திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளி முதல்வர் கு.ராமச்சந்திரனுக்கு குடியரசுத் தலைவர் தகை சால் பதக்கம்
திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளி முதல்வருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! கு.ராமச்சந்திரன், த/பெ.குழந்தைவேலு 03.03.2026 ஆம் தேதி முதல் திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளியில் முதல்வராக பணியாற்றுகிறார்.
இதற்கு முன்னர் 13.07.2022 ஆம் தேதி முதல் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சென்னை நகர சிறப்பு பிரிவு-1, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி அயல்பணியாக விருதுநகர் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னர் இதே பிரிவில் சிவகங்கை, புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காவல் துணைக்கண்காணிப்பாளராகவும்,
மேலும் திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவிலும், ஸ்ரீரங்கம் சரக சட்டம் & ஒழுங்கு பிரிவிலும் காவல்துறை உதவி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார், புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் கிராமத்தில் பிறந்து பள்ளி படிப்பை (வாராப்பூர் மற்றும் TELC புதுக்கோட்டை ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், கல்லூரி படிப்பை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் (B.com & M.com) முடித்துள்ளார்.
01.03.1996 ஆம் தேதியன்று நேரடி சார்பு-ஆய்வாளராக பணியில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி மற்றும் 6 மாதம் செய்முறை பயிற்சியை முடித்த பின்னர் திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு காவல்நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். அப்போது மிகச்சிறப்பாக பணிபுரிந்து, கள்ளச்சாராயங்களை முற்றிலுமாக ஒழித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் பணிபுரிந்தும், அப்போதைய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகளின் வெகுமதியையும் பாராட்டையும் பெற்றுள்ளவர் 04.04.2005 ஆம் தேதி காவல்துறை ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று, தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து, பின்னர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஜனவரி 2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டையில் பணியாற்றியும், 18.01.2016 ஆம் தேதியன்று காவல்துறை துணைக்கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிவகங்கை, திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகரில் பணிபுரிந்தும், கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளராக விருதுநகரில் பணிபுரிந்தும்
மொத்தம் 47 அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது லஞ்சம் கேட்டுப் பெற்ற குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து, அவர்களை பொறி வைத்து பிடித்துக் கைது செய்துள்ளார். மேலும் அந்த கால கட்டத்தில் லஞ்சம் வாங்குவதாக சந்தேகிக்கப்படும் சந்தேக அரசு அலுவலர்களின் மீது மொத்தம் 57 கண்காணிப்பு அறிக்கைகள் அனுப்பி நடவடிக்கைகள் எடுத்துள்ளவர் அரசு அலுவலகங்கள் 13 இடங்களில் திடீர் சோதனை நடத்தியுள்ளார். மேலும் 32 பொறி வைப்பு வழக்குகள் இவரது நேரடி மேற்பார்வையில் நடைபெற்றுள்ளது. திடீர் சோதனையின் போது முறையாகக் கணக்கு காண்பிக்கப்படாத பணம் மொத்தம் ரூபாய் .48,23,400/- ம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 104 பொறி வைப்பு வழக்குகள் மற்றும் 22 திடீர் சோதனை வழக்குகளில் எதிரிகளை கைது செய்வதற்கு மற்ற புலன் விசாரணை அதிகாரிகளுக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளார்.
மேற்கண்ட கால கட்டங்களில் இவர் லஞ்சப் புகார் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது முறையே முதல்நிலை விசாரணை, விரிவான விசாரணை மற்றும் பல குற்ற வழக்குகளில் சிறப்பான விசாரணை மற்றும் புலன் விசாரணை மேற்கொண்டு மொத்தம் 123 வரைவு இறுதி அறிக்கைகள் தயார் செய்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞச ஒழிப்புத் துறை இயக்ககத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், இவர் பிப்ரவரி 2018 முதல் ஜூன் 2021 வரை திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரகத்திலும், நுண்ணறிவுப் பிரிவிலும் காவல் உதவி ஆணையராக மிக சிறப்பான முறையில் பணிபுரிந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு அலுவல்களை திறமையாக கையாண்டு உயர்அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
இவர் 1996-1997ஆம் ஆண்டில் பயிற்சியின் போது தங்கப்பதக்கமும் மேலும், இவரது மேற்கண்ட மெச்சத்தகுந்த பணிகளைப் பாராட்டி, இவருக்கு உயர் அதிகாரிகளால் 80 வெகுமதிகள், 40க்கும் மேற்பட்ட நற்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளது. இவரது மெச்சத்தகுந்த பணிகளை பாராட்டி 2009- ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கமும், 2012- ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஆளுநரின் விஜிலென்ஸ் தங்கப்பதக்கமும், 2018- ஆம் ஆண்டில் மெச்சத்தகுந்த பணிக்காக குடியரசுத் தலைவர் பதக்கமும், 2019- ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முதல்வர் பதக்கமும், 2019- ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் உட்கிரிஸ்ட் சேவா பதக்கமும் இவரது சிறப்பான பணிக்கு வழங்கப்பட்டு உயர் அதிகாரிகளின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் மற்றும் வெகுமதிகளையும் பெற்றுள்ளார்.
இவரது செயல்பாடுகள் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் காவல் துறையின் நன்மதிப்பை உயர்த்தும் வகையில் மிகவும் மெச்சத்தகுந்ததாகவும் இருந்துள்ளது.
ஆகையால் கு.ராமச்சந்திரன், முதல்வர் மற்றும் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், காவல் பயிற்சி பள்ளி, திருச்சிராப்பள்ளி முன்னர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை, நகர சிறப்பு பிரிவு-1, சென்னை அயல் பணி விருதுநகர் அவர்களது பணிச் சேவைக்கு 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியக் குடியரசு தலைவரால் 2026 ஆம் ஆண்டிற்குரிய தகைசால் பணிக்கான குடியரசு தலைவர் காவல்துறை பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் காவல்துறை பதக்கம் President's Police Medal தகைசால் பணிக்கான பதக்கம் President's Medal for Distinguished Service - PSM மிகச்சிறந்த மற்றும் நீண்ட கால சாதனை சேவைக்காக வழங்கப்படுகிறதுஅதேபோவ தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் 20 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்விருதுகளில் குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் 3 காவல் அதிகாரிகளுக்கும், மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் 17 காவல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி கு.ராமச்சந்திரன், சென்னை தலைமையிடத்து க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் எஸ்பி ஜி.விஜய் ஆனந்த், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் 9-ம் அணி உதவி தளவாய் சி.குமார் ஆகிய 3 அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.













கருத்துகள்