம், 17) விழுப்புரம், 18) கள்ளக்குறிச்சி, 19) கடலூர் 20) சிதம்பரம், 21) ஓசூர், 22) கிருஷ்ணகிரி, 23) தர்மபுரி, 24) சேலம், 25) மேட்டூர், 26) ராசிபுரம், 27) நாமக்கல், 28) ஈரோடு, 29) கோபிசெட்டிபாளையம், 30) திருப்பூர், 31) தாராபுரம் அல்லது பழனி, 32) பொள்ளாச்சி, 33) கோயம்பத்தூர் கிழக்கு, 34) கோயம்பத்தூர் மேற்கு, 35) நீலகிரி 36) கரூர், 37) பெரம்பலூர், 38) அரியலூர் அல்லது லால்குடி, 39) திருச்சிராப்பள்ளி, 40) தஞ்சாவூர், 41) கும்பகோணம், 42) மயிலாடுதுறை, 43) நாகபட்டினம், 44) திருவாரூர், 45) புதுக்கோட்டை, 46) சிவகங்கை, 47) இராமநாதபுரம், 48) தூத்துக்குடி, 49) திருச்செந்தூர், 50) திருநெல்வேலி, 51) நாங்குநேரி அல்லது கன்னியாகுமரி, 52) கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில், 53) தென்காசி, 54) சிவகாசி, 55) விருதுநகர், 56) தேனி, 57) மதுரை கிழக்கு, 58) மதுரை மேற்கு, 59) திண்டுக்கல், ஆகும். தொகுதி மறுவரையறை - தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்  முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது  ஆனால் தவெக சார்ந்த கூட்டணிக் கட்சிகளான 

காங்கிரஸ் கட்சி சார்பாக  ப.சிதம்பரம் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 

காங்கிரஸ் கட்சியின் 12 எம்.பி-க்களும் பங்கேற்பு 

விசிக - 2, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மார்க். கம்யூனிஸ்ட் - 2 எம்.பி.க்கள் பங்கேற்பு 

தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க எம்பிக்கள் பங்கேற்கவில்லை.. 

தி.மு.க.வின் 30 எம்.பிக்கள் உட்பட 38 எம்.பிக்கள் பங்கேற்கவில்லை 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், தேமுதிக எல்.கே.சுதீஷ் பங்கேற்கவில்லை 

டெல்லியில் இருப்பதால் பங்கேற்க இயலவில்லை -என தேமுதிக உறுப்பினர் எல்.கே.சுதீஷ் தகவல் 

வெளிநாட்டில் இருப்பதால் கூட்டத்திற்கு வர முடியவில்லை -என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்  தகவல் 

அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி நிர்மல் குமார், ராஜ்மோகன் பங்கேற்பு

மடைமாற்றும் அரசியலுக்கு துணை போக மாட்டோம் - என அ.தி.மு.க தரப்பில் தகவல் 

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 57 எம்.பி.க்களில் 19 பேர் கூட்டத்தில் பங்கேற்பு 

தாக்கல் செய்யப்படாத மசோதாவிற்கு எதற்கு கூட்டம்? - என அ.தி.மு.க தரப்பில் கேள்வி எழுப்பினர், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம கட்சிகளின் மொத்தம் 37 எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகளின் 19 எம்.பி.க்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில்  தமிழகத்தின் மொத்தம் 57 எம்.பி.க்களில் 37 பேர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்காங்கிரஸ் கட்சியின் 12, விசிக 2, சிபிஐ2, சிபிஎம் 2, மதிமுக-1, முஸ்லிம் லீக்-1 எம்.பி.க்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் காங்கிரஸ் கட்சியின் சுதா எம்.பி.கர்நாடகாவில் கட்சி நிகழ்ச்சியில் இருப்பதால் பங்கேற்க இயலவில்லை எனப் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் எடுத்த முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...