பெங்களூரில் தங்கிய வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகள் கைது
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 'ஆபரேஷன் முக்தா' என்ற பெயரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். ஒயிட்பீல்டு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்ட இந்த சோதனையில் போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.ஒயிட்பீல்டு பகுதியில் 62 பேரும், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 43 பேரும் பிடிபட்டவர்களிடமிருந்து மேற்கு வங்காள மற்றும் அசாம் மாநில முகவரிகளைக் கொண்ட போலியான ஆதார் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.பொதுமக்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் தாங்களாக சட்டத்தை கையில் எடுக்காமல், உடனடியாக பெங்களூரு காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதியின்றி தங்கியிருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரித்த்தனர்
பெங்களூரில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 105 வங்கதேசத்தினர் 'ஆப்பரேஷன் முக்தா' என்ற அதிரடி சோதனையானது
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரக் காவல்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் 8, மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்திய இந்த மாபெரும் ஆவண சரிபார்ப்பு
சோதனை மற்றும் கைது பெங்களூரு ஒயிட்பீல்டு (Whitefield) மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி (Electronics City) ஆகிய பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த அதிரடி சோதனையை நடத்தினர்.
சந்தேகத்திற்குரிய 2,944 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில், மொத்தம் 105 வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறியது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 62 பேர் ஒயிட்பீல்டு பகுதியிலும், 43 பேர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியிலும் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வெளிநாட்டு பிராந்தியப் பதிவு அலுவலகத்தில் (FRRO) வில் ஒப்படைக்கப்பட்டவர்கள் விரைவில் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவார்கள் என காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.
முறையான ஆவணங்களை சரிபார்க்காமல் இவர்களுக்கு வீடுகள் மற்றும் தற்காலிக ஷெட்களை வாடகைக்கு விட்ட நில உரிமையாளர்கள் மீதும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக்கொண்டு தார்மீகக் காவலில் ஈடுபடக் கூடாது என எலக்ட்ரானிக் சிட்டி டி.சி.பி நாராயண் எச்சரித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 1,000 வங்கதேசத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கவலை தெரிவித்துள்ளார்.










கருத்துகள்