தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத் தலைவராக மணிப்பூர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்.
தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத் தலைவராக மணிப்பூர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம். தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் மறுசீரமைப்பு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தை மறுசீரமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை G.O. (Ms.) No.202, சட்டத்துறை (LC), நாள்: 07.08.2026 என வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சட்ட ஆணையத்தின் தலைவராக நீதியரசர் டி. கிருஷ்ணகுமார் மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியை தலைவராகவும்,
முழுநேர உறுப்பினர்களாக நீதியரசர் RMT. டீக்கா ராமன் – சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மற்றும் T.K. ராமச்சந்திரன், I.A.S. – முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் அருணகிரி – முன்னாள் சட்டத்துறை செயலாளர் உடன்
பகுதி நேர உறுப்பினர்களாக T.மோகன் தாஸ் முன்னாள் மாவட்ட நீதிபதி, மற்றும் R. கோவிந்தராஜன் முன்னாள் மாவட்ட நீதிபதி, மற்றும் சட்டத்துறைச் செயலாளர் நிலையில் உள்ள அரசு அதிகாரி, சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்–செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சட்ட ஆணையத்தின் முக்கியப் பணிகளாக சட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குதல், சமூகப் மற்றும் பொருளாதார சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குதல், மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மத்திய–மாநில அரசு உறவுகள் தொடர்பாக பரிந்துரைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.
மேலும், நீதித்துறை நிர்வாக சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கான பரிந்துரைகள், தமிழ்நாட்டில் அமலில் உள்ள மாநில மற்றும் மத்திய சட்டங்களை சீரமைப்பது தொடர்பான ஆலோசனைகள், அரசு பரிந்துரைக்கும் சட்டம் மற்றும் நீதித்துறை நிர்வாகம் தொடர்பான விவகாரங்களை பரிசீலித்தல் ஆகியவையும் ஆணையத்தின் பணிகளில் அடங்கும்.
ஆணையத்தின் தலைவர், முழுநேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களின் பதவிக்காலம், தலைவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது


கருத்துகள்